Wednesday, 11 March 2026

திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்-112: திருக்குறளில் அரசியல்:

திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்-112:    திருக்குறளில் அரசியல்:
எந்த ஒரு செயல் செய்தாலும், திட்டமிட்டு செய்தால், சிறப்பான விளைவுகளை அறுவடை செய்ய முடியும், அது விவசாயமாக இருந்தாலும் சரி, அரசியலாக இருந்தாலும் சரி. மேலும், அரசியலில் ஆள்பவர்களின் பங்கு முக்கியமானது. அவர்கள் எடுக்கும் ஒவ்வொரு முடிவும், தன்னுடைய நாட்டு மக்களை வளர்ச்சிக்கும் கொண்டு செல்லலாம், படுபாதாளத்திற்கும் தள்ளிவிடலாம். ஆகவே, தெளிவான முடிவnடுத்தல் என்பது ஆட்சியாளருக்கு மிக முக்கியமானதாகவும் அத்தியாவசியமானதாகவும் இருக்கிறது. 
சரி, அரசியல் நிர்வாகத்தில் தெரிந்து செயல்வகையின் முக்கியத்துவத்தைப் பார்ப்போம். 
1. நல்ல நிர்வாகம்:
ஆய்வின் அடிப்படையில் முடிவுகள் எடுத்தல்
திட்டமிடப்பட்ட செயல்பாடுகள்.
2. அரசியலில் நிலைத்தத்தன்மை:
தவறான முடிவுகள் அரசியல் குழப்பத்தை ஏற்படுத்தும்.
3. மக்கள் நம்பிக்கை:
சிந்தித்து செயல்படும் தலைவர் மக்களின் நம்பிக்கையை பெறுவார். 
4. தேசிய முன்னேற்றம்:
நீண்டகால வளர்ச்சி சாத்தியம் 
நல்ல அரசியல் தலைவரின் பண்புகள்:
சிந்தித்து செயல்படுதல்
ஆலோசனை கேட்பது
முன்னோக்கிய பார்வை
மக்களின் நலனை முன்னிலைப்படுத்துதல்
தவறுகளை தவிர்த்தல்
திட்டமிடலின் அடித்தளம்: பொருளாதார மற்றும் விளைவு மதிப்பீடு
இந்த அதிகாரத்தின் முதல் குறளிலேயே ஒரு செயலைத் தொடங்குவதற்கு முன்னால், அதன் நிதிநிலை மற்றும் நீண்டகாலப் பயன்களை ஆராய்வது அவசியம் என்பதை முதல் குறளிலேயே சொல்கிறார். அரசியல் நிர்வாகத்தில், ஒரு திட்டத்தின் வெற்றி என்பது அது நுகரும் வளங்களுக்கும், அது உருவாக்கும் நன்மைகளுக்கும் இடையிலான சமநிலையைப் பொறுத்து அமைகிறது. 
பரிமேலழகர் இதற்கான உரை எழுதும் போது, ஒரு செயலைச் செய்யும் போது தற்போது அழியும் பொருள் (செலவு), அந்தச் செயலால் பின்னர் உண்டாகும் பொருள் (வரவு), அச்செயலால் எதிர்காலத்தில் தொடர்ந்து கிடைக்கக்கூடிய பயன் (ஊதியம்) ஆகிய மூன்றையும் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும் என்கிறார். நவீன பொதுக் கொள்கை உருவாக்கத்தில், இதனை செலவு பயன் பகுப்பாய்வு (ஊழளவ-டீநநெகவை யுயெடலளளை) என்று அழைக்கப்படுகிறது. ஒரு புதிய உள்கட்டமைப்புத் திட்டத்தை தொடங்குவதாக கைத்துக்கொள்வோம். அரசு அதற்கான திட்டத்தை வகுத்து நிறையச் செலவு செய்கிறது. ஆனால், அத்திட்டம் செயல்பாட்டிற்கு வந்ததும் அதன் மூலம் ஈட்டும் வருவாய் மற்றும் அதன் மூலம் சமூகத்திற்கு நீண்டகாலமாகக் கிடைக்கும் மறைமுகப் பொருளாதார நன்மைகள்ஆகியவற்றை ஆராய வேண்டும்.
அடுத்தக் குறளில் கூட்டுப் பொறுப்புணர்வை (462) எடுத்துரைக்கிறார்.  தான் மிகப்பெரிய தகுதியினைக் கொண்டிருந்தாலும் தக்க நிபுணர் குழுவை கொண்டு திட்டங்கள் வகுப்பதும் செயல்படுத்துவதும் மிகப் பெரிய நன்மைகளைக் கொடுக்கும் என்கிறார். 
463 ஆவது குறளில், திறம்பட திட்டமிடால் பெரிய பலன் கிடைக்கும் என்று அடிப்படையை இழந்து விடக் கூடாது என்று எச்சரிக்கிறார். உதாரணமாக பேரிடர் நிதியை எடுத்து தொழில் வளர்ச்சிக்குச் செலவு செய்கிறேன் என்று முடிவெடுத்தால், திடீரென்று ஏற்படும் பேரிடரை சமாளிக்க முடியாத நிலை ஏற்படும். 
464 ஆவது குறளின் அடிப்படையில், தனக்கு ஒரு விடயம் புரியவில்லையென்றால், புரிபடவில்லையென்றால், அதனை தவிர்த்து விடுதல் நல்லது, சில ஆட்சியாளர்கள் தங்களுடைய முந்தையத் தலைவர்கள் என்ன கொள்கையின் அடிப்படையில் கட்சியினை ஆரம்பித்தார்கள் எதனை சொல்லி மக்களின் ஆதரவினைப் பெற்றார்கள் என்பதனை மறந்து, அதற்கு எதிராக தனக்குத் தோன்றியதையோ அல்லது சேரக் கூடாத கூட்டத்திடம் மக்களுக்கு உபயோகம் இல்லாத கருத்துக்களைப் பெற்று தனக்கு புரியவில்லையென்றாலும் செயல்படுத்த முனைவது அரசியல் தற்கொலைக்குச் சமமானது ஆகும். 
465 ஆம் குறளின் படி, திறமையான ஆட்சியாளர் நன்கு ஆராய்ந்து அறிந்து திட்டங்களை செயல்படுத்தும் போது, எதிர்கட்சியினராலும், எதிரிக் கட்சியினராலும் அதனைக் குறித்து விமர்சனம் செய்ய இயலாது. அவ்வாறு செய்தால், மக்களின் கோபத்திற்கு ஆளாக நேரிடும் என்பதனை நன்கு அறிந்தவர்கள் அவ்வாறு செய்யமாட்டார்கள். இதுவே பகைவரை திறம்பட கையாளும் யுக்தியில் ஒன்றாகும். 
466 ஆவது குறளில், ஒரு அரசியல்வாதியின் வீழ்ச்சி இரண்டு வகைகளில் நிகழலாம். 
ஓன்று செய்யக் கூடாத செயல்களைச் செய்வதால்
இரண்டு செய்ய வேண்டிய செயல்களைச் செய்யாமல் விடுவதால். 
சுருக்கமாகச் சொல்வதென்றால், சாதாரண காலங்களில் தேவையற்ற ஆடம்பரமும் பேரிடர் காலத்தில் தாமதமான சேவைகளும் ஆகும். 
467 ஆம் குறளில், எண்ணித் துணிகக் கருமம் என்றாலே அனைவரும் அறிந்ததே, முடிவெடுக்கும் முன் நன்கு யோசிக்க வேண்டும். செயலில் இறங்கிவிட்டு பிறகு இப்படிச் செய்திருக்கலாமே அப்படி செய்திருக்கலாமே என்று வருத்தப்படுவது அவமானத்திற்குரிய செயலாகும் என்கிறார். 
468 ஆவது குறளில், முறையாக ஆராய்ந்து அறியாமல் செய்யப்படும் திட்டம் மற்றும் செயல்பாடு தோல்வியையேத் தரும். ஊழலை ஒழிக்க வேண்டும் என்றால், அனைத்து நிலைகளிலும் அதற்கான வலுவான கட்டமைப்பை ஏற்படுத்தினால் மட்டுமே இயலும், இல்லையெனில் ஓட்டைப் பானையில் தண்ணீர் முகர்வது போலாகும். 
469 ஆவது குறளில், சரியான செயல்களை சரியான நபர்களா என்று பார்த்துச் செய்ய வேண்டும். குணமறிந்து செய்ய வேண்டும். இல்லையெனில் ‘தானமாக பெற்ற மாட்டின் பல்லை பரிசோதித்து” தமக்கு நல்ல மாடுதான் கொடுத்தார்களா என்று தானம் பெறுபவன் பரிசோதிக்கும் போது பார்த்துப் பார்த்து தானம் கொடுப்பவனுக்கு ஏற்படும் அவமானம் போல் கெடும். 
470 ஆவது குறளில், ஒரு திறம்பட்ட தலைவரின் செயல் எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும் என்று குறிப்பிடுகிறார். அதாவது பெரியோர் அல்லது பயன் பெறுபவர் விரும்பாத செயல்களை அவரிடம் வற்புறுத்தித் திணிக்கக் கூடாது. அப்படி செய்தால் தலைவர் மீது வெறுப்புத்தான் ஏற்படும். தகுதியான திட்டத்தை தகுதியானவர்கள் விரும்பும் வகையில் கொடுக்கும் போது அவர்கள் மகிழ்வர். உதாரணமாக தமிழக அரசு தற்போது வழங்கும் மகளிர் உரிமைத் தொiயைச் சொல்லலாம். அதற்கு உரிமைத் தொகை என்று பெயரிடும் போது அது பெண்கள் மத்தியில் பெருமிதத்தை ஏற்படுத்துகிறது.

தொடர்ந்து பார்ப்போம். 

குறிப்பு: இணைக்கப்பட்டுள்ள படங்கள் மற்றும் காணொலி ஆகியவற்றை செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பத்தில் உருவாக்கியுள்ளேன். பிழையிருப்பின் பொறுத்துக் கொள்க.

நன்றி

https://www.youtube.com/@AAAInfotainment

தோப்பு

Wednesday, 4 March 2026

திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்-111: திருக்குறளில் அரசியல்:

திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்-111:   
திருக்குறளில் அரசியல்:
திருக்குறளில் அரசியல் என்ற தலைப்பில் பார்த்து வருகிறோம்,
 . இந்த வாரம் ‘தெரிந்து செயல்வகை” என்னும் அதிகாரத்தில் அரசியல் குறித்து திருவள்ளுவர் என்ன குறிப்பிட்டுள்ளார் என்பதின் கடைசி விரத்தினை தொடர்ந்து பார்ப்போம். 
அரசியலில் ஒரு சிலரே தீர்க்கமாக ஆராய்ந்து தெளிந்த் பின்பு முடிவுகளை எடுக்கின்றனர். பலர் ஆராயாமல், பிறர் சொல்லைக் கேட்டு அல்லது தன்னை விட மூத்தவர்கள் அல்லது தன்னை விட அதிகாரம் மிகுந்தவர்களின் அழுத்தத்தினால், பல வித வாக்குறுதிகளை, தன்னால் செய்ய முடியாது என்றும் தெரிந்தும் கூட சில சமயங்களில் சொல்லி விடுவதுண்டு. தன்னுடைய தவறை இயலாமையை மறைக்க அரசியல் தந்திரம் என்று கூட மழுப்புவது உண்டு. இதுபோன்று ஆராயாமல் செயலை அறிவுடையோர் செய்ய மாட்டார் என்று திருவள்ளுவர் குறிப்பிடுகிறார் பின்வரும் குறளில்,
தெளிவிலதனைத் தொடங்கார் இளிவென்னும்
ஏதப்பாடு அஞ்சுபவர்-464
அதாவது தெளிவில்லாத செயலை அறிவுடையவர் தொடங்கமாட்டார் என்று குறிப்பிடுகிறார். அவ்வாறு சொல்வது அரசியலில் தோல்வியை ஏற்படுத்தும் என்று உணர்த்துகிறார்.  அப்படி திட்டமிடாமல் செயல்படும் செயல்கள் மற்றவர்கள் முன்பு தோல்வியை ஒப்புக் கொண்டது போல அமையும், குறிப்பாக எதிர்க் கட்சியினரும், எதிரிக் கட்சியினரும் எள்ளி நகையாடுவர். இதனையே அடுத்தக் குறளில், 
வகையறச் சூழாது எழுதல் பகைவரைப்
பாத்திப் படுப்பதோர் ஆறு.-465 என்று குறிப்பிடுகின்றார். அதாவது திட்டமிடாமல் செயல்படுவது, எதிரிகளுக்கு உதவுவது போன்றது என்று குறிப்பிடுகின்றார். 
அரசியலில தூங்கும் போது கூட காலை ஆட்டிக் கொண்டே தூங்க வேண்டும். இலை;லை எனில் இறந்து விட்டார் என்று கூறி எடுத்து அடக்கம் செய்து விடுவார்கள் என்று அரசியல்வாதிகள் கூறுவதுண்டு. ஆகவே, நல்லது கெட்டது எதுவாக இருந்தாலும் அரசியல் தலைவர்கள் அதற்கு பதிலளிக்க வேண்டும். அதே போல, எந்த விடயம் செய்ய வேண்டும் எதனை செய்யக் கூடாது என்பதனை அறிந்திருக்கும் தெளிவும் அவசியம் இருக்க வேண்டும். இல்லையெனில் அரசியல் வாழ்வில் பல தீமைகளை சந்திக்க நேரிடும். இதனை பின்வரும் குறளில் திருவள்ளுவர் அவர்கள் அழகாக விளக்கியுள்ளார்.
செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க
செய்யாமை யானும் கெடும் -466
அதாவது, செய்யக் கூடாததைத் செய்தாலும் தீமை தரும் அதே போல செய்ய வேண்டியதை செய்யாமல் இருந்தாலும் தீமை தரும் என்கிறார். அரசியல் ரீதியாகச் சொல்ல வேண்டுமெனில் ஒரு அரசானது தவறான முடிவுகள் எடுத்தாலும் அல்லது தேவையான நடவடிக்கை எடுக்காமல் இருந்தாலும் பாதிப்பினை ஏற்படுத்தும் என்கிறார். 
அரசியலில் நீடித்திருப்பதற்கும் தன் கட்சியினர் தன்னை மதிப்பதற்கும் முக்கிய அம்சமாக இருப்பது முடிவெடுக்கும் திறன். தீர்க்கமான முடிவினை எடுக்கும் தலைவர்கள் தங்களுடைய தொண்டர்களால் மதிக்கப்படுவர். முடிவுகளை மாற்றிக் கொண்டே இருப்பவரால் கட்சிக்குள்ளும் சிக்கல் ஏற்படும். தொண்டர்களும் என்ன செயல் செய்வது என்று தெரியாமல் தவிப்பர். இதனை நம்மில் பலரும் அறிந்த கீழ்க்காணும் திருக்குறளில் கூறியுள்ளார். 
எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவது இழுக்கு-467  என்று குறிப்பிடுகிறார். அதாவது எந்த ஒரு செயலுக்கு முன் யோசிக்க வேண்டும். செய்தபின் யோசிப்பது தவறு என்று குறிப்பிடுகிறார். அரசியலில் முன் திட்டமிடலின் அவசியத்தை வலியுறுத்துகிறார். 
சிலர் தவறினை செய்து விட்டு அது தவறு என்று தெரிந்தும் அதனை 
எற்றுக்கொள்ளாமல், அவதூறு பரப்புதலும், பிறர் மீது பழியினை போடுதல் போன்ற கீழ்த்தரமான வேலைகளைச் செய்கின்றனர். இவ்வாறு செய்வது மக்களிடம் இருந்து ஆட்சியாளர்களை விலக்கி வைக்க நேரிடும் வாய்ப்பாக அமைகின்றது. ஆகவே, கவனமாக இருக்க வேண்டும் என்பதனை பின்வரும் குறளில் வலியுறுத்துகின்றார். 
ஆற்றின் வருந்தா வருத்தம் பலர்நின்று
போற்றினும் பொத்துப் படும்.-468 அதாவது முன்னே யோசிக்காமல் செய்த தவறு பின்னர் திருத்த முடியாது என்கிறார். உதாரணமாகச் சொல்ல வேண்டுமானால் ஒரு தவறான அரசியல் முடிவு நாட்டின் பொருளாதாரத்தைப் பாதிக்கலாம்.
ஆரசியலில் பல விடயங்கள் கவனிக்க வேண்டும் அதில் குறிப்பாக எந்தச் செயலை எப்போது செய்ய வேண்டும் என்ற காலம் அறிந்து செய்யப்பட வேண்டும். வறட்சி சமயத்தில் தான் வறட்சியைப் போக்குவதற்கான திட்டங்களை வகுக்க வேண்டும். அந்த சமயத்தில் வெள்ள நிவாரண நிதி வழங்கப்பட்டால் அது கேலிக் கூத்தாகிவிடும். ஆகவே நற்செயல் முக்கியம் அதனை மனிதர்களின் இயல்பை அறிந்து செய்வதும் முக்கியம் ஆகும். புpன்வரும் குறளில் அவர் குறிப்பிடுவதாவது:
நன்றாற்றல் உள்ளும் தவறுண்டு அவரவர்
பண்பறிந்து ஆற்றாக் கடை.-469
நற்செயலும் தவறாகலாம், மனிதர்களின் இயல்பை அறியாமல் செய்தால் என்கிறார். அரசியல் ரீதியாக சொல்ல வேண்டுமென்றால் மக்களின் மனநிலையை அறியாமல் எடுக்கின்ற முடிவு தோல்வியடையும். 
இறுதியாக, மக்களின் ஆதரவோடு இயங்கும் அரசே நல்ல அரசு என்று தெளிவுபடுத்துகிறார். 
எள்ளாத எண்ணிச் செயல்வேண்டும் தம்மொடு
கொள்ளாத கொள்ளாது உலகு.-470
அதாவது உலகம் ஏற்றுக் கொள்ளும் வகையில் யோசித்துச் செயல்பட வேண்டும் என்கிறார். மக்களின் அூதரவு இல்லாத அரசு ஒருபோதும் நீடிக்க இயலாது என்பதனை வலியுறுத்துகின்றார் திருவள்ளுவர். இந்த அதிகாரத்தின் மொத்த சாராம்சங்களை வரும் வாரத்தில் பார்ப்போம். 
தொடர்ந்து பார்ப்போம். 

குறிப்பு: இணைக்கப்பட்டுள்ள படங்கள் மற்றும் காணொலி ஆகியவற்றை செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பத்தில் உருவாக்கியுள்ளேன். பிழையிருப்பின் பொறுத்துக் கொள்க.

நன்றி

https://www.youtube.com/@AAAInfotainment

தோப்பு


Sunday, 1 March 2026

திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்-110: திருக்குறளில் அரசியல்:

திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்-110:  
திருக்குறளில் அரசியல்:
திருக்குறளில் அரசியல் என்ற தலைப்பில் பார்த்து வருகிறோம்,
 அரசியலில் சிற்றினம் சேராமை என்ற அதிகாரத்தில் அரசியல் சார்ந்த கருத்துகளை திருவள்ளுவர் என்ன குறிப்பிடுகிறார் என்பதனை கடந்த வாரம் பார்த்தோம். இந்த வாரம் ‘தெரிந்து செயல்வகை” என்னும் அதிகாரத்தில் அரசியல் குறித்து திருவள்ளுவர் என்ன குறிப்பிட்டுள்ளார் என்று பார்ப்போம். 
தெரிந்து செயல்வகை என்பது எந்த ஒரு செயலையும் செய்வதற்கு முன்பாக அந்தச் செயலின் விளைவுகள், நன்மை-தீமைகள், அதன் சூழல், காலம், வலிமை மற்றும் எதிரிகள் ஆகியவற்ளை ஆராய்ந்து பிறகு செயல்படுதலைக் குறிப்பிடுகிறது. 
அரசியலில் தலைவராக இருப்பதற்கு இந்த விடயம் மிக முக்கியமானது ஆகும். அரசியல் மற்றும் ஆட்சித் திறனில் முடிவெடுப்பதற்கு இது அவசியமாகிறது. ஏனெனில், ஒரு தலைவன் எடுக்கக் கூடிய முடிவுதான் அந்த நாட்டை வளமானதாகவோ அல்லது வீழ்ச்சிக்கோ கொண்டு செல்வதற்குக் காரணமாக அமைகின்றது. குறிப்பாகச் சொல்ல வேண்டுமென்றால், அரசியல் சூழலில், ஒரு சிறு தவறு அல்லது தவறான கணக்கீடு முழு நாட்டையும் பேரிடருக்கு உள்ளாக்கும் என்பதால், "தெரிந்து செயல்" என்பது ஆட்சியாளர்களுக்கு மிக முக்கியமான தகுதியாகக் கருதப்படுகிறது.

இந்த அதிகாரம் வெறும் தார்மீக ஆலோசனைகளை மட்டும் வழங்காமல், நவீன மேலாண்மைத் தத்துவங்களில் கூறப்படும் ‘வியூகத்துடன் திட்டமிடல்”; (Strategic Planning), 'இடர் மேலாண்மை' (Risk Management) மற்றும் 'ஆற்றல் பகுப்பாய்வு' (SWOT Analysis) போன்ற உயர்நிலை நிர்வாகக் கோட்பாடுகளைத் தன்னுள் கொண்டுள்ளது.
ஏந்த ஒரு அரசின் செயல்பாட்டிற்கு நிதி ஆதாரம் முக்கியமானதாகவும். சரியான முறையில் திட்டமிட்டால் ஒரு அரசால் நிறைய வருவாயினை மக்களுக்கு சிரமம் கொடுக்காமல் ஏற்படுத்த முடியும். சரியாக திட்டமிடவில்லையெனில் கடன் சுமை அதிகரிக்கும் அதனைச் சமாளிக்க மக்கள் மீது வரிச் சுமை அதிகரிக்கும். 
முதல் குறளில் என்ன கூறியிருக்கிறார் என்று பார்ப்போமா?
அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும்
ஊதியமும் சூழ்ந்து செயல்.-461  என்கிறார்.  அதாவது எந்த ஒரு செயலைச் செய்வதற்கும் முன்பாது, அது தரும் நன்மை, அது தரும் தீமை மற்றும் அதன் விளைவுகள் ஆகிய எல்லாவற்றையும் ஆராய்ந்து செயல்பட வேண்டும் என்கிறார். அரசியல் நோக்கில் சொல்ல வேண்டுமெனில், ஒரு அரசாங்கம் புதிய சட்டம் கொண்டு வரும் போது, அதன் சமூக, பொருளாதார மற்றும் அரசியல் விளைவுகளை ஆராய வேண்டும் என்று நாம் கொள்ளலாம். முன்பே குறிப்பிட்டது போல வரி உயர்த்துவது அரசுக்கு வேண்டுமானால் ஆதாயம் தரலாம். ஆனால், மக்களுக்கு அது பெருஞ்சுமையை ஏற்படுத்தும் .
அரசியல் தலைப்பின் முந்தைய அதிகாரங்களில் நாம் பார்த்ததுபோல எந்த ஒரு தலைவனும் தகுதியான நபர்களைப் பக்கத்தில் வைத்துக் கொள்ளுவதும் சிறுமை எண்ணம் கொண்டவர்களிடம் இருந்தும் விலகி இருந்து பேரினத்துடன் தங்களை இணைத்துக் கொள்வது சாலச் சிறந்தது என்று பார்த்தோம். பின்வரும் குறளிலும் அக்கருத்திற்கு வலு சேர்க்கிறார். 
தெரிந்த இனத்தொடு தேர்ந்தெண்ணிச் செய்வார்க்கு
அரும்பொருள் யாதொன்றும் இல்.-462
அதாவது, தெரிந்தவர்களுடன் ஆலோசித்து, ஆராய்ந்துசெயல்படுபவர்களுக்கு முடியாதது என்று எதுவும் இல்லை. அனைத்தும் எளிதில் கை கூடும்.
ஒரு நல்ல தலைவர் என்பவர் தங்களுடைய அமைச்சர்கள், நிபுணர்கள், ஆலோசகர்கள் இவர்களுடன் ஆலோசித்து முடிவு எடுக்க வே;;ண்டும் என்கிறார் திருவள்ளுவர். குறிப்பாக, பாதுகாப்பு, பொருளாதாரம், கல்வி போன்ற துறைகளில் நிபுணர்களின் கருத்து அவசியம் என்பதனை உணர வேண்டும். 
சிலபேர், மிகப் பெரிய இலாபம் வரும் என்று கருதி தன்னுடைய சொத்தை விற்றுக் கூட பங்குச் சந்தையில் முதலீடு செய்வர், சரியான கணக்கீடு இல்லாதநிலையில் அவர் பங்குச் சந்தையில் சரிவை எதிர் கொள்ளும் போது, தன்னுடைய சொத்தையும் சேர்த்து இழக்கும் நிலை உருவாகிறது. இதுபோன்ற நிகழ்களை முன்னரே நமது திருவள்ளுவர் சாடுகிறார். 
ஆக்கம் கருதி முதல் இழக்கும் செய்வினை
ஊக்கார் அறிவுடையார்-463  என்கிறார். அதாவது, எதிர்கால இலாபத்திற்காக அடிப்படையை இழக்கும் செயலை அறிவுடையார் செய்யமாட்டர் என்கிறார். அரசியல் தலைவரானவர் தன்னுடை தற்கால இலாபத்திற்காக நாட்டின் நீண்ட கால நலனை இழந்துவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்க வேண்டும். பொய்யான வாக்குறுதிகளை வாக்குறுதிகள் பெறுவதற்காக அளிப்பதைக் கூட இதன் கணக்கில் கொள்ளலாம். 
தொடர்ந்து பார்ப்போம். 

குறிப்பு: இணைக்கப்பட்டுள்ள படங்கள் மற்றும் காணொலி ஆகியவற்றை செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பத்தில் உருவாக்கியுள்ளேன். பிழையிருப்பின் மற்றும் தாமதத்திற்கும் பொறுத்துக் கொள்க.

நன்றி

https://www.youtube.com/@AAAInfotainment

தோப்பு