Wednesday, 29 October 2025

திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்-93:

திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்-93:

பண்புடைமை: 
திருவள்ளுவர் அவர்கள் உடைமை என்னும் தலைப்பில் எழுதிய அதிகாரங்களைப் பற்றிப் பார்க்கின்றோம். கடந்த வாரங்களில் அன்புடைமை;, அறிவுடைமை, அடக்கமுடைமை, ஒழுக்கமுடைமை, பொறையுடைமை, அருளுடைமை, ஊக்கமுடைமை மற்றும் ஆள்வினையுடைமை பற்றிப் பார்த்தோம். இந்த வாரம் பண்புடைமை என்னும் அதிகாரத்தைப் பற்றிப் பார்ப்போம்.
பண்புடைமை என்னும் இந்த அதிகாரம் 100 ஆவது அதிகாரமாக திருக்குறளில் அமைந்துள்ளது. இதை ஆங்கிலத்தில் ‘ஊழரவநளல” என்று மொழி பெயர்த்தாலும், அது மூலத் தமிழின் ஆழத்தையும் தத்துவத்தையும் முழுமையாக வெளிபடுத்துவதில்லை. ‘பண்பட்ட மனிதநேயத்தைக் கொண்டிருத்தல்” அல்லது ‘குணத்தின் தகைமை” என்பதே மிகவும் துல்லியமான மொழி பெயர்ப்பாக இருக்கும். இந்த விளக்கம் , ‘பண்பு” என்பது ஒரு தனிநபரின் உள்ளார்ந்த இயல்பு, குணம் மற்றும் தரத்தைக் குறிக்கிறது. மேலும் ‘உடைமை” என்பது அதைக் கொண்டிருக்கும் நிலையையும் குறிக்கிறது. ஆகவே பண்புடைமை என்பது ஒருவரின் உள்ளார்ந்த குணத்தை சமூக நடத்தைக்கு இசைவாக மாற்றும் ஒரு உள்ளார்ந்த, பண்பட்ட நிலையாகும். இந்த பண்பட்ட மனித நேயமே சமூக நல்லிணக்கத்திற்கு அடித்தளமாக அமைகிறது. நூகரிகத்தின் கட்டமைப்பையே தாங்கி நிற்கிறது. மேலும், அறிவு, அதிகாரம் மற்றும் செல்லவத்திற்கு உண்மையான அர்த்தத்தையும் சட்டபூர்வத் தன்மையையும் வழங்கும் இறுதித் தகுதியாக விளங்குகிறது என்று திருவள்ளுவர் வாதிடுகிறார். இது ஒரு மனிதனை வெறுமனே ஒரு உயிரியில் நிலையில் இருந்து உண்மையான சமூக மற்றும் அறநெறி உயிரினமாக உயர்த்தும் வரையறுக்கும் பண்பாகும். 
இனி குறளுக்குச் செல்வோம். 
பொதுவாகவே, ஒருவர் அணுகக் கூடிய நிலையில் இல்லையென்றால், ஒன்று அவரை மக்கள் பார்ப்பதை தவிர்த்து விடுவர், ஆனால், அதே வேளையில் ஒருவர் அனைவரிடம் எளிதாக பேசுகிறார். எவராலும் அவரை அணுக முடியும் பேச முடியும் என்ற நிலையில் இருந்தால், மக்கள் அவரை மிகவும் பண்புடையவர், எளியவர், நல்லவர் என்ற எண்ணத்திற்கு மிக எளிதாக வந்து விடுகின்றனர். இதுவே, பண்புடையவர் என்பதற்கான எளிதான வழியாக இருக்கிறது என்று வள்ளுவர் குறிப்பிடுகிறார் பின்வரும் குறளில்...
எண்பதத்தால் எய்தல் எளிதென்ப யார்மாட்டும்
பண்புடைமை என்னும் வழக்கு -991 என்கிறார். அதாவது, யாராயிருந்தாலும் அவர்களிடத்தில் எளிதாகக் கண்டுப் பேசும் நிலையில் வாழ்ந்தால், அதுவே பண்புடைமை என்கிற சிறந்த ஒழுக்கத்தைப் பெறுவதற்கு எளிய வழியாக அமையும் என்கிறார். 
‘அந்தப் பையன் ஏன் இப்படி இருக்கமாட்டான்..? அவனுடைய அப்பா எப்பேர்பட்ட பண்புடையவர் தெரியுமா? புலிக்குப் பிறந்தது பூனையாகுமா?” என்று கூறுவதுண்டு. கீழ்க்காணும் குறளில், எல்லோர் மீதும் அன்புள்ளவராக வாழ்வது, உலகத்தோடு ஒத்து வாழும் குடும்பத்தில் பிறந்திருத்தல் இவை இரண்டும் பண்புடைமை என்னும் நல்ல வழிகள் என்று கூறுகிறார்.  
அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் இவ்விரண்டும்
பண்புடைமை என்னும் வழக்கு -992
நிறையக் காட்சிகளைக் கொண்டு தவறுதலான புரிதல் ஏற்படுவது உண்டு. சமீப காலங்களில் ஊடகங்களில் பொய்யை உண்மைப் போல புனையும் சம்பங்கள் நிறைய அரங்கேறி வருகின்றன. சிலர் திரைப்படங்களிலும் சின்னத்திரைத் தொடர்களிலும் பார்த்து அதில் நடிப்பவர்கள் உண்மையிலே அப்படிப்பட்ட ஆட்கள் தான் என்று நம்பி விடுகின்றனர். வில்லன்களாக நடித்த நிறைய நடிகர்களை பொதுமக்கள் விரட்டுவதும் அவர்களை வசைபாடுவதும் அரங்கேறியதனை நாம் அறிவோம். ஆனால், நிறைய வில்லன்கள் உண்மையில் தனிப்பட்ட வாழ்க்கையில் பண்புடையவர்களா அவர்களை அறிந்த வட்டாரங்களில் உள்ளவர்களுத் தெரியும். அதேபோன்று, கதாநாயகர்களை மிகச் சிறந்த உத்தமர்களாக மக்கள் நினைப்பதுண்டு, மாறாக அவர்கள் பல வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டு தண்டனை பெறும் நிகழ்வுகளையும் பார்க்கின்றோம். ஆகவே, யார் நல்ல மக்கள் என்று பின்வரும் குறளில் திருவள்ளுவர் சொல்கிறார் என்றால்,
உறுப்பொத்தல் மக்களொப்பு அன்றால் வெறுத்தக்க
பண்பொத்தல் ஒப்பதாம் ஒப்பு -993 என்கிறார். 
நற்பண்பு இல்லாதவர்களை அவர்களின் உடல் உறுப்புகளின் தோற்றத்தால் மட்டுமே ஒப்பிட்டுப் பார்ப்பது சரியாகாது, நற்பண்புகளால் உள்ளத்துடன் இணையும் பண்பால் பிறருடன் ஒத்திருப்பதே மக்கள் எனப்படுவர் என்கிறார். 
அடுத்தக் குறளில், இந்தக் காலத்தில் கொள்ளை என்பது கால ஓட்டத்தில் மிக சாதாரணமாக நடக்கிறது, சிலர் ஊழல் செய்வதையே கௌரவமாக தாங்கள் கையும் களவுமாக பிடிபடும் வரை நினைப்பதுண்டு. சிலருக்கு அந்த சொரணையும் பிடிபட்டாமல், நான் செய்த தவறு என்ன என்று தான் மக்களுக்கு பல்வேறு துரோகங்களை செய்துள்ளோம் என்று கொஞ்சம் கூட வருந்தாமல் இருப்பவர்களும் உண்டு. ஆனால், இவர்கள் மத்தியில் எவ்வளவு இடையூறு வந்தாலும் நேர்மையுடனும், மற்றவர்கள் வாழ்வில் நன்மை கிடைப்பதனை இலட்சியமாகவும் வாழ்பவர்கள், அதில் அவர்கள் பணம் பெருக்கவில்லையெனினும் விவரம் இல்லாதவன் என்று இகழப்பட்டாம் மன மகிழ்ச்சி குறையாது திருப்தியான நிலையில் வாழ்வார்கள். அவரால் பயன் பெற்றவர்கள் மனதிலும் நேர்மையாளர்கள் பண்பாளர்கள் மத்தியில் அவர் எப்போதும் உயர்வானவராகவே போற்றப்படுவார். இதனையே, 
நயனொடு நன்றி புரிந்த பயனுடையார்
பண்புபா ராட்டும் உலக -994 திருவள்ளுவர் குறிப்பிடுகிறார். அதாவது, நீதியையும் நன்மையையும் விரும்பிப் பிறருக்குப் பயன்பட வாழும் பண்பினை உலகத்தார் போற்றிக் கொண்டாடுவர் என்கிறார். 
அடுத்தக் குறளில், 
நகையுள்ளும் இன்னா திகழ்ச்சி பகையுள்ளும்
பண்புள பாடறிவார் மாட்டு -995 என்கிறார். 
பலமுறை நாம் சொல்வதுண்டு, விளையாட்டை விளையாட்டாகப் பார்க்க வேண்டும். அதாவது, விளையாட்டுதான் பலர் கூடி விளையாடுவதால் ஒற்றுமையை வளர்க்கும,; பல விதிகள் இருப்பதால் ஒழுக்கத்தையும் வளர்க்கும் நற்பண்பை வளர்க்கும் ஒரு வாய்ப்பு.  அதனால் தான் ‘நாம் அடிக்கடி விளையாட்டுக்குத் தானே சொல்கிறாய், உண்மையாக இல்லை தானே?”  என்று ஒரு உணர்வுபூர்வமான வார்த்தைகள் வெளிவரும் போது அவசரப்பட்டு வார்த்தை விட்டுவிடக் கூடாது என்று சுதாரிப்பாக வார்த்தைகளைப் பயன்படுத்துகிறோம். அதன் அர்த்தம், விளையாட்டு என்பது வினையல்ல என்பதுதான். ஆனால், அதனை அரசியலாகவும், பிறரை இகழ்ச்சியாகப் பார்க்கும் ஒரு இடமாகவும் சிலர் மாற்றுவதுண்டு. மேற்காணும் குறளில் திருவள்ளுவர், ‘ஒருவரை இகழ்ந்து பேசுதல் விளையாட்டிலும் துன்பம் தருவதாக இருக்கும், பிறருடைய இயல்பை அறிந்து நடப்பவரிடத்தில் பகைமையில் கூட நல்லப் பண்புகள் இருக்கின்றன என்கிறார். 

தொடர்ந்து பார்ப்போம்...

குறிப்பு: இணைக்கப்பட்டுள்ள படங்கள் மற்றும் காணொலி ஆகியவற்றை செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பத்தில் உருவாக்கியுள்ளேன். பிழையிருப்பின்  மற்றும் தாமதத்திற்குப் பொறுத்துக் கொள்க.

நன்றி

https://www.youtube.com/@AAAInfotainment

தோப்பு

Wednesday, 22 October 2025

திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்-92: ஆள்வினையுடைமை :

திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்-92:
ஆள்வினையுடைமை :
கடந்த வாரம் ஆள்வினை உடைமை அதிகாரத்தின் முற்பகுதியைப் பார்த்தோம். இந்த வாரம் அதன் பிற்பகுதியைப் பார்ப்போம். எந்த ஒரு ஊக்குவிப்புப் பயிற்றுனரும் (ஆழவiஎயவழைn வுசயiநெச) முக்கியமாக குறிப்பிடுவது வெற்றியை அல்ல, அதற்கான முயற்சியையே ஆகும். நம்முடைய முயற்சியை எவ்விதம் மேம்படுத்துவது என்பதே பல வித பயிற்றுனர்களும் நமக்கு பயிற்றுவிப்பது. இந்த விடயத்தை, முயற்சி நிச்சயம் நல்ல பலனைத் தரும் என 2000 வருடங்களுக்கு முன்னரே ஆணித்தரமாக குறிப்பிடுகிறார் திருவள்ளுவர் அவர்கள்.
முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை
இன்மை புகுத்தி விடும் -616
இடைவிடாத தொடர் முயற்சியானது ஒருவனுக்குச் செல்வத்தைப் பெருகச் செய்யும், முயற்சி இல்லாமல் இருப்பதோ அவனிடத்தில் வறுமையைச் கொண்டு போய்ச் சேர்த்து விடும் என்கிறார்.
மடியுளாள் மாமுகடி என்ப மடியிலான்
தாளுளான் தாமரையி னாள் -617
மேற்கூறிய குறளுக்கு கலைஞர் அவர்கள் சொல்லும் விளக்கமானது, திருமகள், மூதேவி எனப்படும் சொற்கள் முறையே முயற்சியில் ஊக்கமுடையவரையும், முயற்சியில் ஊக்கமற்ற சோம்பேறியையும் சுட்டிக் காட்டிப் பயன்படுவனவாகும் என்கிறார். எனக்கு இக்குறளில் மாற்றுக் கருத்து உள்ளது. ஏனெனில் தமிழ்ச் சமூகம் மூதேவி என்னும் மூத்த தேவியை, தவ்வையைதான் முன்னர் வழிபட்டது, பிறகு அது சூழ்ச்சியால் வீழ்த்தப்பட்டுள்ளது என்பது எனது கருத்து. இன்றும் ‘ஜேஸ்டா தேவி ” என்ற பெயரில் இந்தியாவின் பல இடங்களில் அழைக்கப்படுகிறார். திருவானைக்கோவில் ஐம்புகேசுவரர் ஆலயத்திலும் இவருக்கென்று இடமுண்டு. போகரும் இவருக்கென்று தனிப்பாடலை இயற்றியுள்ளார்.
பலரும் சொல்லக் கேட்டிருப்போம் என்னுடைய இந்த நிலைக்கு என்னுடைய முன்னோர் செய்த பாவம் தான், ஆதலால், தான் நான் வறுமை நிலையில் இருக்கின்றேன், ஆதலால் தான் எனது குழந்தை ஊனமுற்ற நிலையில் பிறந்துள்ளது என்று தவறாக எண்ணுவதுண்டு. உண்மையில் பல விடயங்களை அவர்கள் ஆய்ந்து அறிந்தாலே பலவற்றையும் சரி செய்து விட முடியும். குழந்தை கருவுற்ற 2 மாதத்திற்குள்ளேயே அது டௌன் சின்ட்ரோம் என்ற நிலையில் இருக்கிறதா என்று ஆய்ந்தறிந்து அதனைத் தடுப்பதற்கான மருந்துகள் இருக்கின்றன. இப்போது மரபு சார்ந்த பிரச்சனைகள் கருவிலேயே தடுக்கும் அளவிற்கு மருத்துத் துறையில் முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளது. ஆனால், விதியையே குறை சொல்வது ஒருவருடைய ஊக்கமின்மையும் முயற்சியின்மையையும் குறிக்கிறது. இதுதான் ஒருவர் தொடர்ந்து வறுமை நிலையில் இருப்பதற்கும் காரணமாகும், ஒருவர் ஏழையாக பிறப்பது அவர் குற்றமில்லை ஆனால், ஏழையாகவே இறப்பதற்கு அவர்தான் காரணமாக இருக்கிறார் என்பதனை அவர் உணர வேண்டும். அது அவருடைய முயற்சியின்மைதான் என்பதனை வள்ளுவர் இவ்விதம் குறிப்பிடுகிறார்.
பொறியின்மை யார்க்கும் பழியன்று அறிவறிந்து
ஆள்வினை இன்மை பழி -618
நல்லது விளைவிக்கும் விதி இல்லாமல் இருப்பது என்பது யாருக்கும் குற்றம் ஆகாது, அறிய வேண்டியவைகiளா அறிந்து அதற்குரிய முயற்சி செய்யாமல் இருப்பதே ஒருவனுக்கானப் பழி ஆகும் என்கிறார்.
ஒருவனுக்கு உச்சபட்ச ஊக்கம் தருவதென்றால் எப்படித் தரலாம்? இதோ ஐயன் தருகிறார் பாருங்கள்!
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்
மெய்வருத்த்க் கூலி தரும் -619 என்கிறார்.
ஒவ்வொருவரும் தன்னால் முடியவில்லை என்று எளிதாக தெய்வத்தின் மீது பழியை அல்லது சுமையை இறக்கி விட்டுச் செல்வார்கள். ஆனால், அந்தத் தெய்வத்தின் அருளாலே கைகூடாது போனாலும் கவலைப் படாதே ஒருவனுடைய முயற்சியானது, தம் உடல் உழைப்பிற்கு ஏற்றப் பலனைத் தப்பாமல் தந்துவிடும் என்கிறார்.
அடுத்தக் குறளில்
ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்
தாழாது உஞற்று பவர் -620 என்கிறார்.
618 ஆவது குறளினை இக் குறளில் ஆணித்தரமாக விளக்குகிறார்.
ஒருவர் சோர்வும் இல்லாமல் முயற்சியிலும் குறைவும் இல்லாமல் இடைவிடாமல் செய்பவர்கள், கெடுதலான விதியையும் வென்று, புறமுதுகு காட்டி ஓடச் செய்பவர்கள் ஆவார்கள் என்கிறார். இதைவிட ஒருவனுக்கு எப்படி நம்பிக்கையளிப்பது. விதியே என்று உட்கார்ந்திருப்பவர்களுக்கு நீதான்டா விதியை உடைக்கும் சதி என்று அவன் சோம்பலை துவம்சம் செய்து ஆற்றல் அளிக்கும் வீரியமிகுந்த நம்பிக்கையை திருவள்ளுவர் அவர்கள் அளிக்கிறார்கள். சோர்வுடன் இருப்பவர்கள் இக்குறள்களை உரமிக்க வாக்காக எடுக்கக்கடவது.
தொடர்ந்து பார்ப்போம்...

குறிப்பு: இணைக்கப்பட்டுள்ள படங்கள் மற்றும் காணொலி ஆகியவற்றை செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பத்தில் உருவாக்கியுள்ளேன். பிழையிருப்பின் மற்றும் தாமதத்திற்குப் பொறுத்துக் கொள்க.

நன்றி

https://www.youtube.com/@AAAInfotainment

Wednesday, 15 October 2025

திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்-91:

திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்-91:
ஆள்வினையுடைமை :
திருவள்ளுவர் அவர்கள் உடைமை என்னும் தலைப்பில் எழுதிய அதிகாரங்களைப் பற்றிப் பார்க்கின்றோம். கடந்த வாரங்களில் அன்புடைமை, அறிவுடைமை, அடக்கமுடைமை, ஒழுக்கமுடைமை, பொறையுடைமை, அருளுடைமை மற்றும் ஊக்கமுடைமை பற்றிப் பார்த்தோம். இந்த வாரம் ஆள்வினையுடைமை என்னும் அதிகாரத்தைப் பற்றிப் பார்ப்போம்.
ஆள்வினையுடைமை என்னும் தலைப்பின் மொழியியல் மற்றும் கருத்தியல் பகுப்பாய்வு வள்ளுவரின் தத்துவத்தின் ஆழத்தை வெளிப்படுத்துகிறது. இந்தச் சொல் "ஆள்வினை" மற்றும் "உடைமை" ஆகிய இரண்டு சொற்களின் கூட்டு ஆகும். "உடைமை" என்பது "பெற்றிருத்தல்" அல்லது "கொண்டிருக்கும் நிலை" என்று எளிமையாக மொழிபெயர்க்கப்படுகிறது. சிக்கலானது "ஆள்வினை" என்பதில் உள்ளது. இது பொதுவாக "ஆண்மையான முயற்சிஇ" "விடாமுயற்சிஇ" அல்லது "உழைப்பு" என்று மொழிபெயர்க்கப்பட்டாலும்இ அதன் வேர்கள் ஒரு ஆளுமைமிக்க கருத்தை பரிந்துரைக்கின்றன. "ஆள்" என்பது ஆளுதல் அல்லது நிர்வகித்தலுடன் தொடர்புடையதுஇ மற்றும் "வினை" என்பது செயல் அல்லது வேலையைக் குறிக்கிறது. எனவேஇ ஒரு துல்லியமான பொருள் "ஒருவரின் செயல்களை ஆளும் திறனைக் கொண்டிருத்தல்" என்பதாகும். இது கடினமாக உழைப்பது மட்டுமல்ல; இது ஒருவரின் முயற்சிகள் மீது முழுமையான கட்டுப்பாட்டைச் செலுத்திஇ அவற்றை அதிகாரத்துடனும் அறிவுடனும் வழிநடத்துவதாகும். இது மன உறுதியான "ஊக்கம்" மற்றும் நீடித்த உடல் உழைப்பான "மெய்முயற்சி" ஆகியவற்றின் சக்திவாய்ந்த இணைப்பைக் குறிக்கிறது. 'ஆள்வினையுடைமை' அதிகாரத்தின் பத்து குறள்களும் மனித முயற்சியின் ஆற்றலுக்கான ஒரு தொடர்ச்சியான மற்றும் படிப்படியான வாதத்தை உருவாக்குகின்றன. ஒவ்வொரு குறளும் முந்தைய குறளின் மீது கட்டமைக்கப்பட்டுஇ மனவுறுதியின் உள் உளவியலில் இருந்து வெளிப்புற சமூக-பொருளாதார தாக்கங்கள் வரை நகர்ந்துஇ இறுதியாக விதி என்ற கருத்துடன் நேரடியாக மோதுகிறது.
ஏற்கனவே ‘எண்ணித் துணிக கருமம்..” என்று துவங்கும் திருக்குறள் ஞாபகத்தில் இருக்கும். அக்குறளில் எந்த ஒரு செயலையும் நன்கு ஆராய்ந்து துவங்க வேண்டும், துவங்கிய பிறகு, இந்தச் செயல் நாம் துவங்கியிருக்க வேண்டுமா? அது எதிர்பார்த்த முடிவைத் தருமா? ஏன்பது போன்று ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கக் கூடாது என்கிறார். அதாவது தீர்;க்கமாக முடிவு செய்து ஒரு செயலில் இறங்க வேண்டும் என்கிறார். 
ஒரு தொழில் முனைவோர் இருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அவர் தீர்க்கமாக முடிவு செய்து தான் தொழிலை துவங்கியுள்ளார். ஆனாலும், அவர் எதிர்பார்த்த வேகத்தில் விற்பனை இல்லை என்றால் என்ன செய்யவேண்டும்? எந்த நிலையில் தொய்வு உள்ளது என்பதைக் கண்டறிந்து அதனை மேம்படுத்த முயற்சிக்க வேண்டும். இதனையே ஆள்வினையுடைமையின் முதல் குறட்பாவில் ஆலோசனை வழங்குகிறார் திருவள்ளுவர். 
அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும்
பெருமை முயற்சி தரும் -611 என்கிறார். 
அதாவது, இந்தச் செயலை நம்மாலே செய்ய முடியாது என்று சோர்வு கொள்ளாமல் இருக்க வேண்டும். இடைவிடாத முயற்சியானது அதனைச் செய்து முடிக்கும் வலிமையைத் தரும் என்கிறார். 
அப்படி யார் இடைவிடாமல் முயற்சி செய்து, அதில் வெற்றி பெற்றவரை உலகம் பாராட்டும் அவருடைய முயற்சிகளைப் போற்றத் துவங்கும். அவ்வாறு தொழிலை துவங்கியவர் முயற்சிக்குப் பயந்து இடையிலேயே விட்டுவிட்டால் என்ன ஆகும். திருவள்ளுவரே சொல்கிறார் கேளுங்கள்… வினைக்கண் வினைகெடல் ஓம்பல் வினைக்குறை
தீர்;ந்தாரின் தீர்ந்தன்று உலகு -612 என்கிறார். 
ஒரு செயலைச் செய்து முடிக்காமல் இடையிலேயே கைவிட்டவரை உலகமும் கைவிடும். ஆதலால், செய்யும் செயலினை செய்ய முடியாதுஎன்று முயற்சி இ;ல்லாமல் இருப்பதைக் கைவிட வேண்டும் என்கிறார். ஆகவே, முயற்சி திருவினையாக்கும் என்பதை உணர்ந்து தொடர வேண்டும். 
அவ்வாறு முயற்சி உடையவர்கள் தான் உண்மையில் திருவள்ளுவர் கூறுவது போல் பெருமைக் கொள்ள முடியும். 
தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே
வேளாண்மை என்னுஞ் செருக்கு -613
ஏல்லோருக்கும் உதவி செய்தல் என்னும் பெருமித உணர்வானது, விடா முயற்சி என்று சொல்லப்படுகின்ற உயர்ந்த பண்பில் தான் நிலைத்திருக்கிறது என்கிறார். மேலும், எந்த நிலையிலும் பயம் இல்லாமல் தொடர்ந்து முயற்சிக்க வேண்டும் என்பதனை பின்வரும் குறளில் வலியுறுத்துகிறார். 
தாளாண்மை இல்லாதான் வேளாண்மை பேடிகை
வாளாண்மை போலக் கெடும் -614
போருக்கு பயப்படுகின்ற ஒரு பேடியின் கையிலுள்ள வாள் எடுத்தும் ஆளும் தண்மை போல் இல்லாதது போல விடாமுயற்சி இல்லாதவன் உதவுகின்ற தன்மையும் நிறைவேறாமல் போகும்.  
ஏல்லா மனிதர்களுமே பொதுவாகவே சுய நலம் இருந்தாலும், தன் நலத்தைக் கருதாமல் மற்றவர்களுக்காக முன் நிற்பவர்களை உலகம் கொண்டாடும். அத்தகையவர்களை திருவள்ளுவர் எவ்வாறு குறிப்பிடுகிறார்.
இன்பம் விழையான் வினைவிழைவான் தன்கேளிர்
துன்பம் துடைத்தூன்றும் தூண் -615
தன்னுடைய இன்பத்தை விரும்பாமல், எடுத்த செயலை முடிப்பதையே விரும்புகிறவன் தன்னுடைய துன்பத்தை மட்டுமல்லாது தன் சுற்றத்தாரின் துன்பத்தையும் போக்கி அவர்களைத் தாங்கும் தூண் போலாவான் என்கிறார். சுருக்கமாக தெளிவுபடுத்த வேண்டும் என்றால், ஒருவன் தன்னார்வமாக , தான் வாழும் பகுதியில் சாக்கடை நிரம்பி வழிகின்றது. அந்தப் பகுதியில் இருப்பவர்கள் மூக்கை மூடிக் கொண்டு கடந்து செல்லும் போது, சம்மந்தப்பட்ட அதிகாரிகள் ஒருவேளை அலட்சியம் காட்டுவார்கள் அலைய விடுவார்கள் என்ற நிலையை உணர்ந்திருந்தாலும், அதற்கு உரிய மனுக்களையும் நடக்கவில்லையென்றால் புகாரையும் அளித்து அந்த செயலினை அவர் செய்யும் போது, அவருடைய பிரச்சனையும் தீருகிறது. அவரைச் சுற்றியுள்ளவர்களின் பிரச்சனையும் தீர்க்கப்படுகிறது.

தொடர்ந்து பார்ப்போம்...

குறிப்பு: இணைக்கப்பட்டுள்ள படங்கள் மற்றும் காணொலி ஆகியவற்றை செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பத்தில் உருவாக்கியுள்ளேன். பிழையிருப்பின்  மற்றும் தாமதத்திற்குப் பொறுத்துக் கொள்க.

நன்றி

https://www.youtube.com/@AAAInfotainment

தோப்பு

Tuesday, 7 October 2025

திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்-90: ஊக்கமுடைமை:

திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்-90: 

ஊக்கமுடைமை:

கடந்த வாரம் ஊக்கமுடைமை அதிகாரத்தின் முதல் பகுதியைப் பார்த்தோம். இந்த வாரம் அதன் பிற்பகுதியைக் காண்போம். எண்ணம் போல் வாழ்க்கை என்று கேள்விப்பட்டிருப்போம். பலரும் அதனை உணர்ந்திருப்பர். அதே போல் எதிர்மறை எண்ணங்களைத் தவிர்க்க வேண்டும் என்றும் குறிப்பிடுவர். எதிர்மறையாகப் பேசுவதையும் தவிர்க்க வேண்டும் என்றும் குறிப்பிடுவதுண்டு, ஏனெனில் ‘ஒரு சொல் வெல்லும், ஒரு சொல் கொல்லும்” என்ற நம்பிக்கையின் வெளிப்பாடே அது. ஆதலால், எந்த நிலையிலும் நேர்மறையாக எண்ணும் போதும் செயல்படும் போதும் நமக்கான முன்னேற்றத்தினை கண்கூடாகக் காண முடியும். முன்னேற்றம் என்றால் சிலர் பொருளாதார அளவுகோலையேக் கொள்கின்றனர். எப்போதும் முன்னேற்றம் என்பது தன்னுடைய முயற்சியில் பொருளாதாரத்திலோ, தொழில் ரீதியாகவோ உயர்வினைக் கண்டாலும் மனதளவில் ஏற்படும் முன்னேற்றத்தை அல்லது விளைவுகளை அவர் எவ்வாறு கொள்கிறார் என்பதிலேயே அமைகிறது. ஏனெனில் பணம் நிறைய சேர்ந்தும் மன உளைச்சலுடன் இருப்பவர்களைப் பார்க்க முடிகிறது. இச்சூழலில் இருப்பவர்கள் செந்நாப்போதரின் வார்த்தைகளை புரிந்து கொள்வது சாலச் சிறந்தது. பின்வரும் குறளில் திருவள்ளுவர் குறிப்பிடுவதாவது

 உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது 

தள்ளினுந் தள்ளாமை நீர்த்து -596 

நமக்கெல்லாம் மிகப் பரிச்சயமான இந்தக் குறளில் நினைக்கக்கூடியவற்றை அல்லது எண்ணக்கூடியவை எல்லாம் உயர்ந்த நினைப்பாகவே இருக்க வேண்டும், ஒரு வேளை அந்த நிலை கைகூடாத நிலையிலும், அப்படி நினைப்பதை மட்டும் கைவிடவேக் கூடாது என்கிறார். சாலமன் பாப்பையா அவர்கள் உரையில் குறிப்பிடும் போது ‘எண்ணியபடி வேறு காரணங்களால் நிறைவேறாமல் போனாலும், பெரியோர் நம்மைப் பாராட்டுவார், ஆகவே அது நிறைவேறியதாக கருதப்படும்” என்கிறார். திருவள்ளுவரை இந்த வகையினர் என்று பிரிக்க இயலாதவாறு பலதுறையிலும் சிறந்து விளங்கியவர். அவருடைய குறளில் தான் எத்தனை அணிகள், உவமைகள், கருத்துக்கள், தத்துவங்கள் மற்றும் ஒப்புமைகள் என்று பலவாறு பெருமைப்படும் அளவிற்கு அடுக்கிக் கொண்டே செல்லலாம், ஒருவருடைய ஊக்கம் என்பது எப்படி இருக்க வேண்டும்? சிலர் வாழ்க்கையில் எவ்வளவு வலியைப் பெறுகின்றனர்? எவ்வளவு சோகங்களை அனுபவிக்கின்றனர்? எவ்வளவு துரோகங்களை எதிர்கொள்கின்றனர்? அவற்றை எப்படிக் கடந்து செல்வது. இதோ, கீழே வள்ளுவர் உரைக்கிறார்... 

சிதைவிடத்து ஒல்கார் உரவோர் புதையம்பிற் 

பட்டுப்பா டூன்றுங் களிறு -597 

அதாவது போரில், தன்னுடைய உடம்பில் தன் உடம்பே மறையும் அளவிற்கு அம்புகளால் புண்பட்ட போதும், யானையானது தன் தொடர்ந்து முன்னேறிச் சென்று தன் பெருமையை நிலை நிறுத்தும்; அதுபோல ஊக்கம் உடையவர் அழிவிலும் தளர மாட்டார்கள் என்கிறார். எவ்வளவு இடர் வந்த போதிலும் மனதில் திடமான ஊக்கம் உடையவர் முன்னேறிச் செல்வர் என்பதற்கு எவ்வளவு அருமையான ஒரு உதாரணம்! வள்ளல் என்று ஒருவர் எவ்வாறு போற்றப்படுகிறார். இல்லை என்று ஒருவர் வரும் போது தன்னிடம் இருப்பதில் இருந்து கிள்ளிக் கொடுப்பதல்ல கொடை, அள்ளிக் கொடுப்பதே ஆகும். இந்தக் கதையை நான் கேட்டதுண்டு, ஒரு முறை அர்ஜீனன் கிருஷ்ணரிடம், நான் நிறைய கொடைக் கொடுக்கிறேன். ஆனால், கர்ணனைத்தான் எல்லோரும் புகழ்கின்றனர் என்று வருத்தப்பட்ட வேளையிலே, கிருஷ்ணன் அர்ஜீனனை அஸ்தினாபுரம் பகுதி நோக்கி இரதத்தை விட்டார். அப்போது அவருடைய வலிமையால் அங்கு இருந்த மலையை தங்க மலையாக மாற்றினார், பிறகு, அர்ஜீனரிடம் இப்போது இந்த மலை உனக்குச் சொந்தம், நீ விரும்பும் வகையில் கொடையளிக்கலாம் என்றார், உடனே, அர்ஜீனன், ஊருக்குச் சென்று அனைத்து மக்களையும் வரச் செய்து, இந்த மலையில் இருந்து தங்கங்களை வெட்டி எடுத்துக் கொள்ளச் சொன்னார். உடனே மக்கள் மலை மலையாக அங்குக் குவிந்தனர். அனைவரும் அந்த இடத்தில் தங்கம் வெட்டுவதையே குறியாக இருந்தனர். அங்கு அர்ஜீனன் இருந்ததையோ, கிருஷ்ணன் இருந்ததையோக் குறித்துக் கவலைப் படவில்லை. அவர்களுக்கு தள்ளுமுள்ளு ஏற்படும் பிரச்சனையாகிவிடும் என்று சமமாகப் பகிர்ந்தளிக்க வேண்டும் என்று அர்ஜீனரும் சேர்ந்து அவர்களோடு சேர்ந்து வெட்டி சரிசமமாக பிரிக்க முயன்று களைப்புற்றார். ஆனாலும், அனைவருக்கும் கொடுத்து முடியவில்லை. களைப்போடு கிருஸ்ணரை நோக்கினார். பிறகு, கிருஷ்ணன், கர்ணனை வரவழைத்து, கர்ணனுக்கும் அதே போன்று மலையைப் பரிசளித்தார். கர்ணன் அந்த மலையைப் பார்த்தபிறகு கிருஷ்ணருக்கு நன்றி தெரிவித்து விட்டு வந்து அந்த ஊரில் உணவகம் வைத்திருந்த குடும்பத்தினை வரவழைத்தார். வரவழைத்து இந்த ஊரில் யாரும் பசியோடு இருக்கக்கூடாது. இந்த ஊரைக் கடந்து செல்பவர்களும் வயிறார சாப்பிட வேண்டும் அந்தப் பணியை நீங்கள் தான் செய்ய வேண்டும். இந்தத் தங்க மலை முழுவதும் உங்களுக்குத் தான் உங்கள் சேவைக்கான செலவினத்தை இந்த மலையை வெட்டி மேற்கொள்ளுங்கள் என்று ஆணையிட்டடர். கிருஷ்ணர் அர்ஜீனரைப் பார்த்தார். புhர்த்தாயா, நீ இதை எப்படி பகிர்ந்தளிப்பது என்று உன் அறிவின் மூலம் எண்ணினாய். ஆனால், எந்த வித சிரமம் இல்லாமல் மக்கள் நிலையில் இருந்து நிரந்தத் தீர்வினை உடனே வழங்கி விட்டான்” என்றார். இந்தக் கதை உண்மையில் நடந்ததா என்பது தெரியாது, நான் கேள்விப்பட்டது. அதிலும் நினைவில் இருப்பதை வைத்து எழுதியுள்ளேன். இதில் முக்கியமான விடயம் என்னவென்றால் வள்ளல் தன்மை தான் உடையவன் என்று எண்ணத்தில் கொடுப்பதில்லை. யோசிக்காமல் வருபவருக்குக் கொடுப்பதேயாகும். பல பேரும், தாங்கள் கொடை வழங்குகிறோம் என்ற பெயரில் கடமைக்கு செய்வதுண்டு. ஆனால், பெருமன்னர்கள் இருந்த போதும், ஏன் கடையேழு வள்ளல்கள் பெயர் பெற்றனர், அவர்கள் தானம் வழங்குகையில் எந்தச் சலனமும் மனதில் ஏற்றிக் கொள்ளவில்லை, பார்த்தனர், உணர்ந்தனர், அளித்தனர் அவ்வளவே. சில சமயம் முட்டாள் தனமாகக் கூடத் தோன்றும். ஏன் முல்லைக் கொடிக்கு ஒரு கம்பை நட்டால் அது அதனைப் பற்றி ஏறியிருக்குமே தேரை ஏன் கொடுத்தார் பாரி?, பாடலுக்காக பாணனுக்கு குறும்பொறை நாட்டையா எழுதி கொடுப்பான் ஓரி ? என்றெல்லாம் நமக்குத் தோன்றும், எந்தச் சலனமும் இல்லாமல் கொடுத்ததால் தான் அவர்கள் வள்ளல்கள் எனப் பெயர் பெற்றனர். இதனையே வள்ளுவர் குறிப்பிடுகிறார். 

உள்ளம் இலாதவர் எய்தார் உலகத்து 

வள்ளியம் என்னுஞ் செருக்கு -598 

கலைஞர் அவர்கள் தம்முடைய உரையில் மேற்கண்ட குறளுக்குக் குறிப்பிடுவதுபோல அள்ளி வழங்கும் ஆர்வம் இல்லாத ஒருவர் தம்மை வள்ளல் எனப் பெருமைப்பட்டுக் கொள்ள வழியே இல்லை என்கிறார். ஊக்கம் என்பது ஒருவருடைய உருவத்தை வைத்து அமையுமா? இல்லை, ஊக்கம் என்பது உள்ளார்ந்த உணர்வு, அது உருவத்தை வைத்து வருவதில்லை. ஆதலால், ஒருவரின் வெளித்தோற்றத்தை வைத்து இவர் ஊக்கமுடையவர் என்று அறுதியிட்டுக் கூற முடியாது. பின்வரும் குறளில் தெளிவாக ஐயன் குறிப்பிடுகிறார். 

பரியது கூர்ங்கோட்டது ஆயினும் யானை 

வெரூஉம் புலிதாக் குறின் -599 

என்னதான் யானையானது பெரிய உடலையையும் வலிமையான கூர்மையான தந்தங்களைக் கொண்டிருந்தாலும், மனதில் ஊக்கம் உடைய புலி தன்னைத் தாக்க வரும் போது அஞ்சி நிற்கும் என்கிறார். 

அடுத்தக் குறளில் 

உரமொருவற்கு உள்ள வெறுக்கை அஃதில்லார் 

மரம்மக்க ளாதலே வேறு-600 என்கிறார். 

ஊக்கமே இல்லாமல் வாழும் ஒருவரை எப்படி பொருத்துவது என்ற நிலையில் இந்த உதாரணத்தைக் கொடுத்துள்ளார். எல்லோரும் செல்வம் நோக்கி ஓடிக் கொண்டிருக்கின்றனர். ஆனால், உண்மையான செல்வம் என்பது அவர் கொண்டுள்ள ஊக்கமே ஆகும். அப்படி ஊக்கம் இல்லாமல் இருக்கும் ஒரு நபர் உருவத்தால் மனிதராக இருந்தாலும் அவர்கள் மரங்களைப் போன்றோரே ஆவார்.

தொடர்ந்து பார்ப்போம்...

குறிப்பு: இணைக்கப்பட்டுள்ள படங்கள் மற்றும் காணொலி ஆகியவற்றை செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பத்தில் உருவாக்கியுள்ளேன். பிழையிருப்பின்  மற்றும் தாமதத்திற்குப் பொறுத்துக் கொள்க.

நன்றி

https://www.youtube.com/@AAAInfotainment

தோப்பு

Wednesday, 1 October 2025

திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்-89:

திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்-89:
ஊக்கமுடைமை:
திருவள்ளுவர் அவர்கள் உடைமை என்னும் தலைப்பில் எழுதிய அதிகாரங்களைப் பற்றிப் பார்க்கின்றோம். கடந்த வாரங்களில் அன்புடைமை;, அறிவுடைமை, அடக்கமுடைமை, ஒழுக்கமுடைமை, பொறையுடைமை மற்றும் அருளுடைமை பற்றிப் பார்த்தோம். இந்த வாரம் ஊக்கமுடைமை என்னும் அதிகாரத்தைப் பற்றிப் பார்ப்போம்.
‘ஊக்கம்” என்பதை வெறும் ‘ஆற்றல்”அல்லது ‘முயற்சி” என்று விளக்கம் கொடுப்பது அதனுடைய முழுப் பரிமாணத்தையும் உணர்த்தாது. இவ்வதிகாரத்தில் ஐயன் வள்ளுவர் உணர்த்துவது போல ‘ஊக்கம்” என்பது மன எழுச்சி, உள்ளார்ந்த உந்துதல், அசைக்க முடியாத மனத்திடம் மற்றும் ஒரு செயலைச் செய்து முடிக்க வேண்டும் என்ற துடிப்பு ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு பன்முகக் கருத்தாகும். 
இவ்வதிகாரத்தின் மையக்கருத்து இந்த உள்ளார்ந்த உந்துதலே ஒரு மனிதன் கொண்டிருக்கக்கூடிய ஒரே உண்மையான, நிலையான மற்றும் வரையறுக்கும் ‘உடைமை” என்பதாகும். மற்ற எல்லாப் பொருள்சார் உடைமைகளும் இரண்டாம் பட்சமானவை மற்றும் இந்த ஊக்கத்தைச் சார்ந்தே அவற்றின் மதிப்பும் இருப்பும் அமைகின்றன. 
ஊக்கமுடைமை அதிகாரத்தை ‘அரசியல்” என்ற இயலில் வைத்ததன் மூலம் திருவள்ளுவர் ஒரு ஆழமான அரசியல் தத்துவத்தை முன்வைக்கிறார். ஒரு தலைவனின் அதன் விளைவாக ஒரு அரசின் உண்மையான பலம், கருவூலத்திலோ, படையிலோ அல்லது நிலப்பரப்பிலோ இல்லை. மாறாக, அதன் ஆட்சியாளரின் அசைக்க முடியாத மனவுறுதியிலும் ஊக்கத்திலுமே தங்கியுள்ளது. ஒரு அரசினுடைய மற்ற அனைத்து அதிகார வடிவங்களும் இந்த முதன்மையான பண்பின் விளைவுகளே. ஊக்கமில்லாத ஒரு தலைவன், தன்னிடம் உள்ள செல்வத்தையே காக்கும் ஆற்றல் இல்லாதவனாக இருப்பான், எனவே அவனால் நாட்டின் செல்வத்தையும் பாதுகாக்க இயலாது. ஆக, ஊக்கமுடைமை என்பது தனிமனித முன்னேற்றத்திற்கான ஒரு பண்பு மட்டுமல்ல, அது அரசாளுகையின் அடிப்படைக் கருவியுமாகும். 
உடையர் எனப்படுவது ஊக்கம் அஃதி;ல்லார்
உடையது உடையரோ மற்று -591 என்கிறார். மேலே சொல்லிய உதாரணம் இந்தக் குறளுக்குப் பொருந்தும். ஒருவர் பெற்றிருக்கின்றார் என்று சொல்லத்தக்க சிறப்புடையது ஊக்கமாகும், ஊக்கம் இ;ல்லாதவர் வேறு எதைப் பெற்றிருந்தாலும் அதை உடையவர் ஆவரோ என்கிறார் திருவள்ளுவர். அடுத்தக் குறளில் ஊக்கமுடையே பிரதானம் என்பதை வலியுறுத்துகிறார்.
உள்ளம் உடைமை உடைமை பொருளுடைமை
நில்லாது நீங்கி விடும் -592
ஒருவருக்கு அவர் கொண்டிருக்கும் ஊக்கமே நிலையான செல்வம் ஆகும், மற்றைய செல்வங்கள் எல்லாம் நிலைத்திருக்காமல் ஒரு காலத்தில் நீங்கி விடக் கூடியது என்கிறார். 
எவர் ஒருவர் மிகுந்த ஊக்கத்துடன் இருக்கிறாரோ, அவர் தன்னுடைய எந்த இழப்பையும் கடந்து செல்ல இயலும். மிகுந்த ஊக்கம் உடையவன், துணிந்து முடிவு எடுக்கக் கூடியவராக இருப்பார். தான் பணிபுரியும் இடத்தில், தனக்கு உகந்தது அல்ல என்பதை உணர்ந்தார் என்றால், துணிந்து தனக்குப் பிடித்த இடத்திற்கு தற்போது வாங்கும் ஊதியத்தை விட அதிக ஊதியத்திற்கு செல்லக் கூடும். அல்லது தொழில் துவங்கக் கூடும். துவண்டு உட்கார்ந்து விட மாட்டார். தான் அனைத்தையும் இழந்து விட்டோம் என்று தலையில் கை வைத்துக் கொண்டும் உட்கார மாட்டார். வெகுவிரைவில் எப்படி முன்னேற வேண்டும் என்று அதற்காக உழைப்பவராக இருப்பார். இக்கருத்தை வலியுறுத்தி ஐயன் அடுத்தக் குறளி;ல் வலியுறுத்துகிறார். 
ஆக்கம் இழந்தேமென்று அல்லாவார் ஊக்கம்
ஒருவந்தம் கைத்துடை யார் -593 என்கிறார். 
உறுதியான ஊக்கத்தையே தம்முடைய கைப்பொருளாகப் பெற்றவர்கள், தன்னுடைய செல்வத்தை இழந்த போதும், எல்லாவற்றையும் இழந்து விட்டோமே என்று நினைத்து வருந்த மாட்டார்கள். 
அடுத்தக் குறளில் சொல்வது போல, ஒருவர் மிகுதியான ஊக்கம் இருக்கிறது என்றால், அவர் துணிந்து முடிவெடுப்பார், துணிந்து முடிவெடுப்பவருக்கு, வெற்றி எளிதில் வயப்படும், ஏனெனில், அவர் சொல்லிய வண்ணம் செயல்வீரராக இருப்பர் என்பதை வலியுறுத்துகிறார். 
ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா
ஊக்க முடையா னுழை -594 என்கிறார். அதாவது தளராத ஊக்கம் உடையவர்களிடத்தினிலே ஆக்கம் தானே வந்து அவர் இருக்கும் இடத்திற்கு வழி கேட்டுக் கொண்டு போய் அவரிடம் சென்று நிலையாகச் சேர்ந்திருக்கும் என்கிறார். 
அடுத்து வருவது, நமக்கு நன்கு பரிச்சயமான குறள்
வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத் தனையது உயர்வு -595 என்கிறார். தாமரைக் குளத்தில் நீரின் அளவு எந்த அளவிற்கு அதிகமாகிக் கொண்டிரக்கிறதோ அதே அளவு, நீர்ப்பூக்களின் தண்டின் நீளமும் உயரமும், அது போலவே, மக்களுடைய உயர்வின் அளவும் அவருடைய ஊக்கத்தின் அளவினதே ஆகும் என்கிறார்.

தொடர்ந்து பார்ப்போம்...
குறிப்பு: இணைக்கப்பட்டுள்ள படங்கள் மற்றும் காணொலி ஆகியவற்றை செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பத்தில் உருவாக்கியுள்ளேன். பிழையிருப்பின்  மற்றும் தாமதத்திற்குப் பொறுத்துக் கொள்க.
நன்றி

https://www.youtube.com/@AAAInfotainment
தோப்பு