Wednesday, 17 December 2025

திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்-100:

நாம் தற்போது திருக்குறளில் திருவள்ளுவரின் அரசியல் சார்ந்த கருத்துக்களைப் பார்த்து வருகிறோம். இதில் தற்போது இறைமாட்சி அதிகாரத்தில் அரசியல் குறித்தத் திருவள்ளுவரின் கருத்துக்களைப் பார்த்து வருகிறோம். 
இப்போது நாம் பார்க்க இருக்கும் குறளினை மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சியாளர்கள் பயன்படுத்துவதைக் காண முடியும். ஏனெனில், இக்குறள் அரசியலில் அவ்வளவு வலிமை வாய்ந்தது.  நல்லாட்சி என்றால் என்ன ? என்று மக்கள் புரிந்து கொள்ளவும், மக்களுக்கு எவ்வாறு நல்லாட்சி வழங்குவது? ஏன்று ஆட்சியாளர்கள் உணர்ந்து கொள்ளவும் மிகப்பெரிய விழிப்புணர்வினை விட்டுச் சென்றிருக்கிறார் திருவள்ளுவர். இக்குறளைக் காண்போமா?
இயற்றலும் ஈட்டலுங் காத்தலும் காத்த 
வகுத்தலும் வல்ல தரசு- 385 என்கிறார். 
ஒரு அரசானது, அரசாங்கத்திற்கு பொருள் வரும் வழிகளை உருவாக்குதலும், வரும் பொருட்களை சேமித்து வைத்தலும், காத்து வருவதும், காத்தவற்றை தக்கவாறு வகுத்துச் செலவு செய்வதும் எனும் இவற்றில் திறமை மிக்கதே அரசு என்கிறார். இதனை தவறும் பட்சத்தில் அரசும் பாதிக்கப்படுகிறது. அதனால் மக்களும் துன்பமடைகின்றனர். 
அடுத்தக் குறளில், மன்னனானவன் எப்படிப்பட்ட தரத்தினை (ஞரயடவைல) உடையவனாக இருக்க வேண்டும். 
இதுவரை மன்னன் என்று நாம் ஒருவேளை மனதில் வரைந்திருந்த அ;ல்லது திரைப்படங்களில் ஊடகங்களில் காட்சிப்படுத்தப்பட்ட மன்னன் என்று நினைத்தால்...
காட்சிக் கெளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல்
மீக்கூறும் மன்னன் நிலம் -386 
...மன்னன் என்பவன் அப்படி இல்லை, தன்னைக் காண வருபவர்கள் பார்க்கும் பொழுது மிக எளியவளானகவும், கடுமையான சொற்களைப் பயன்படுத்ததவனாகவும் இருக்க வேண்டும். அப்படி அரசன் விளங்கினால், அவனுடைய நாட்டை உலகமே உயர்வாகக் கூறும் என்கிறார். 
ஓவ்வொருவரும் தனது வாழ்நாளில் பிறப்பு முதல் இறப்பு வரை பல இன்ப துன்பங்களை அனுபவித்து வருகின்றனர். அப்படி இருக்கையில், மன்னரைக் காண வரும்போது அது அவருக்குப் பெருந்துன்பமாக ஆகிவிட்டால்? அப்படியானால் ஆள்பவன் எப்படி இருக்க வேண்டும்?
அடுத்தக் குறளில், 
இன்சொலால் ஈத்தளிக்க வல்லார்க்குத் தன்சொலால்
தான்கண் டனைத்திவ் வுலகு -387 என்கிறார். அதாவது, 
எந்த மன்னன் தன்னை நோக்கி வருபவர்களிடம் இனிய சொற்களுடன் பேசி தகுந்தவர்களுக்குப் பொருள் உதவிக் காக்கவும் ஆற்றல் பெற்ற மன்னனுக்கு தன்னுடைய குணத்தால் புகழோடு வாழ்வது மட்டும் அல்லாமல், தான் எப்படி இருக்க வேண்டும் என்று தன்னுடைய அரசை நினைத்தாரோ அப்படியே உலகமும் அமையும் என்கிறார் திருவள்ளுவர். 
இதுவல்லவோ வரம்...
மனிதன் என்பவன் தெய்வமாகலாம் என்ற பாடலை கேட்டிருப்போம். ஆனால், பண்டைய காலத்தில் அரசனை தெய்வத்தன்மையாகப் பார்த்தனர், அதனால் கடவுள் இருக்கும் இடமாக கருதப்படும் இடத்தை கோவின் இல்லம் கோயில் அல்லது கோவில் என்று அழைத்தனர். ஆனால், திருவள்ளுவர் இதில் சற்றே மாறுபடுகிறார். ஏல்லா மனிதர்களும் மனிதர்கள்தான் !
ஆனால், திருவள்ளுவர் சொல்கிறார்.
முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு
இறையென்று வைக்கப் படும் -388
இதற்கு மேல் ஒரு மன்னனுக்கு புகழாரமோ அல்லது பெருமையோ இருக்க முடியாது...
ஏனென்றால், தமக்கு அநீதி இழைக்கப்படும் போது மக்களின் கடைசி நம்பிக்கை அவர்களுக்குக் கிடைக்கும் நியாயம் தான். இதோ திருவள்ளுவர் சொல்கிறார். ஏந்த அரசன் நீதி முறைமைகளோடு ஆட்சி செய்து தன்னுடைய குடிமக்களைக் காப்பாற்றுகிறானோ, அவர் மக்கள் மத்தியில் தெய்வம் என்று சொல்லப்படும் உயர்நிலையிலே வைத்து மதிக்கப்படுவான் என்கிறார். இது சமூக ஒப்பந்த (ளுழஉயைட ஊழவெசயஉவ) கோட்பாட்டின் ஆரம்ப வடிவமாககக் கருதப்படுகிறது. பாதுகாப்பு மற்றும் நீதியை வெற்றிகரமாக வழங்குவதன் மூலம் சம்பாதிக்கப்படும் ஒரு செயல்பாட்டு அந்தஸ்தே தெய்வீகம் ஆகும். 

தொடர்ந்து பார்ப்போம்...

குறிப்பு: இணைக்கப்பட்டுள்ள படங்கள் மற்றும் காணொலி ஆகியவற்றை செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பத்தில் உருவாக்கியுள்ளேன். பிழையிருப்பின்  மற்றும் தாமதத்திற்குப் பொறுத்துக் கொள்க.

நன்றி

https://www.youtube.com/@AAAInfotainment

தோப்பு

No comments:

Post a Comment