திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்-120:
திருக்குறளில் அரசியல்:
இடன் அறிதல்:
திருக்குறளில் அரசியல் என்ற தலைப்பில் பார்த்து வருகிறோம்,
அரசியலில் ‘இடன் அறிதல்” என்ற அதிகாரத்தின் முற்பகுதியில் அரசியல் சார்ந்த கருத்துகளை திருவள்ளுவர் என்ன குறிப்பிடுகிறார் என்பதனை கடந்த வாரம் பார்த்தோம். இந்த வாரம் தொடர்ந்த குறட்பாக்களைப் பார்ப்போம்.
மல்யுத்தத்தில் பொதுவாக எதிராளியின் பலவீனம் தெரிந்து விட்டாலோ அல்லது உடலின் ஏதாவது ஒரு பாகத்தில் அடிபட்டது என்றாலோ, மறுபடியும் மறுபடியும் அந்த இடத்திலேயே தாக்கி எதிரியை வலுவிழக்கச் செய்து எளிதில் மல்யுத்த வீரர் வெற்றி பெறுவர்.
இந்தியாவையும் பாகிஸ்தானால் இமயமலை வழியாக வந்து தாக்குவதென்பது மிக கடினமான காரியமாக இருக்கிறது. கார்கில் போரிலும் இந்தியாவை கைப்பற்றலாம் என்று நினைத்த பாகிஸ்தானுக்கு அரணாக இருந்தது இமயமலையின் சூழல் மற்றும் நமது வீரர்களின் தீரம்.
உலகில் பல நாடுகளுக்கு எளிதில் போரில் வெல்ல முடியாத அளவிற்கு அவர்களின் அமைவிடம் அல்லது இயற்கை இடங்களான மலைகள், ஆறுகள், பாலைவனங்கள், அடர்த்தியான காடுகள் மற்றும் கடுமையான காலநிலை ஆகியவை பாதுகாப்பாக உள்ளது.
உதாரணமாக சொல்ல வேண்டுமெனில், இந்தியா, நேபாளம், பூடான், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் சீனா ஆகியவற்றிற்கு இமயமலை மற்றும் இந்துகுஷ் மிக உயரமான மலைகள், குறுகிய பாதைகள், மெல்லிய காற்று போன்றவை விமானங்கள் மற்றும் படைகள் ஊடுறுவிச் செல்வதற்கு மிக சிரமத்தை ஏற்படுத்துகிறது.
சுவிட்சர்லாந்திற்கு ஆல்ப்ஸ் மலைகள் பாதுகாப்பாக இருக்கின்றன.
ஈரானிக்கிற்கு ஜாக்ரோஸ் மற்றும் அல்போர்ஸ் மலைகள் பாதுகாப்பு அரண்களாக இருக்கின்றன. இதனை புரிந்து கொள்ளாவிட்டால் இந்த நாடுகளை வெற்றி கொள்வது என்பது மிக அரிதான விடயமாகும்.
இதே போன்று ஐக்கிய நாடுகள், ஜப்பான், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஐஸ்லாந்து போன்ற நாடுகளுக்கு கடல்கள் மற்றும் தீவு அமைப்புகள் அரணாக இருக்கின்றன. இந்த நாடுகளை வெல்ல வேண்டுமெனில், மிகப் பெரிய கடற்படை தேவைப்படும். ஆங்கில கால்வாய் பிரிட்டனை பல ஆண்டுகளாகப் பாதுகாத்தது.
அமெரிக்காவிற்கு பசிபிக் மற்றும் அட்லாண்டிக் பெருங்கடல்கள் மிகப் பெரிய அரணாக இருக்கின்றன.
மங்கோலியா மற்றும் சீனா நாடுகளுக்கு கோபி பாலைவனமும், ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு தஸத்-இ-கவிர், தஸ்த்-இ-லட் மற்றும் ஆஸ்திரேலியாவின் பல பகுதிகளில் அதிகப்படியான வெப்பம் நீர் இல்லாமை போன்றவை அரணாக இருக்கின்றன.
‘உலகின் நுரையீரல்” என்று அழைக்கப்படும் அமேசான் காடுகளில் உள்ள அடர்த்தியான செடிகள், பல தாவரங்கள் அல்லது சூழல் ஏற்படுத்தும் நோய்கள் அறிய முடியா உயிரினங்களின் தாக்கங்கள் பிரேசில் நாட்டின் மிகப் பெரிய அரணாக இருக்கின்றது. சைபீரியாவின் பெரிய காடுகள் மற்றும் கடுங்குளிர் மற்றும் சதுப்புப் பகுதிகள் சீனா, மங்கோலியா மற்றும் கஜகஸ்தானிற்கு மிகப் பெரிய பாதுகாப்பு அரணாக உள்ளது.
ஏற்கனவே நாம் பார்த்தபடி ரஷியாவின் குளிர், மிகப் பெரிய நிலப்பரப்பு, காலநிலை ஆகியவை ரஷ்யாவை காத்து நிற்கின்றது.
ஆர்க்டிக் மற்றும் டுண்ட்ரா பகுதிகள் கனடாவினை காத்து நிற்கின்றது.
இது போன்று நாடுகளின் இடஅமைவுகள் மற்றும் வீரர்களின் போர்த்pறம் ஆகியவை எதிரி நாடுகளுக்கு நிறைய இழப்புகளையும் செலவுகளையும் ஏற்படுத்தும். ஆகவே, ஒரு நாட்டினை வெல்வதற்கு இடத்தைத் தெரிந்து செயல்படுதல் மிக முக்கியமான ஒன்றாக இருக்கிறது. திருவள்ளுவரும் இதனையே பின்வரும் குறளிலும் குறிப்பிடுகிறார்.
எண்ணியார் எண்ணம் இழப்பர் இடனறிந்து
துன்னியார் துன்னிச் செயின்-494
அதாவது, தகுதியான இடத்தை ஆராய்ந்து தொடர்ந்து தாக்கினால், அவரை வெல்லலாம் என்று எண்ணியிருந்த பகைவர் தன் எண்ணத்தில் தோல்வியடைவார் என்கிறார்.
ஓவ்வொரு வாரமும் இந்தத் தொடர் சனிக்கிழமை அன்று வெளிவரும் என்பதனைத் தெரிவித்துக் கொள்கின்றேன். உங்கள் தொடர் ஆதரவிற்கு நன்றி.
தொடர்ந்து பார்ப்போம்.
குறிப்பு: இணைக்கப்பட்டுள்ள படங்கள் மற்றும் காணொலி ஆகியவற்றை செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பத்தில் உருவாக்கியுள்ளேன். பிழையிருப்பின் பொறுத்துக் கொள்க.
நன்றி
https://www.youtube.com/@AAAInfotainment
தோப்பு