Wednesday, 24 December 2025

திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்-101:

திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்-101:
திருக்குறளில் அரசியல்: 
திருக்குறளில் இதுவரை 100 வாரங்களைக் கடந்துள்ளோம். இதற்கு மேலான ஆதரவை அளித்த அனைத்து தோழர்களுக்கும் இந்த நேரத்தில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன். தொடர்ந்து தங்களுடைய மேலான ஆதரவை அளிக்கக் கேட்டு;க் கெ
திருக்குறளில் அரசியல் என்ற தலைப்பில் பார்த்து வருகிறோம். அதில்  அரசின் சிறப்பியல்புகளாக சிலவற்றை கடந்த வாரத்தில் பொருட்பாலில் இறைமாட்சி என்ற அதிகாரத்தில் இருந்து பார்த்தோம். 
இறைமாட்சியின் இறுதிப்பகுதியைப் பார்ப்போம். 
இன்று, ஊடகங்களில் குறிப்பாக சமூக வலைத் தளங்களில் பல பொறுப்பற்ற வார்த்தைகளையும் படிக்கவும் கேட்கவும் தகாத வார்த்தைகளையும் பார்க்கின்றோம். ஒரு விடயத்தை பொறுமையாகக் கையாளத் தெரியாதவர்களால் இது பெரிதும் நிகழ்கின்றது. ஆனால், நன்கு கற்றோர், அவர்களுக்கு பொறுப்புடனும், பொறுமையுடனும், தெளிவாகவும் தங்கள் கருத்துக்களை எடு;த்துரைத்து வருகின்றனர். அவர்களை நேரால் பார்த்தால் நமக்கே அவர்களைப் பாராட்டத் தூண்டும். இத்தகையரே ஆளுவதற்கும் தகுதியுடையவர்களாக இருக்கிறார்கள். திருவள்ளுவரும் இவர்களைத் தான் பாராட்டுகிறார் பின்வரும் குறளில்,
செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன்
கவிகைக்கீழ்த் தங்கும் உலகு – 389 என்கிறார். 
குறைக் கூறும் தகுதி மிக்க பெரியோரின் சொற்கள் கேட்பதற்கு வெறுப்பாயிருந்தாலும் தனக்கு ஏற்பன அல்ல என்றாலும் வருவதை எண்ணிப் பொறுத்துக் கொள்ளும் பண்பினை உடைய வேந்தனின் குடை நிழலின் கீழ் உலகமே தங்கும் என்கிறார். 
கொடையளி செங்கோல் குடியோம்பல் நான்கும் 
உடையானாம் வேந்தர்க் கொளி -390
கொடையளிப்பதும், இரக்க குணமும், நடுநிலை தவறாமல் ஆட்சி செய்து செங்கோல் கொண்டிருப்பதும், மக்களைப் பேணிக் காப்பது ஆகிய நான்கையும் சிறப்பாய்ப் பெற்றவன் வேந்தர்க்கு எல்லாம் ஒளிவிளக்குப் போன்றவன் ஆவான் என்கிறார். 
அடுத்த அதிகாரங்களான கல்வி, கல்லாமை, கேள்வி மற்றும் அறிவுடைமை ஆகியவற்றில் பெரும்பாலானாவற்றை ஏற்கனவே நாம் பார்த்து விட்டதால் குற்றங்கூறாமை என்ற அதிகாரத்தில் இருந்து பார்ப்போம். 
அதற்கு முன் மேற்கூறிய அதிகாரத்தில் இருந்து சிறப்பம்சங்களைப் பற்றி மட்டும் அரசியல் நோக்கில் பார்ப்போம். 

 

1. கல்வி: தலைவனுக்கான அடிப்படை தகுதி

அரசியலில் ஒரு தலைவன் அல்லது ஆட்சியாளன் வெறும் அதிகாரம் பெற்றால் மட்டும் போதாது; அவர் முறையான கல்வி கற்றிருக்க வேண்டும்.

·       அரசியல் தொடர்பு: ஒரு ஆட்சியாளர் சட்டங்கள், வரலாறு மற்றும் நிர்வாக முறைகளைக் கற்றிருக்க வேண்டும். (குறள் 391: கற்க கசடற...).

·       பயன்: கல்வி கற்ற தலைவரால் மட்டுமே தொலைநோக்குப் பார்வையுடன் திட்டங்களை வகுக்க முடியும். ஆட்சியாளருக்குக் கல்வி என்பது 'கண்' போன்றது; அது இல்லாமல் ஆட்சி செய்வது இருட்டில் நடப்பதற்குச் சமம்.

2. கல்லாமை: ஆட்சியின் வீழ்ச்சி

அரசியலில் அறிவற்ற அல்லது படிக்காதவர்களின் கையில் அதிகாரம் கிடைத்தால் அது நாட்டிற்குப் பெரும் அழிவைத் தரும்.

·       அரசியல் தொடர்பு: கல்லாதவர் அவையில் (சட்டமன்றம்/நாடாளுமன்றம்) பேசுவது, சூதாடும் தளம் இல்லாமல் பகடை விளையாடுவதைப் போன்றது (குறள் 401).

·       விளைவு: படிக்காத ஆட்சியாளர் எவ்வளவு பெரிய செல்வந்தராகவோ அல்லது செல்வாக்கு மிக்கவராகவோ இருந்தாலும், கற்றறிந்தவர்களின் முன்னால் அவர் மதிக்கப்பட மாட்டார். இது நிர்வாகக் குழப்பத்திற்கு வழிவகுக்கும்.

3. கேள்வி: அமைச்சர்களும் ஆலோசனைகளும்

ஒரு சிறந்த அரசியல்வாதி தான் மட்டும் படித்திருந்தால் போதாது; அனுபவமிக்க அறிஞர்களின் ஆலோசனைகளைக் கேட்கும் பண்பைப் பெற்றிருக்க வேண்டும்.

·       அரசியல் தொடர்பு: மன்னர்கள் அல்லது அமைச்சர்கள் தாங்கள் படிக்காவிட்டாலும், கற்றவர்கள் சொல்லும் அறவுரைகளைக் கேட்டறிய வேண்டும் (குறள் 414).

·       பயன்: செவி வழியாகக் கிடைக்கும் இந்த 'கேள்வி அறிவு' ஒரு தலைவருக்கு நெருக்கடியான காலங்களில் கைகொடுக்கும். மற்றவர் கருத்தைக் கேட்பது ஒரு ஜனநாயகப் பண்பாகும்.

4. அறிவுடைமை: நிர்வாகத் திறன் (Governance)

கற்ற கல்வியையும், கேட்ட ஆலோசனைகளையும் கொண்டு சரியான முடிவுகளை எடுப்பதே ஒரு சிறந்த ஆட்சியாளரின் 'அறிவுடைமை' ஆகும்.

·       அரசியல் தொடர்பு: எது வந்தாலும் அதனைச் சமாளிக்கும் திறனே அறிவு. இது பகைவர்களால் கூட அழிக்க முடியாத ஒரு கோட்டை (குறள் 421).

·       பயன்: எப்பொருள் யார் யார் வாய்க் கேட்டாலும், அதன் மெய்ப்பொருளைக் காணும் திறன் (குறள் 423) ஒரு அரசியல்வாதிக்கு மிக முக்கியம். அப்போதுதான் அவர் வதந்திகளை நம்பாமல், நாட்டின் உண்மை நிலையை அறிந்து செயல்பட முடியும்.

 தொடர்ந்து பார்ப்போம்...


குறிப்பு: இணைக்கப்பட்டுள்ள படங்கள் மற்றும் காணொலி ஆகியவற்றை செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பத்தில் உருவாக்கியுள்ளேன். பிழையிருப்பின் பொறுத்துக் கொள்க.

நன்றி

https://www.youtube.com/@AAAInfotainment

தோப்பு


No comments:

Post a Comment