Tuesday, 28 January 2025

திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்- 54:







திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்- 54:

குறிப்பறிவுறுத்தல்
கடந்த வாரம் அவர்வயின் விதும்பல்   அதிகாரத்தில் இருந்து பார்த்தோம். இந்த வாரம்; குறிப்பறிவுறுத்தல் அதிகாரத்தில் இருந்து பார்ப்போம். குறிப்பறிவுறுத்தல் என்பது காதலர்கள் தன் குறிப்புகளை தெரிவித்தல் என்பதாகும். 
கரப்பினுங் கையிகந் தொல்லாநின் உண்கண்
உரைக்கல் உறுவதொன் றுண்டு -1271
தன் காதலியின் குறிப்பிலிருந்து காதலனின் கூற்று மேற்கூறிய பாடலாகும்இ நீ வெளியே சொல்லாமல் மறைக்கப் பார்த்தாலும்இ உனது கண்கள் தடைகள் கடந்து சொல்லக்கூடிய செய்தி ஒன்று உண்டு; அதுதான் பிரிவை விரும்பாத காதல்” 
கண்ணிறைந்த காரிகைக் காம்பேர்தோட் பேதைக்குப் 
பெண்நிறைந்த நீர்மை பெரிது-1272
மேற்கூறியக் குறளும் காதலன் தன் காதலியைக் குறித்த வர்ணனையாகும். ‘கண் நிறைந்த பேரகும்இ மூங்கில் போன்ற அழகிய தோள்களும் உடைய என் காதலிக்குஇ பெண்மைத் தன்மையானது நிறைந்து விளங்கும் இயல்பானது மிகுதியாக உள்ளது”.
மணியில் திகழ்தரு நூல்போல் மடந்தை
அணியில் திகழ்வதொன்று உண்டு -1273
குறிப்பறிதலுக்கு உதாரணமாக இந்தக் குறள் உள்ளதுஇ ‘நூலில் கோத்த மணியினுள்ளே காணப்படுகின்ற நூலைப் போலஇ என்னுடைய காதலியின் அழகிற்குள் கிடந்து என்னை மயக்கும் வெளியே தெரியும் குறிப்பு உள்ளது”
முகைமொக்குள் உள்ளது நாற்றம்போல் பேதை
நகைமொக்குள் உள்ளதொன் றுண்டு -1274
காதலியின் புன்முறுவலுக்கு இப்படியொரு விளக்கத்தை கேள்விப்பட்டதில்லைஇ’மலராமல் இருக்கும் அரும்புகளுக்குள் நறுமணம் அடங்கியிருப்பது போல என்னுடைய காதலியின் புன்னகையென்ற அரும்புக்குள் அவளது காதலனைப்  பற்றிய எண்ணத்தின் குறிப்பும் உள்ளது” என்கிறார். 
செறிதொடி செய்திறந்த கள்ளம் உறுதுயர்
தீர்க்கும் மருந்தொன்று உடைத்து -1275
மேற்கூறிய குறளில் காதலனுக்கு மருந்தாக அமைந்தது காதலியின் குறிப்பு என்கிறார். ‘நெருங்கிய வளையல்களை அணிந்திருக்கும் என் காதலி செய்து விட்டுச் சென்ற கள்ளமான குறிப்பானதுஇ என்னுடை மிகப் பெரிய துயரத்தைத் தீர்க்கும் ஓர் மருந்தை உடையதாக இருக்கின்றது” என்கிறார். 
பெரிதாற்றிப் பெட்பக் கலத்தல் அரிதாற்றி
அன்பின்மை சூழ்வ துடைத்து -1276
மேற்கூறிய குறள்இ தலைவியின் பார்வையில் இருந்து தலைவன் பிரிவு குறித்த குறிப்பை அறிந்து கொள்வதாகக் காட்டுகிறார். ‘ஆரத் தழுவி அளவற்ற அன்பு காட்டி அவர் என்னைக் கூடுவது என்பது அவர் மீண்டும் என்னைப் பிரிந்துச் செல்லப் போகின்ற குறிப்பை உணர்த்துவது போல் இருக்கிறதே” என்று தலைவி நினைப்பதாகக் குறிப்பிடுகிறார்.
தண்ணந் துறைவன் தணந்தமை நம்மினும் 
முன்னம் உணர்ந்த வளை -1277
மேற்கூறிக குறளும் தலைவனின் குறிப்பை தலைவி உணர்ந்து கொண்டதாகவே காட்டுகிறார்.’ குளிர்ந்த நீர்த் துறைக்கு உரியவனாகிய நம் காதலன் என்னை உடலால் கூடி உள்ளத்தால் பிரிந்திருப்பதை என்னைக் காட்டிலும் என் கை வளையல்கள் முன்னமே அறிந்து கழன்று விட்டன” என்கிறார். 
நெருநற்றுச் சென்றார்எம் காதலர் யாமும்
எழுநாளேம் மேனி பசந்து -1278
தலைவியின் உடலில் ஏற்பட்ட மாற்றத்தை குறிப்பால் உணர்ந்த தலைவி சொல்வதாவது ‘நேற்றுத் தான் என்னுடைய காதலர் எம்மைப் பிரிந்து சென்றால்இ நானும் அவரைப் பிரிந்து ஏழுநாட்கள் ஆனவரைப் போல மேனி பசலை படர்ந்தவராய் இருக்கின்றோமே?”
தொடிநோக்கி மென்தோளும் நோக்கி அடிநோக்கி
அஃதாண் டவள்செய் தது -1279
மேற்கூறிய குறள்இ தலைவனை தலைவி தன் குறிப்பால் அன்பின் மிகுதியால் மிரட்டுவது போல் அமைத்துள்ளார். ‘நீ என்னைப் பிரிந்தால் இவைகள் என்னுடன் இருக்காது என்று கை வளையல்களைப் பார்த்தாள். துணையாக தன் மெல்லிய தோள்களும் மெலியும் என அவற்றைப் பார்த்தாள்இ இவை இரண்டும் நடக்காதபடி நீர் நடந்து கொள்ள வேண்டும் என்று தன் பாதங்களையும் பார்த்தாள்இ பிரிந்தால் நானும் உடன் வருவேன் என்ற ஒரு குறிப்பும் இதனுள் இருக்கிறது” என்கிறார். 
பெண்ணினால் பெண்மை உடைத்தென்ப கண்ணினால்
காமநோய் சொல்லி இரவு -1280
பெண்மைக்கு மெருகூட்டுவது எது? ‘கண்ணினால் தன்னுடைய காதல் நோயினைத் தெரிவித்து குறிப்பால் பிரியாமல் இருக்குப் படி கேட்டுக்கொள்ளுதல்இ பெண் தன்மைக்கும் மேலும் சிறந்த பெண் தன்மை உடையது என்கிறார். 
தொடர்ந்து பார்ப்போம்...
குறிப்பு: இணைக்கப்பட்டுள்ள படங்கள் மற்றும் காணொலி ஆகியவற்றை செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பத்தில் உருவாக்கியுள்ளேன். பிழையிருப்பின் பொறுத்துக் கொள்க.
நன்றி

No comments:

Post a Comment