Wednesday, 31 December 2025

திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்-102: திருக்குறளில் அரசியல்:

திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்-102:
திருக்குறளில் அரசியல்: 
அரசியலில் ஒரு தலைவரின் சொல்வன்மை என்பது அவரது ஆளுமையை பிரதிபலிக்கிறது. திருவள்ளுவர் ‘அறம்” என்பதனை ஒரு தத்துவமாக மட்டும் கூறாமல், அதனைச் செயல்முறை அரசியலில் எவ்வாறு  பொருத்துவது என்பதையும் விளக்குகிறார்.  அரசியல் சூழலில் ‘புறங்கூறாமை’ என்பது மற்றவர்களின் நற்பெயருக்குப் பின்னால் களங்கம் விளைவிப்பதைக் குறிக்கிறது. இது இன்றைய காலத்து ‘Character Assassination’’ எனப்படும் ஆளுமைச் சிதைவிற்கு ஒப்பானது. ஒரு நாட்டின் அமைச்சரவையில் இருக்கும் உறுப்பினர்களுக்கு இடையே பரஸ்பர நம்பிக்கையும் மரியாதையும் இருக்க வேண்டும். ஆந்த நம்பிக்கை சிதையும்போது, நிர்வாகம் நிலைகுலையும் என்று திருவள்ளுவர் எச்சரிக்கிறார். 
இனி குறள்களுக்குச் செல்வோம். பின்வரும் குறளில்,
செருக்குஞ் சினமும் சிறுமையும் இல்லார்
பெருக்கம் பெருமித நீர்த்து -431 என்கிறார். அதாவது, தான் என்னும் அகங்காரம், கோபம் மற்றும் இழிவான நடத்தைகள் இல்லாத ஆட்சியாளர்களின் செல்வம்தான் மேன்மையானது என்கிறார். 
ஆட்சியாளருக்கு எவையெல்லாம் கேடானவைகள், எந்த சிந்தனைகள் அவர்களிடத்தில் இருக்கக்கூடாது என்பதனை திருவள்ளுவர் கூறுகிறார் பின்வரும் குறளில்
இவறலும் மாண்பிறந்த மானமும் மாணா
உவகையும் ஏதம் இறைக்கு -432
அதாவது, நியாயமாக ஒருவருக்கு தேவைப்படுவதை கொடுக்காமல் இருப்பது, பெரியோர் என்று தெரிந்திருந்தும் தம்முடைய பதவிப் பெருமைக்காக வணங்காமல் இருப்பது மற்றும் இழிவான நடத்தைகள் ஆகியவற்;றில் மகிழ்ந்திருப்பது போன்றவை ஆட்சியாளருக்கு உரிய குற்றங்களாகும். 
அடுத்தக் குறளில், தலைவனானவன் எந்தளவிற்கு உண்மைத் தன்மையானவராக இருக்க வேண்டும், நீதியானவராக இருக்க வேண்டும் என்று குறிப்பிடுகிறார். அதாவது பழிபாவங்களுக்கு அஞ்சி நடப்பவர் சிறுதானிய வகைகளில் ஒன்றான தினையளவு குற்றம் வரும் என்றால் அதனை பனை அளவு பெரியது என்று கருதி வருந்துவார். 
தினைத்துணையாங் குற்றம் வரினும் பனைத்துணையாக்
கொள்வர் பழிநாணு வார் -433
அப்படி என்றால் பழிச் சொல் வரும் செயலை தவிர்த்து விடுவர் என்று புரிந்து கொள்ளலாம். உதாரணமாக இலஞ்சம் வாங்குதல், போதைப் பழக்கத்திற்கு ஆளாதல் போன்ற செயல்களில் இருந்து விலகிச் செல்வர் எனலாம். 

ஒருவர் எத்தகைய நல்ல செயல்களில் ஈடுபட்டவராக இருந்தாலும் பல தான தர்மங்கள் செய்திருந்தாலும் அவர் செய்யும் ஒரு குற்றம் அவருடைய வாழ்வையே மாற்றிவிடும் நிலைக்குக் கொண்டு வந்துவிடும். ஆகவே, குற்றச் செயல்களைத் தவிர்ப்பது சாலச் சிறந்தது என்று குறிப்பிடுகிறார் திருவள்ளுவர். 
குற்றமே காக்க பொருளாகக் குற்றமே
அற்றந் த்ரூஉம் பகை -434
குற்றமே ஒருவனுக்கு அழிவை உண்டாக்கும் பகையாகும், ஆகையால் குற்றம் செய்யாமல் இருப்பதையே நோக்கமாகக் கொண்டு தன்னை எப்போதும் காத்துக் கொள்ள வேண்டும் என்கிறார். 
ஏந்த ஒரு செயலைச் செய்தாலும் திட்டமிட்டு செய்தல் சிறந்தது, உதாரணமாகச் சொல்ல வேண்டும் என்றால் மருத்துக் காப்பீடிற்கான தொகை குறைவு ஆனால், அந்த தொகை பெருஞ்செலவாகக் கருதி தவிர்த்து, அதில் ஆர்வம் காட்டாது செல்லும் நிலையானது திடீரென்று அக்குடும்பத்தில் சம்பாதிப்பவருக்கு அறுவை சிகிச்சை என்ற நிலை வந்தால் அவதிப்படும் நிலை ஏற்பட்டு விடுகிறது. பொருளாதார இழப்பு ஏற்படு;ம் நிலை உருவாகிறது. சில சமயம் அதிக வட்டிக்கு கடன் வாங்கும் நிலை, நகையை இழக்கும் நிலை, வீடு அல்லது நிலத்தினை அடமானம் அல்லது விற்கும் நிலையளவு சென்று விடுகிறது. ஆனால், உரிய மருத்துக் காப்பீடு எடுத்திருப்பார்களேயானால் இந்த நிலையினை அவர்கள் தவிர்த்திருக்க முடியும். இதனையே திருவள்ளுவர்.
வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும் - 435 என்று குறிப்பிடுகிறார். 
 பிற்காலத்தில் வரக்கூடிய துன்பத்தை முன்கூட்டியே எண்ணித் தற்காத்துக் கொள்ளாதவருடைய வாழ்க்கைஇ நெருப்பின் முன்னால் வைக்கப்பட்ட வைக்கோல் போர் போல அழிந்துவிடும்  என்கிறார். ஆகவே, நாமும் வருகின்ற புத்தாண்டிலும் நம்முடைய முன்னேற்றத்தினை அது ஆரோக்கியமாக இருந்தாலும், பொருளாதாரமாக இருந்தாலும், குடும்ப நலமாக இருந்தாலும் தொலை நோக்குத் திட்டத்துடன் செயல்படும் போது, நமக்கான முடிவுகள் மகிழ்ச்சியை நமக்கு கொண்டு வந்து சேர்க்கிறது. அனைவரும் வரும் ஆங்கிலப் புத்தாண்டு நலமாகவும், வளமாகவும், மகிழ்வாகவும் அமைய வாழ்த்துக்கள். அனைவருக்கும் ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள். 


தொடர்ந்து பார்ப்போம்...



குறிப்பு: இணைக்கப்பட்டுள்ள படங்கள் மற்றும் காணொலி ஆகியவற்றை செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பத்தில் உருவாக்கியுள்ளேன். பிழையிருப்பின் பொறுத்துக் கொள்க.

நன்றி

https://www.youtube.com/@AAAInfotainment

தோப்பு

Wednesday, 24 December 2025

திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்-101:

திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்-101:
திருக்குறளில் அரசியல்: 
திருக்குறளில் இதுவரை 100 வாரங்களைக் கடந்துள்ளோம். இதற்கு மேலான ஆதரவை அளித்த அனைத்து தோழர்களுக்கும் இந்த நேரத்தில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன். தொடர்ந்து தங்களுடைய மேலான ஆதரவை அளிக்கக் கேட்டு;க் கெ
திருக்குறளில் அரசியல் என்ற தலைப்பில் பார்த்து வருகிறோம். அதில்  அரசின் சிறப்பியல்புகளாக சிலவற்றை கடந்த வாரத்தில் பொருட்பாலில் இறைமாட்சி என்ற அதிகாரத்தில் இருந்து பார்த்தோம். 
இறைமாட்சியின் இறுதிப்பகுதியைப் பார்ப்போம். 
இன்று, ஊடகங்களில் குறிப்பாக சமூக வலைத் தளங்களில் பல பொறுப்பற்ற வார்த்தைகளையும் படிக்கவும் கேட்கவும் தகாத வார்த்தைகளையும் பார்க்கின்றோம். ஒரு விடயத்தை பொறுமையாகக் கையாளத் தெரியாதவர்களால் இது பெரிதும் நிகழ்கின்றது. ஆனால், நன்கு கற்றோர், அவர்களுக்கு பொறுப்புடனும், பொறுமையுடனும், தெளிவாகவும் தங்கள் கருத்துக்களை எடு;த்துரைத்து வருகின்றனர். அவர்களை நேரால் பார்த்தால் நமக்கே அவர்களைப் பாராட்டத் தூண்டும். இத்தகையரே ஆளுவதற்கும் தகுதியுடையவர்களாக இருக்கிறார்கள். திருவள்ளுவரும் இவர்களைத் தான் பாராட்டுகிறார் பின்வரும் குறளில்,
செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன்
கவிகைக்கீழ்த் தங்கும் உலகு – 389 என்கிறார். 
குறைக் கூறும் தகுதி மிக்க பெரியோரின் சொற்கள் கேட்பதற்கு வெறுப்பாயிருந்தாலும் தனக்கு ஏற்பன அல்ல என்றாலும் வருவதை எண்ணிப் பொறுத்துக் கொள்ளும் பண்பினை உடைய வேந்தனின் குடை நிழலின் கீழ் உலகமே தங்கும் என்கிறார். 
கொடையளி செங்கோல் குடியோம்பல் நான்கும் 
உடையானாம் வேந்தர்க் கொளி -390
கொடையளிப்பதும், இரக்க குணமும், நடுநிலை தவறாமல் ஆட்சி செய்து செங்கோல் கொண்டிருப்பதும், மக்களைப் பேணிக் காப்பது ஆகிய நான்கையும் சிறப்பாய்ப் பெற்றவன் வேந்தர்க்கு எல்லாம் ஒளிவிளக்குப் போன்றவன் ஆவான் என்கிறார். 
அடுத்த அதிகாரங்களான கல்வி, கல்லாமை, கேள்வி மற்றும் அறிவுடைமை ஆகியவற்றில் பெரும்பாலானாவற்றை ஏற்கனவே நாம் பார்த்து விட்டதால் குற்றங்கூறாமை என்ற அதிகாரத்தில் இருந்து பார்ப்போம். 
அதற்கு முன் மேற்கூறிய அதிகாரத்தில் இருந்து சிறப்பம்சங்களைப் பற்றி மட்டும் அரசியல் நோக்கில் பார்ப்போம். 

 

1. கல்வி: தலைவனுக்கான அடிப்படை தகுதி

அரசியலில் ஒரு தலைவன் அல்லது ஆட்சியாளன் வெறும் அதிகாரம் பெற்றால் மட்டும் போதாது; அவர் முறையான கல்வி கற்றிருக்க வேண்டும்.

·       அரசியல் தொடர்பு: ஒரு ஆட்சியாளர் சட்டங்கள், வரலாறு மற்றும் நிர்வாக முறைகளைக் கற்றிருக்க வேண்டும். (குறள் 391: கற்க கசடற...).

·       பயன்: கல்வி கற்ற தலைவரால் மட்டுமே தொலைநோக்குப் பார்வையுடன் திட்டங்களை வகுக்க முடியும். ஆட்சியாளருக்குக் கல்வி என்பது 'கண்' போன்றது; அது இல்லாமல் ஆட்சி செய்வது இருட்டில் நடப்பதற்குச் சமம்.

2. கல்லாமை: ஆட்சியின் வீழ்ச்சி

அரசியலில் அறிவற்ற அல்லது படிக்காதவர்களின் கையில் அதிகாரம் கிடைத்தால் அது நாட்டிற்குப் பெரும் அழிவைத் தரும்.

·       அரசியல் தொடர்பு: கல்லாதவர் அவையில் (சட்டமன்றம்/நாடாளுமன்றம்) பேசுவது, சூதாடும் தளம் இல்லாமல் பகடை விளையாடுவதைப் போன்றது (குறள் 401).

·       விளைவு: படிக்காத ஆட்சியாளர் எவ்வளவு பெரிய செல்வந்தராகவோ அல்லது செல்வாக்கு மிக்கவராகவோ இருந்தாலும், கற்றறிந்தவர்களின் முன்னால் அவர் மதிக்கப்பட மாட்டார். இது நிர்வாகக் குழப்பத்திற்கு வழிவகுக்கும்.

3. கேள்வி: அமைச்சர்களும் ஆலோசனைகளும்

ஒரு சிறந்த அரசியல்வாதி தான் மட்டும் படித்திருந்தால் போதாது; அனுபவமிக்க அறிஞர்களின் ஆலோசனைகளைக் கேட்கும் பண்பைப் பெற்றிருக்க வேண்டும்.

·       அரசியல் தொடர்பு: மன்னர்கள் அல்லது அமைச்சர்கள் தாங்கள் படிக்காவிட்டாலும், கற்றவர்கள் சொல்லும் அறவுரைகளைக் கேட்டறிய வேண்டும் (குறள் 414).

·       பயன்: செவி வழியாகக் கிடைக்கும் இந்த 'கேள்வி அறிவு' ஒரு தலைவருக்கு நெருக்கடியான காலங்களில் கைகொடுக்கும். மற்றவர் கருத்தைக் கேட்பது ஒரு ஜனநாயகப் பண்பாகும்.

4. அறிவுடைமை: நிர்வாகத் திறன் (Governance)

கற்ற கல்வியையும், கேட்ட ஆலோசனைகளையும் கொண்டு சரியான முடிவுகளை எடுப்பதே ஒரு சிறந்த ஆட்சியாளரின் 'அறிவுடைமை' ஆகும்.

·       அரசியல் தொடர்பு: எது வந்தாலும் அதனைச் சமாளிக்கும் திறனே அறிவு. இது பகைவர்களால் கூட அழிக்க முடியாத ஒரு கோட்டை (குறள் 421).

·       பயன்: எப்பொருள் யார் யார் வாய்க் கேட்டாலும், அதன் மெய்ப்பொருளைக் காணும் திறன் (குறள் 423) ஒரு அரசியல்வாதிக்கு மிக முக்கியம். அப்போதுதான் அவர் வதந்திகளை நம்பாமல், நாட்டின் உண்மை நிலையை அறிந்து செயல்பட முடியும்.

 தொடர்ந்து பார்ப்போம்...


குறிப்பு: இணைக்கப்பட்டுள்ள படங்கள் மற்றும் காணொலி ஆகியவற்றை செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பத்தில் உருவாக்கியுள்ளேன். பிழையிருப்பின் பொறுத்துக் கொள்க.

நன்றி

https://www.youtube.com/@AAAInfotainment

தோப்பு


Wednesday, 17 December 2025

திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்-100:

நாம் தற்போது திருக்குறளில் திருவள்ளுவரின் அரசியல் சார்ந்த கருத்துக்களைப் பார்த்து வருகிறோம். இதில் தற்போது இறைமாட்சி அதிகாரத்தில் அரசியல் குறித்தத் திருவள்ளுவரின் கருத்துக்களைப் பார்த்து வருகிறோம். 
இப்போது நாம் பார்க்க இருக்கும் குறளினை மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சியாளர்கள் பயன்படுத்துவதைக் காண முடியும். ஏனெனில், இக்குறள் அரசியலில் அவ்வளவு வலிமை வாய்ந்தது.  நல்லாட்சி என்றால் என்ன ? என்று மக்கள் புரிந்து கொள்ளவும், மக்களுக்கு எவ்வாறு நல்லாட்சி வழங்குவது? ஏன்று ஆட்சியாளர்கள் உணர்ந்து கொள்ளவும் மிகப்பெரிய விழிப்புணர்வினை விட்டுச் சென்றிருக்கிறார் திருவள்ளுவர். இக்குறளைக் காண்போமா?
இயற்றலும் ஈட்டலுங் காத்தலும் காத்த 
வகுத்தலும் வல்ல தரசு- 385 என்கிறார். 
ஒரு அரசானது, அரசாங்கத்திற்கு பொருள் வரும் வழிகளை உருவாக்குதலும், வரும் பொருட்களை சேமித்து வைத்தலும், காத்து வருவதும், காத்தவற்றை தக்கவாறு வகுத்துச் செலவு செய்வதும் எனும் இவற்றில் திறமை மிக்கதே அரசு என்கிறார். இதனை தவறும் பட்சத்தில் அரசும் பாதிக்கப்படுகிறது. அதனால் மக்களும் துன்பமடைகின்றனர். 
அடுத்தக் குறளில், மன்னனானவன் எப்படிப்பட்ட தரத்தினை (ஞரயடவைல) உடையவனாக இருக்க வேண்டும். 
இதுவரை மன்னன் என்று நாம் ஒருவேளை மனதில் வரைந்திருந்த அ;ல்லது திரைப்படங்களில் ஊடகங்களில் காட்சிப்படுத்தப்பட்ட மன்னன் என்று நினைத்தால்...
காட்சிக் கெளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல்
மீக்கூறும் மன்னன் நிலம் -386 
...மன்னன் என்பவன் அப்படி இல்லை, தன்னைக் காண வருபவர்கள் பார்க்கும் பொழுது மிக எளியவளானகவும், கடுமையான சொற்களைப் பயன்படுத்ததவனாகவும் இருக்க வேண்டும். அப்படி அரசன் விளங்கினால், அவனுடைய நாட்டை உலகமே உயர்வாகக் கூறும் என்கிறார். 
ஓவ்வொருவரும் தனது வாழ்நாளில் பிறப்பு முதல் இறப்பு வரை பல இன்ப துன்பங்களை அனுபவித்து வருகின்றனர். அப்படி இருக்கையில், மன்னரைக் காண வரும்போது அது அவருக்குப் பெருந்துன்பமாக ஆகிவிட்டால்? அப்படியானால் ஆள்பவன் எப்படி இருக்க வேண்டும்?
அடுத்தக் குறளில், 
இன்சொலால் ஈத்தளிக்க வல்லார்க்குத் தன்சொலால்
தான்கண் டனைத்திவ் வுலகு -387 என்கிறார். அதாவது, 
எந்த மன்னன் தன்னை நோக்கி வருபவர்களிடம் இனிய சொற்களுடன் பேசி தகுந்தவர்களுக்குப் பொருள் உதவிக் காக்கவும் ஆற்றல் பெற்ற மன்னனுக்கு தன்னுடைய குணத்தால் புகழோடு வாழ்வது மட்டும் அல்லாமல், தான் எப்படி இருக்க வேண்டும் என்று தன்னுடைய அரசை நினைத்தாரோ அப்படியே உலகமும் அமையும் என்கிறார் திருவள்ளுவர். 
இதுவல்லவோ வரம்...
மனிதன் என்பவன் தெய்வமாகலாம் என்ற பாடலை கேட்டிருப்போம். ஆனால், பண்டைய காலத்தில் அரசனை தெய்வத்தன்மையாகப் பார்த்தனர், அதனால் கடவுள் இருக்கும் இடமாக கருதப்படும் இடத்தை கோவின் இல்லம் கோயில் அல்லது கோவில் என்று அழைத்தனர். ஆனால், திருவள்ளுவர் இதில் சற்றே மாறுபடுகிறார். ஏல்லா மனிதர்களும் மனிதர்கள்தான் !
ஆனால், திருவள்ளுவர் சொல்கிறார்.
முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு
இறையென்று வைக்கப் படும் -388
இதற்கு மேல் ஒரு மன்னனுக்கு புகழாரமோ அல்லது பெருமையோ இருக்க முடியாது...
ஏனென்றால், தமக்கு அநீதி இழைக்கப்படும் போது மக்களின் கடைசி நம்பிக்கை அவர்களுக்குக் கிடைக்கும் நியாயம் தான். இதோ திருவள்ளுவர் சொல்கிறார். ஏந்த அரசன் நீதி முறைமைகளோடு ஆட்சி செய்து தன்னுடைய குடிமக்களைக் காப்பாற்றுகிறானோ, அவர் மக்கள் மத்தியில் தெய்வம் என்று சொல்லப்படும் உயர்நிலையிலே வைத்து மதிக்கப்படுவான் என்கிறார். இது சமூக ஒப்பந்த (ளுழஉயைட ஊழவெசயஉவ) கோட்பாட்டின் ஆரம்ப வடிவமாககக் கருதப்படுகிறது. பாதுகாப்பு மற்றும் நீதியை வெற்றிகரமாக வழங்குவதன் மூலம் சம்பாதிக்கப்படும் ஒரு செயல்பாட்டு அந்தஸ்தே தெய்வீகம் ஆகும். 

தொடர்ந்து பார்ப்போம்...

குறிப்பு: இணைக்கப்பட்டுள்ள படங்கள் மற்றும் காணொலி ஆகியவற்றை செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பத்தில் உருவாக்கியுள்ளேன். பிழையிருப்பின்  மற்றும் தாமதத்திற்குப் பொறுத்துக் கொள்க.

நன்றி

https://www.youtube.com/@AAAInfotainment

தோப்பு

Wednesday, 10 December 2025

திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்-99:

திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்-99:
திருக்குறளில் அரசியல்: 

திருக்குறளில் அரசியல் என்னும் தலைப்பில் பார்த்துக் கொண்டிருக்கின்றோம். கடந்த வாரம், நல்ல அரசனுக்கு என்னவெல்லாம் பௌதிக ரீதியாக இருக்க வேண்டும் என்று பார்த்தோம். 
அடுத்தபடியாக, அரசின் பௌதிகச் சொத்துகளை நிர்வகிக்கத் தேவையான உளவியல் மற்றும் நடத்தைப் பண்புகளை திருவள்ளுவர் உடனடியாகக் குறிப்பிடுகிறார்.  
அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும்
எஞ்சாமை வேந்தர்க் கியல்பு - குறள் 382
இன்றியமையாத குணங்களாக அஞ்சாமை , ஈகை (கொடை), அறிவு (ஞானம்) மற்றும் ஊக்கம் (விடாமுயற்சி) ஆகியவற்றைக் குறிப்பிடுகிறார். இதில் 
அஞ்சாமை என்பது வெறும் போர்களத் துணிவினை மட்டுமல்லாது, கடினமான சூழல்களில் முடிவுகளை எடுப்பது குறித்த தார்மீகத் துணிவு மற்றும் எந்த மாதிரியான விமர்சனங்களையும் எதிர்கொள்ளும் அறிவுசார்ந்த துணிவைக் குறிப்பிடுகிறார். பயந்து நடுங்கும் தலைவர் தன்னுடைய அரசு முடங்குவதற்குக் காரணமாகி விடுகிறார். 
ஈகை என்று பார்க்கையில் செல்வம் மற்றும் நலத்திட்டங்களைப் பகிர்ந்தளிக்கும் மனப்பான்மையினைக் குறிப்பிடுகிறார். நவீன காலக்கட்டத்தில், இது சமூக நலம் மற்றும் பொருளாதார வளர்ச்சியின் சமமான பகிர்ந்தளித்தலையும் அர்த்தப்படுத்துகிறது. 
அறிவு (!ஞானம் ) என்பது விமர்சனச் சிந்தனை, கற்றல் மற்றும் பொய்யிலிருந்து உண்மையை அறியும் திறன் ஆகியவற்றினைக் குறிக்கிறது. திருக்குறள் முழுமையையும் பார்த்தால் திருவள்ளுவர் அறிவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பது தெரியவரும். இது நிர்வாக அடிப்படையில் ஒரு அறிவுசார் செயல்பாடு என்பதனைக் காட்டுகிறது. 
ஊக்கம் அல்லது விடாமுயற்சி அல்லது ஆற்றல் என்பது சோர்வற்ற உற்சாகம் மற்றும் உழைப்பினைக் குறிக்கிறது. அரசு என்பது ஒழுங்கின்மையைக் குறைக்கும் ஒரு இயந்திரம், தலைவரிடமிருந்து தொடர்ந்து ஆற்றல் அடிநிலை வரை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கும். தலைவரிடமிருந்து தொடர்ந்து ஆற்றல் கிடைக்கவில்லை என்றால், ஒழுங்கு குழப்பமாக மாறும் ஆதலால் தொடர் ஊக்கமானது முக்கியமான ஒன்றாகும். 

மேலே அரசனின் தலையாயக் குணநலன்களைக் குறிப்பிட்ட திருவள்ளுவர் அடுத்தக் குறளில் அரசனின் பண்புகளாக இருக்க வேண்டியவற்றைத் தெளிவுபடுத்துகிறார். 
தூங்காமை கல்வி துணிவுடைமை இம்மூன்றும் 
நீங்கா நிலனான் பவர்க்கு -383 என்கிறார். 
‘தூங்காதே தம்பித் தூங்காதே...” என்ற பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் அவர்களின் பாடலைக் கேட்டிருப்போம். அதில் தனது கடமைகளை தாமதப்படுத்துவதால் என்னென்ன விளைவுகள் ஏற்படும் என்பதனை ‘தூங்காதே” என்று விவரித்திருப்பார். இங்கேயும் திருவள்ளுவர் முன்னரே அவ்விதம் கூறிவிட்டார். நாட்டை ஆளும் மன்னவருக்கு காலம் தாழ்த்தாத தன்மை (தூங்காமை), அனைத்தையும் அறியும் கல்வி, தீயவற்றை எதிர்க்கின்ற போதிலும் நல்லவற்றை செய்வதற்கு ஏற்ற துணிவு ஆகியவை நாட்டை ஆளும் மன்னவரை விட்டு நீங்காமல் எப்போதும் நீடித்து இருக்க வேண்டும் என்கிறார். 
அத்தோடு நில்லாமல் சிறந்த அரசன் எனப்படுபவன் யார்? ஏன்று அடுத்தக் குறளில் விளக்குகிறார். 
அறனிழுக்கா தல்லவை நீக்கி மறனிழுக்கா
மானம் உடைய தரசு-384
அதாவது ஆட்சி முறைக்கு உரிய அறத்தில் (மக்களின் நலனை முதன்மையாக வைத்து செயல்படுதல்) இருந்து விலகாமல், அறமற்ற கொடுமைகள் தன் நாட்டில் நடைபெறாமல் விலக்கியும் (மதுவிலக்கு, மதத் தூண்டுதல்கள் போன்றவை) வீரத்தில் குறைபடாத மானத்தையும் உடையவனே சிறந்த அரசன் என்கிறார். மேற்கூறிய குறளின் மூலம் அறத்தையும், மறத்தையும் ஒருங்கே வலியுறுத்துகிறார் திருவள்ளுவர். 

தொடர்ந்து பார்ப்போம்...

குறிப்பு: இணைக்கப்பட்டுள்ள படங்கள் மற்றும் காணொலி ஆகியவற்றை செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பத்தில் உருவாக்கியுள்ளேன். பிழையிருப்பின்  மற்றும் தாமதத்திற்குப் பொறுத்துக் கொள்க.

நன்றி

https://www.youtube.com/@AAAInfotainment

தோப்பு


Friday, 5 December 2025

திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்-98:

திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்-98:
திருக்குறளில் அரசியல்: 

திருவள்ளுவரின் திருக்குறளில் உள்ள அரசியல் சார்ந்த 25 அதிகாரங்களையும் 4 கருப்பொருட்களாகப் பிரிக்கலாம். இதில் இறைமாட்சிக்கென்று (அரசன்) 5 அதிகாரங்களையும் அமைச்சரவைக்கென்று (குழு) 10 அதிகாரங்களையும் ஆட்சி முறைக்கென்று (நீதி) 5 அதிகாரங்களையும் தன்னடக்கத்திற்கென்று 5 அதிகாரங்களையும் திருவள்ளுவர் நமக்கு வழங்கியுள்ளார். குறட்பாக்களில் திருவள்ளுவர் ஆட்சி செய்பவரின் தகுதிகளை விடவும் அதிகமாக, அவரைச் சுற்றியுள்ள அமைச்சரவை மற்றும் நிர்வாக செயல்பாடுகளுக்கே அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளார் என்பது தெரிகிறது. 
அரசியல் பிரிவானது, இராஜ்யத்தின் புவியியல் எல்லைகளையோ அல்லது மன்னரின் தெய்வீக வம்சாவளியோ அல்லது கஜானாவின் செல்வம் குவிப்பது குறித்து துவக்கவில்லை, மாறாக, இது இறைமாட்சி (அரசனின் சிறப்பு) என்கிற அதிகாரத்துடன் தொடங்குகிறது. அதாவது, பொருள் வளங்களைக் காட்டிலும், மனித மூலதனத்திற்கும், தார்மீக அதிகாரத்திற்கும் முன்னுரிமை அளிக்கிறது.
அரசின் இலக்கணம்: 
அரசியல் பிரிவின் துவக்கக் குறளானது நவீன அரசியல் வரையறைகளுக்கு இணையாக, அரசின் முழுமையான அரசியல் வரையறைகளுக்கு சமமாக, அரசின் முழுமையான அரசியலமைப்பு வரையறையை வழங்குகிறது.
கீழ்க்காணும் குறளை நோக்குகையில்,
படைகுடி கூழ்அமைச்சு நட்பரண் ஆறும்
உடையான் அரசருள் ஏறு (குறள் 381)  என்று குறிப்பிடுகிறார்.
திருவள்ளுவர் அதிகாரத்தின் முதல் குறளிளேயே பெரும்பாலும் நாம் அதிகாரத் தலைப்பிற்கான வரையறையை கொடுத்துவிடுகிறார். இதிலும் அப்படித்தான். சிறந்த இராணுவம், மகிழ்ச்சியான மக்கள், நிறைந்த கருவூலம், திறமையான அமைச்சர்கள், நல்ல நட்பு நாடுகள் மற்றும் வலிமையான அரண் ஆகியவற்றை உடையவரே அரசர்களுள் சிங்கம் போன்றவர் ஆவார் என்கிறார். மேற்கூறிய அனைத்தும் எளிதாக நடந்து விடுவதில்லை. இப்போது அணி ஒற்றுமைக்கே பெருநிறுவனங்களில் ஏகப்பட்ட நிர்வாக மேலாண்மை பயிற்சிகள் எடுக்கப்படுகிறன்றன. மக்களாட்சி காலத்திலேயே இப்படி என்றால், மன்னராட்சி காலத்தில் இந்த நிலையினை எட்ட வேண்டும் என்றால், அரச பொறுப்பில் இருப்பவர் எத்தகைய நிர்வாக மேலாண்மை கொண்டிருக்க வேண்டும்? கூட இருப்பவர்கள் சிறந்தவர்களாக இருக்க வேண்டும். ஏனெனில் பெரும்பாலும் நாம் எதிர்கொள்ளக் கூடிய பிரச்சனைகள் நமக்கு அருகில் இருப்பவர்கள் மூலமே ஏற்படுகிறது. அதிகாரப் பசிக்காக துரோகங்கள் மத்தியில், எதிரிகள் மத்தியில் பிரச்சனைகளை கண்டறிதல் அதனை சரி செய்தல் மட்டுமல்லாது மேற்கூறிய அனைத்தும் கட்டமைப்பது உண்மையிலேயே சாதாரண காரியமல்ல..
மேற்கூறிய ஆறு அங்கங்களும் சாணக்கியரின் ‘அர்த்த சாஸ்திரத்தில்” காணப்படும் சப்தாங்க (ஏழு அங்கங்கள்) கோட்பாட்டுடன் ஒத்துப் போகின்றன. இருந்த போதிலும் கருத்தாக்கத்தில் ஒரு முக்கிய வேறுபாடும் உள்ளது. கௌடில்யர் அரசனை (ஸ்வாமி) முதல் அங்கமாகப் பட்டியலிட்டு, பின்னர் மற்ற ஆறையும் குறிப்பிடுகிறார். ஆனால் திருவள்ளுவர், ஒரு நுட்பமான சொல்லாட்சி மாற்றத்தின் மூலம், அரசனை மற்ற ஆறு கூறுகளையும் உடையவனாக (Pழளளநளளழச) மாற்றுகிறார். அரசன் வெறுமனே ஒரு அங்கம் மட்டுமல்லாமல் ; அவன் மற்ற ஆறையும் ஒருங்கிணைக்கும் உயிருள்ள சக்தியாகக் குறிப்பிடுகிறார். அவற்றை சரியாகக் கையாளும் ‘சிங்கம்” எனக் குறிப்பிடுகிறார். 
இந்த ஆறு கூறுகளின் இடைவினையே திருக்குறளுடைய அரசியல் சூழமைப்பின் அடிப்படையாகும்:
1. படை: வன்முறையைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் அரசின் முதல் தேவையாக இருக்கிறது. இது வெளிப்புறத்திலிருந்து வரும் ஆக்கிரமிப்பிற்கு எதிராக இறையாண்மையை உறுதி செய்கிறது. 
2. குடி: மக்கள் தொகையே சட்டப்பூர்வமான தன்மை மற்றும் உற்பத்தித் திறனின் ஆதாராமாக இருக்கிறது. மக்கள் இல்லாமல் அரசன் இருக்க இயலாது, முரண்பாடானதாக இருக்கும்.
3. கூழ்: படை மற்றும் நிர்வாகத்தைத் தக்க வைக்கத் தேவையான குறையாத வளத்தைக் குறிக்கின்றது. 
4. அமைச்சு: அரசின் விருப்பத்தைச் செயல்படுத்தும் அதிகார வர்க்கம் ஆகும். 
5. நட்பு : எந்த அரசும் தனித்தீவு அல்ல, அரச தந்திரம் ரீதியான செல்வாக்கு என்பதும் ஒரு வகையான அதிகாரம் ஆகும். 
6. அரண்: பாதுகாப்பின் உள்கட்டமைப்பு (சுவர்கள் மற்றும் புவியியல் நன்மைகள்). 
மேலும், அரசனுக்கும் அரசுக்கும் என்ன தேவைகள் இருக்கிறது என்பதை வரும் வாரங்களில் பார்ப்போம். 
தாமதத்திற்கு பொறுத்துக் கொள்க...
தொடர்ந்து பார்ப்போம்...

குறிப்பு: இணைக்கப்பட்டுள்ள படங்கள் மற்றும் காணொலி ஆகியவற்றை செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பத்தில் உருவாக்கியுள்ளேன். பிழையிருப்பின்  மற்றும் தாமதத்திற்குப் பொறுத்துக் கொள்க.

நன்றி

https://www.youtube.com/@AAAInfotainment

தோப்பு

Wednesday, 26 November 2025

திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்-97:

திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்-97:
திருக்குறளில் அரசியல்: 
அரசியல் என்பது ஒவ்வொரு நாடுகளிலும் ஒவ்வொரு மாதிரியாக பரிணமித்து வருகின்றது. முன்னோர்கள் வாழ்ந்த காலங்களில சிறு குழுக்களுக்கான அரசியல்,; நிலப்பகுதி வாரியான அரசியல் என்று இருந்து, பிராந்தியம் அ;ல்லது நாடு அளவிலான அரசியல் என்று பரிணமித்து, பிறகு பிரிட்டிஷாரிடம் அடிமைப்பட்டு கிடந்த காலங்களில் இருந்த அரசியல் மற்றும் சுதந்திரம் பெறுவதற்காக நடந்த அரசியல், சுதந்திரம் அடைந்த பிறகு நடக்கும் அரசியல், அதிலும், கட்சிக்கு கட்சி மாறுபடும் அரசியல் என்று பல்வேறு அரசியல் சூழல்களை பார்த்திருக்கின்றோம், கேட்டிருக்கின்றோம், கடந்து வந்திருக்கின்றோம், கடந்து கொண்டு இருக்கின்றோம். இப்படிப்பட்ட சூழலில் நமது ஐயன் திருக்குறளில் அரசியல் குறித்து என்ன சொல்கிறார் என்று பார்ப்போம். நாமறிந்த வகையில் நிர்வாகம் என்று வரும் போது இரண்டு நூல்கள் முக்கியப் பங்கேற்கின்றன அவை சாணக்கியர் என்று அழைக்கப்படுகின்ற ‘கௌடில்யரின்” ‘அர்த்தசாஸ்திரம்” மற்றொன்று திருவள்ளுவரின் திருக்குறள். முன்னது சாணக்கியரால் நிலைநிறுத்தப்படும் சமஸ்கிருத மரபு அடுத்தது திருக்குறளில் உச்சம் தொடும் தமிழ் அறநெறி மரபு. அர்த்த சாஸ்திரம் அதிகாரத்தை அடைவதற்கான நடைமுறை சார்ந்த, சில சமயங்களில் ஈவு இரக்கமற்ற அணுகுமுறையாக (பொருள் ஈட்டும் அறிவியல் ) கருதப்படுகிறது. ஆனால், திருக்குறளின் அரசியல் பகுதி- இதற்கு எதிரான ஒரு ஆழமான மாற்றுக் கருத்தை முன்வைக்கிறது. நிலையான அரசியல் அதிகாரம் என்பது அறநெறியுடன் பிரிக்க முடியாதபடி பிணைக்கப்பட்டுள்ளது. 
நாம் நன்கு அறிந்தபடி திருக்குறளை அறத்துப்பால், பொருட்பால், மற்றும் காமத்துப்பால் என மூன்று பிரிவுகளாகப் பிரித்துள்ளார். இதில் இரண்டாவது பிரிவான பொருட்பால், பொருளாதார மேலாண்மைக்கான வழிகாட்டி மட்டுமல்லாமல், அதிகாரம், ஆளுமை மற்றும் நிர்வாகத்திற்கான ஒரு விரிவான சமூகவியல் நூலாகும். 
பொருட்பால் மொத்தம் 70 அதிகாரங்களைக் கொண்டுள்ளது.1 இது நூலின் 133 அதிகாரங்களில் பெரும்பகுதியாகும்
பொருட்பாலில் உள்ள முதல் 25 அதிகாரங்களை (அதிகாரங்கள் 39-63) உள்ளடக்கிய அரசியல் பகுதி, தமிழ் அரசியல் சிந்தனையின் அடித்தளமாக அமைகிறது. இந்த 250 குறட்பாக்களும், இறையாண்மையின் உள்கட்டமைப்பை வளர்ப்பது முதல் அரசின் வெளிப்புற நிர்வாகம் வரை, ஒரு அரசனுக்கான முழுமையான பாடத்திட்டமாக அமைகின்றன. தற்போது மக்களாட்சி நடைமுறையில் இருக்கும் நிலையில், அரசனைத் தலைவனாகக் கொண்டு பார்ப்போம். 
அரிஸ்டாட்டில் போன்ற பல பண்டைய அரசியல் சிந்தனையாளர்கள் தனிமனித அறநெறியையும் அரசாங்கத்தையும் தனித்தனியாகப் பிரித்துப் பார்த்தனர். ஆனால், திருவள்ளுவரின் தனித்துவம் என்னவென்றால், பொருள் (செல்வம்/அதிகாரம் ) நிலைத்திருக்க அறம் அவசியம் என்பதில் அவர் காட்டும் உறுதியாகும். அறமற்ற அடித்தளத்தில் கட்டப்பட்ட ஒரு அரசு, அதன் சொந்த முரண்பாடுகளின் எடையால் சரிந்து விடும் என்று இந்த நூல் வாதிடுகிறது. 
இந்தத் தொடரில் இந்த 25 அதிகாரங்களின் கருப்பொருள் வளர்ச்சி, உலகளாவிய அரசியல் தத்துவத்துடனான அதன் ஒப்பீடு (கௌடில்யர், மாக்கியவல்லி மற்றும் பிளேட்டோ ஆகியோருடன் ) மற்றும் நவீன மக்களாட்சி நிர்வாகம், பெருநிறுவன மேலாண்மை ஆகியவற்றில் அதன் பயன்பாடு ஆகியவற்றைக் காண்போம். 
 "அறநூலில்" அரசியல் மற்றும் பொருளாதார சிந்தனைகள் ஆதிக்கம் செலுத்துவது திருவள்ளுவரின் நோக்கத்தைக் காட்டுகிறது: அறத்தை வெற்றிடத்திலோ அல்லது தனிமையிலோ கடைப்பிடிக்க முடியாது. அதற்கு நிலையான சமூக ஒழுங்கு தேவை, அந்த ஒழுங்கிற்குத் திறமையான அரசு தேவை.
 சமூக ஒழுங்கின் ஸ்திரத்தன்மையும் செல்வத்தை உருவாக்குதலும், ஒரு திறமையான அரசனால் வழிநடத்தப்படும் நெறிமுறையான அரசு இயந்திரத்தைச் சார்ந்தே உள்ளன என்று வள்ளுவர் கருதுகிறார். செங்கோன்மை (நீதி) மூலம் காக்கும் அரசன் இல்லாமல், குழப்பமான உலகில் அறத்தைப் பின்பற்றுவதோ இன்பத்தை அனுபவிப்பதோ சாத்தியமில்லை. இந்த வரிசைமுறை அதிகாரத்தின் படிநிலையைக் காட்டுகிறது: முதலில் ஆட்சியாளர் (அரசு) செப்பனிடப்பட்டு கல்வி கற்க வேண்டும்; தலைவன் சரியானால், உறுப்புகள் (அங்கங்கள்)—அமைச்சர்கள், படை, பொருளாதாரம்—சீராக அமையும்; அரசு பாதுகாப்பாக இருக்கும்போதுதான் குடிமக்கள் (குடி) தங்கள் கடமைகளைச் செழிப்பாகச் செய்ய முடியும்.
பரிமேலழகர் போன்ற வரலாற்று உரையாசிரியர்கள், அறத்துப்பால் தனிமனிதனின் மனசாட்சியைக் கையாாள்கிறது என்றால், பொருட்பால் சமூகத்தின் வெளிப்புறத் தொடர்புகளைக் கையாள்கிறது என்று குறிப்பிட்டுள்ளனர். அரசியல் என்பது இரண்டிற்கும் இடையிலான பாலமாகும். இதில் 61 குறட்பாக்கள் நேரடியாக அரசனுக்குக் கூறப்பட்டாலும், மீதமுள்ள 189 குறட்பாக்கள் அதிகாரம் வகிக்கும் "அனைவருக்கும்" பொருந்தக்கூடிய பொதுவான மேலாண்மை மற்றும் தலைமைத்துவக் கொள்கைகளை விவாதிக்கின்றன.இந்த உலகளாவியத் தன்மை, மன்னராட்சி காலத்தைத் தாண்டியும் நவீன ஜனநாயகத் தலைவர்களுக்கும் பெருநிறுவன நிர்வாகிகளுக்கும் இந்நூலைப் பொருத்தமானதாக ஆக்குகிறது.
“பொருள்” பகுதியிலேயே அரசியல் சார்ந்த பல அதிகாரங்கள் உள்ளன. அவற்றில் முக்கியமானவை:
இறையாட்சி / அரசன் தன்மை – ஒரு அரசன் (இன்றைய வகையில் தலைவர் / ஆட்சியாளர்) எப்படிப் படைக்கப்பட வேண்டும்?
அமைச்சு, அமைச்சர் தன்மை – ஆலோசகர்கள், அமைச்சர்கள், நிர்வாகத் தலைவர்கள் பற்றிய கொள்கைகள்
அரண் – fortification என்பது மட்டும் அல்ல; பாதுகாப்பு அமைப்பு, நாட்டு பாதுகாப்பு
பொருளாட்சி – அரசின் பொருளாதார மேலாண்மை, வரிகளின் நியாயம்
படை, படைச்செருக்கு – படைத்துறை, ராணுவ சக்தி, அதன் ஒழுக்கம்
நீதிநிலை, குற்றவியல் – குற்றம்–தண்டனை, நீதியாளுதல்
பருவ நிலை உணர்தல் / கால நிகழ்வு அறிதல் – leader’s sense of timing, policy decision-making
மக்கள் அன்பு, குடிமக்கள் நலம் – மக்கள் நலன், குடிமக்கள் மைய நிர்வாகம்
பொருள் செல்வம், துறந்தொழுகல் – wealth, detachment, ethical use of resources
இவை அனைத்தும் சேர்ந்து, திருக்குறள் அரசியல் அறிவியல், பொது நிர்வாகம், நீதிநெறி, தலைமைப் பண்பு ஆகியவற்றுக்கான ஒரு மதிப்புடை நூலாக அமைகிறது.
தொடர்ந்து பார்ப்போம்...

குறிப்பு: இணைக்கப்பட்டுள்ள படங்கள் மற்றும் காணொலி ஆகியவற்றை செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பத்தில் உருவாக்கியுள்ளேன். பிழையிருப்பின்  மற்றும் தாமதத்திற்குப் பொறுத்துக் கொள்க.

நன்றி

https://www.youtube.com/@AAAInfotainment

தோப்பு

Wednesday, 19 November 2025

திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்-96:

திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்-96:
 நாணுடைமை:
கடந்த வாரம் நாணமுடைமை என்னும் அதிகாரத்தின் முற்பகுதியைப் பார்த்தோம். இந்த வாரம் அதன் பிற்பகுதியைப் பார்ப்போம். 
உயர்ந்தோர் என்பவர் யார்? தமக்கென வாழாது பிறர் துயரையும் தன் துயரை போல நினைப்பவர் ஆவார். தன்னுடைய நலனுக்காக பிறரை துயரத்திற்கு உள்ளாக்குபவர் அல்ல. திருவள்ளுவர் உயர்ந்தோர் என்று யாரைக் குறிப்பிடுகிறார்? 
நாண்வேலி கொள்ளாது மன்னோ வியன்ஞாலம்
பேணலர் மேலா யவர் -1016 என்கிறார். 
அதாவது, உயர்ந்தோர் என்பவர்கள் தமக்குப் பாதுகாப்பாக நாணத்தைத் தான் கைக் கொள்வார்களே தவிர, பரந்து விரிந்த இந்த உலகில் வாழும் வாழ்க்கை விரும்பி மேற்கொள்ள மாட்டார் என்கிறார். இதன் மூலம் எந்தளவிற்கு நாணமுடைமைக்கு திருவள்ளுவர் முக்கியத்துவம் வழங்கியுள்ளதைக் காணலாம். 
மேற்கூறிய குறளின் அடுத்த உயர்ந்த நிலை, இதன் மூலம் திருவள்ளுவர் வாழ்ந்த காலத்தில் நாணத்திற்காக எந்த ஒரு நிலையில் இருந்திருப்பர் என்று அறியலாம். திருக்குறள், திருவள்ளுவர் நமக்குத் தந்த வாழ்வியல் நெறி என்பதோடு நிறுத்த முடியாது. அந்த காலத்தில் எந்தளவுக்கு மக்கள் ஒழுக்க நெறியை மதித்து வாழ்ந்தனர் என்பதை திருவள்ளுவர் படம் பிடித்துக் காட்டியுள்ளார் என்று அறியலாம். ‘மானமா? ஊயிரா?” ஏன்று கேள்வி கேட்டால், இந்த காலத்தில்  பெரும்பாலும் உயிர்தான் என்ற நிலையினைக் காண முடிகிறது. ஒழுக்கக் கொள்கைகள் பற்றி பேசுபவர்கள் புறக்கணிக்கப்படுகின்றனர் அல்லது பழமைவாதிகளாகவும் பார்க்கப்படுகின்றனர். பின்வரும் குறளில், 
நாணால் உயிரைத் துறப்பர் உயிர்ப்பொருட்டால்
நாண்துறவார் நாணாள் பவர் -1017 என்று குறிப்பிடுகிறார். 
அதாவது, நாணத்தின் சிறப்பை அறிந்து அதன் அடிப்படையில் வாழ்பவர்கள் நாணமா?  அல்லது உயிரா? ஏன்ற நெருக்கடி வரும்போது நாணத்தைக் காக்கும் பொருட்டு உயிரை துறப்பர். ஏந்த சூழலிலும் உயிரைக் காக்கும் பொருட்டாக நாணத்தைக் கை விட மாட்டார் என்கிறார். 
‘தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், தர்மம் மறுபடியும் வெல்லும்” ‘அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்” என்று சொல்லாடல்களைக் கேட்டிருப்போம். எவர் ஒருவர் ஒழுக்கநெறிகளைத் தீவிரமாக கடைப்பிடிக்கிறாரோ அவர் சிரமப்பட்டாலும், இறுதியில் அவர்களுக்குரிய நீதி கிடைக்கும் என்றும் நீதி தவறுபவர்களுக்கு அறமே தக்க சமயத்தில் தண்டனையை வழங்கும் என்றும் கூற்று உண்டு. அதாவது, எந்த நிலையிலும் நீதி நெறியுடன் வாழ்வதே சாலச்சிறந்தது என்பதுதான் அதன் அர்த்தமாகும். அவ்வாறு இல்லையென்றால்  என்ன ஆகும்?
பிறர்நாணத் தக்கது தான்நாணா னாயின்
அறம்நாணத் தக்கது உடைத்து -1018 
மேற்காணும் குறளில், ஒருவன் கேட்டவரும் கண்டவரும் வெட்கப்படும் ஒன்றிக்குத் தான் வெட்கப்படாமல் இருந்தால், அவனை விட்டு அறநெறியே வெட்கப்பட்டு அகன்று விட்டதாகக் கருத வேண்டும் என்கிறார். 
பெரும்பாலான படங்களில் காணும் காட்சி உங்களுக்கு நினைவிருக்கும். வில்லனுடைய தவறான செயல்பாடுகளால், தன்னுடைய குடும்பத்தைப் பாதிப்பிற்கு உள்ளாக்கி பிறகு தானும் கெடும் நிலையினை இறுதியில் அடைவார், இறுதியில் சிலர் திருந்துவர் சிலர் எந்த நிலையிலும் திருந்துவதில்லை. இதுபோன்று வாழ்பவர்களை 2000 வருடத்திற்கு முன்னரே எச்சரித்துள்ளார்.
குலஞ்சுடும் கொள்கை பிழைப்பின் நலஞ்சுடும்
நாணின்மை நின்றக் கடை -1019
ஒருவனுடைய ஒழுக்கக் கேட்டால் அவன் குலத்திற்கு இழுக்கு நேரிடும், அதற்கு நாணாமல் பிறர் பழிக்கும் செயல் புரிந்தால் அவனுக்கும் கேடு உண்டாகும் நலமனைத்தும் கெடும் என்கிறார். 
வயல்வெளிகளில் பறவைகள் பயிரை சேதம் செய்யாமல் இருப்பதற்காக, மனிதரைப் போன்ற பொம்மைகளை செய்து வைப்பதுண்டு. சோலைக்கொல்லை பொம்மை என்று வழங்கப்படும். சில பறவைகள் உண்மையான மனிதர் நிற்கின்றான் என்று நினைத்து வராமல் போவதுண்டு. ஆனால், அந்த பொம்மையானது உண்மையான உயிருள்ள மனிதருக்கு ஒப்பாகாது. பின்வரும் குறளில்,
நாண்அகத் தில்லார் இயக்கம் மரப்பாவை 
நாணால் உயிர்மருட்டி அற்று -1020 என்கிறார். 
மனதினுள் வெட்கம் இல்லாதவர்களின் நடமாட்டமானது, மரத்தால் செய்த பொம்மை உயிர் ஊட்டியிருப்பதாகக் கூறி மயக்குவது போலாகும் என்கிறார். 
இத்துடன் உடைமை என்னும் தலைப்பில் உள்ள அதிகாரங்கள் முடிகிறது. 

Wednesday, 12 November 2025

திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்-95:

திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்-95:
 நாணுடைமை:
திருவள்ளுவர் அவர்கள் உடைமை என்னும் தலைப்பில் எழுதிய அதிகாரங்களைப் பற்றிப் பார்க்கின்றோம். கடந்த வாரங்களில் அன்புடைமை, அறிவுடைமை, அடக்கமுடைமை, ஒழுக்கமுடைமை, பொறையுடைமை, அருளுடைமை, ஊக்கமுடைமை, ஆள்வினையுடைமை மற்றும் பண்புடைமை பற்றிப் பார்த்தோம். இந்த வாரம் நாணுடைமை என்னும் அதிகாரத்தைப் பற்றிப் பார்ப்போம். இதுவே உடைமை என்னும் அதிகாரத்தில் எழுதிய கடைசி அதிகாரம் ஆகும். 
இந்த அதிகாரத்தின் தலைப்பே, அதன் ஆழமான தத்துவார்த்த முக்கியத்துவத்தை உணர்த்துகிறது. ‘நாணம்” என்பது வெட்கம், ‘உடைமை” என்பது அதனைக் கொண்டிருக்கும் பண்பு. ஆனால், திருவள்ளுவர் இங்கு குறிப்பிடும் ‘நாணம்” என்பது பொதுவாகப் புரிந்து கொள்ளப்படும் சாதாரண வெட்கம் (shyness) அன்று. இது ஒரு ஆழமான, தீவிரமான தார்மீக உணர்வைக் (ethical conscience) குறிக்கிறது. 
திருவள்ளுவரின் பார்வையில் 'நாணுடைமை' என்பது, தகாத செயல்களைச் செய்யும்போது அல்லது அத்தகைய செயல்களைப் பற்றி சிந்திக்கும்போது ஒருவரின் மனசாட்சியில் எழும் கூச்சம், அருவருப்பு மற்றும் தார்மீக உறுத்தல் ஆகும். இது ஒரு செயலற்ற குணம் அல்ல; மாறாக, தீமையை விலக்கும் ஒரு தீவிரமான, அகக் காவல் (internal deterrent) ஆகும். இது ஒருவரின் நடத்தையைக் கட்டுப்படுத்தும் உள்மனத் தடையாகும்.
'நாணுடைமை' அதிகாரத்தை திருவள்ளுவர் 'அறத்துப்பாலில்' (தனிமனித அறம்) வைக்கவில்லை. மாறாகஇ 'பொருட்பாலில்' (பொது வாழ்வு, அரசு, சமூகம்) வைத்துள்ளார். இது ஒரு நுட்பமான மற்றும் ஆழமான philosophical-political தேர்வாகும்.
இந்த அதிகாரத்தை 'குடியியலில்' வைப்பதன் மூலம், திருவள்ளுவர் ஒரு ஆணித்தரமான கருத்தை முன்வைக்கிறார்: 'நாணுடைமை' என்பது ஒரு தனிப்பட்ட குணம் மட்டுமல்ல, அது ஒரு அத்தியாவசியமான பொது மற்றும் சமூக நற்பண்பு (public and social virtue) ஆகும். ஒரு நிலையான, அறம் சார்ந்த சமுதாயமும் அரசும், திறமை அல்லது செல்வத்தை விட, இத்தகைய தார்மீகப் பொறுப்புணர்வும், தவறுகளுக்கு வெட்கப்படும் மனப்பாங்கும் கொண்ட குடிமக்களாலேயே சாத்தியமாகும். சுருக்கமாகச் சொன்னால், 'நாணுடைமை' என்பது ஒரு சிறந்த குடிமகனின் அஸ்திவாரம்; அதுவே ஒரு சிறந்த சமூகத்தின் ஆணிவேர்.
சரி, இனி குறளுக்குச் செல்வோம். 
முன்னுரையில் குறிப்பிட்டுள்ளபடி, முதல் குறளிலேயே திருவள்ளுவர் நாணுடைமைக்கு விளக்கத்தை அளிக்கிறார். பெரும்பாலான இடங்களில் திருவள்ளுவர் தலைப்பிற்கான வரையறையை முதல் குறளிலேயே வைத்துவிடுகிறார். பின்வரும் குறளிலும் அப்படித்தான் வைத்திருக்கிறார். 
கருமத்தால் நாணுதல் நாணுந் திருநுதல்
நல்லவர் நாணுப் பிற -1011 என்கிறார். 
அதாவது, நல்ல பெண்களுக்கு இயல்பாக ஏற்படும் வெட்கமானது நாணமில்லை, ஒருவர்  தனது தகாத செயல் காரணமாக கூனிக்குறுகும் செயலே நாணுதல் ஆகும் என்கிறார். 
பலரும் உணர்வதில்லை, இந்த பூமிக்கு மற்ற உயிர்கள் எப்படியோ அப்படித்தான் மனிதனும், இயற்கையை பொறுத்தவரை மனிதரும் மற்ற விலங்கினங்களைப் போல ஒரு பிராணியே! ஆனால், நாம் எப்படி மற்ற விலங்கினங்களில் இருந்து வேறுபடுகிறோம்? திருவள்ளுவரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். 
ஊணுடை எச்சம் உயிர்க்கெல்லாம் வேறல்ல 
நாணுடைமை மாந்தர் சிறப்பு -1012
எல்லா உயிர்களுக்கும் உணவும், உடையும் எஞ்சி நிற்கும் மற்ற எல்லா உயிரினங்களுக்கும் பொதுவானவை. ஆனால், நல்ல மனிதருக்கு, சிறப்புக்குரிய தேவையாக இருப்பது, பிறரால் பழிக்கப்படும் செயல்களை தவிர்த்து வாழக்கூடிய நாணுடைமைதான் என்கிறார். இங்கே, திருவள்ளுவர், மனிதர்களுக்கு தார்மீக மனசாட்சியை பிரகனப்படுத்துகிறார். 
அடுத்தக் குறளில், 
ஊனைக் குறித்த உயிரெல்லாம் நாண்என்னும்
நன்மை குறித்தது சால்பு -1013 என்கிறார்.
இதன் உட்பொருள் என்னவென்றால், உடம்பு இல்லாமல் உயிர் இவ்வுலகில் இயங்க முடியாது, அதுபோலவே, ‘நாணம்” என்ற தார்மீக மனசாட்சி இல்லாமல், ‘சால்பு” அதாவது ‘சான்றாண்மை” என்ற மேன்மை ஒருவரிடம் இருக்கவோ, வெளிப்படவோ, இயங்கவோ முடியாது. ‘நாணம்” என்பது சான்றாண்மையின் பல குணங்களில் ஒன்று அல்ல் அதுவே சான்றாண்மை தங்கியிருக்கும் அடிப்படை ஆதாரம் ஆகும். 
பல இடங்களில் நாம் பார்த்திருக்கின்றோம், தன்னுடைய சுயநலத்திற்காக பிறரை கெடுத்து பெருமை பீற்றுபவர்களை குறிப்பாக அரசியலில், தன்னுடைய பெயருக்காக, தான் அரசியலில் வெற்றியடைய வேண்டும் என்பதற்காக, கொலை நிகழ்த்துவது, சாதிய வன்மத்தை தூண்டிவிடுவது, மதக் கலவரத்தை கட்டமைப்பது, நிற பேதத்தை வகுப்பது, என்று பலவிதங்களில் பழிபாவச் செயல்களை செய்துவிட்டு தான் பெருமைக்குரியவர்கள் போல காட்டிக் கொள்பவர்களை இடித்துரைக்கிறார் திருவள்ளுவர். 
அணிஅன்றோ நாணுடைமை சான்றோர்க்கு அஃதின்றேல்
பிணி அன்றோ பீடுநடை -1014 என்கிறார். 
கலைஞர் அவர்களின் உரையில் இருந்து, ‘நடந்த தவறு காரணமாகத் தமக்குள் வருந்துகிற நாணம் எனும் உணர்வு, பெரியவர்களுக்கு அணிகலன் ஆக விளங்கும் அந்த அணிகலன் இல்லாமல் என்னதான் பெருமிதமாக நடை போட்டாலும், அந்த நடையை ஒரு நோய்க்கு ஒப்பானதாகவே கருத முடியும்” என்று விளக்குகிறார். 
அடுத்தக் குறளில், 
பிறர்பழியம் தம்பழியம் நாணுவார் நாணுக்கு
உறைபதி என்னும் உலகு -1015 என்கிறார். இதனை ஒரு நல்ல தலைவனுக்கு உரிய பண்பாகக் கொளலாம், ஏனென்றால், அரசியல்வாதிகள் சிலர், தங்களுடைய சுயநலத்திற்காக, தான் எதிர்கொண்ட பிரச்சனையில் இருந்து தப்பிப்பபதற்காக தன்னை நம்பியிருக்கும் ஒட்டு மொத்த மக்களையும் குழியில் தள்ளிவிட தயாராக இருக்கும் போக்கைக் காணலாம். ஆனால், எல்லா அரசியல் வாதிகளும் இவ்வாறு இருப்பதில்லை, தலைவராக இருப்பவர் தனக்கு ஏற்படக் கூடிய பழியைப் பற்றி மட்டும் அல்லாமல் பிறருக்கு ஏற்படும் பழியையும் தம்முடைய பழியாக சமமாக மதித்து நாணுபவரை, உலகத்தார் ‘நாணத்திற்கே உறைவிடம் இவர் தான்” என்று சிறப்பித்துச் சொல்வார்கள் என்கிறார். 
தொடர்ந்து பார்ப்போம்...

குறிப்பு: இணைக்கப்பட்டுள்ள படங்கள் மற்றும் காணொலி ஆகியவற்றை செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பத்தில் உருவாக்கியுள்ளேன். பிழையிருப்பின்  மற்றும் தாமதத்திற்குப் பொறுத்துக் கொள்க.

நன்றி

https://www.youtube.com/@AAAInfotainment

தோப்பு

Tuesday, 4 November 2025

திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்-94:

திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்-94:

பண்புடைமை:
கடந்த வாரம் பண்புடைமை அதிகாரத்தில் இருந்து முதற்பகுதி குறட்பாக்களைப் பார்த்தோம். இந்த வாரம் அதன் பிற்பகுதியைப் பார்ப்போம். 
உலகம் எவ்விதம் இயங்கிறது? அறிவியல் விளக்கம் வேறு, ஆனால், மானிடவியலின் அடிப்படையில் பார்த்தோமானால், இந்த உலகம் அமைதியாக இயங்கிக் கொண்டிருப்பதற்குக் காரணம் என்னவென்று திருவள்ளுவர் குறிப்பிடுகிறார்?
பண்புடையார்ப் பட்டுண்டு உலகம் அதுஇன்றேல்
மண்புக்கு மாய்வது மன் -996 என்கிறார். அதாவது, பண்புடையவர்கள் வாழ்வதால் தான் மக்கள் வாழ்க்கையானது எப்போதும் நிலைத்து இருக்கின்றது. ஆவர்கள் மட்டும் வாழாது போவார்கள் எனில், மனித வாழ்க்கை மண்ணுக்குள் புகுந்து மடிந்து போகும் என்கிறார். அதாவது, உலக நடைமுறைகள் பண்பாளர்களைச் சார்ந்து இயங்க வேண்டும், இல்லையெனில் அந்த நடைமுறைகள் நாசமாகிவிடும் என்கிறார். 
அடுத்தக் குறளினை பார்ப்பதற்கு முன்பு எனக்கு கௌதம புத்தர் அவர்களின் புகழ்பெற்ற வாக்கியம் ஞாபகத்திற்கு வருகிறது. ‘கருணையே இல்லாமல் மிகச் சிறந்த அறிவுடன் இருப்பதைக் காட்டிலும், அறிவே இல்லாமல் கருணையாளராக இருப்பது சிறந்தது” என்கிறார். அதாவது பண்பற்றவர் பெற்றிருக்கும் அறிவினால் மக்களுக்குப் பலன் கிட்டாது என்பதை நாம் உணரலாம். இந்தக் கருத்து பின்வரும் குறளில் பிரதிபலிக்கிறது. 
அரம்போலும் கூர்மைய ரேனும் மரம்போல்வர்
மக்கட்பண்பு இல்லா தவர்-997 என்கிறார். 
அதாவது, நன் மக்களுக்கு உரிய பண்பு இல்லாதவர்கள், மரத்தை அறுக்கும் அரம் போன்று கூர்மை உடையவராக இருந்தாலும், ஓரறிவு கொண்ட மரத்தைப் போன்றவர்கள் ஆவர் என்கிறார். இதில் மரத்தினால் நிறையப் பயன் உள்ளதே என்று நினைத்துக் கொள்ள வேண்டாம், ஆரறிவு மனிதன் ஓரறிவு மரத்தைப் போல சிந்தனையுடன் தான் அவனுடைய செயல்பாடு பண்பற்று இருந்தால் விளங்கும் என்கிறார். 
நாம், நமது மத்தியில் நிறையப் பண்பாளர்களை பார்த்து வருகிறோம். உதாரணமாக நல்லக்கண்ணு ஐயா அவர்களை எடுத்துக் கொண்டோம் என்றால், எவ்வளவு தீமைகள் தான் எதிர்கொண்ட போதிலும் பொறுமையாக அனைத்தையும் கையாண்டார். ஏந்தச் சூழலில் தன்னிடம் இருந்த மேலான பண்பை அவர் கைவிட வில்லை. இதனையே தம்முடைய அடுத்தக் குறளில்,
நண்பாற்றார் ஆகி நயமில செய்வார்க்கும் 
பண்பாற்றார் ஆதல் கடை -998 காட்டியுள்ளார் திருவள்ளுவர்.
நட்புக்கு ஏற்றவராக இல்லாமல் தீமைகளையேச் செய்து கொண்டிருப்பவரிடத்தில் கூட, நாம் பொறுமை காட்டிப் பண்புடையவராக நடந்து கொள்ளாவிட்டால் அது இழிவான செயலாகக் கருதப்படும் என்கிறார். 
‘தனிமையிலே இனிமை காண முடியுமா? நள்ளிரவினிலே சூரியனும் தெரியுமா?” என்ற பாடலைக் கேள்விப் பட்டிருப்போம். ஒருவர் மக்களோடு பேசிப் பழகும் பண்பில்லாதவர்களாக இருக்கிறார் என்றால், அவர் வாழ்வு இருள் சூழ்ந்த வாழ்வாகவே இருக்கும். ஒருவருடன் பேசுவதன் மூலம் தான் அவர் மனதில் என்ன நினைக்கிறார் என்று தெரிய வரும். இல்லையென்றால், அவர் இப்படி நினைத்திருப்பாரோ?, அல்லது அப்படி நினைத்திருப்பாரோ? ஏன்ற ஐயமே மிகுதியாக இருக்கும். அதுவே ஒவ்வொருவரையும் தவராகவும் நினைக்கவும் தோன்றும். பின்வரும் குறளில் திருவள்ளுவர் பின்வருமாறு குறிப்பிடுகிறார். 
நகல்வல்லர் அல்லார்க்கு மாயிரு ஞாலம் 
பகலும்பாற் பட்டன்று இருள் -999
அதாவது, நல்லப் பண்பு இல்லாததால் மற்றவர்களுடன் கலந்து பேசி மனம் மகிழும் இயல்பு இல்லாதவருக்கு, இந்தப் பெரிய உலகம் இருள் இல்லாமல் இருக்கும் பகல் பொழுதில் கூட இருட்டிலேயே இருப்பது போலவாம் என்று குறிப்பிடுகிறார்.  
ஒரு படத்தில் நகைச்சுவைக் காட்சி ஒன்று பார்த்தேன், அதில் கதாநாயகன் சொல்கிறார் ‘வுடு மச்சான், உனக்கு நேரமே சரியில்லைடா” என்கிறார். அதற்கு பதிலளித்த நகைச்சுவை நடிகர் ‘நேரம்லாம் நல்லாதான் இருக்கு, ஆனா, சரியில்லைடா” என்பார். அதுபோல, ஒரு பேரல் நிறையப் பால் இருந்தாலும் ஒரு துளி விடமானது அதனைக் கெடுத்துவிடும். ஒரு வேளை அழுக்கான பாத்திரத்தில் வைக்கப்பட்டப் பாலும் பயன்படாமல் கெட்டுவிடுகிறது. இதனையே உதராணமாகப் பின்வரும் குறளில் குறிப்பிடுகிறார் திருவள்ளுவர். 
பண்பிலான் பெற்ற பெருஞ்செல்வம் நன்பால்
கலந்தீமை யால்திரிந் தற்று -1000
நல்ல பண்பு இல்லாத ஒருவன் பெற்ற பெரும் செல்வமானது, அழுக்குப்பிடித்தப் பாத்திரத்தில் வைக்கப்பட்டிருக்கும் போது, பாத்திரத்தின் அழுக்குத் தன்மையால் பால் திரிந்து ஒருவருக்கும் பயன்படாமல் போவது போல, அவனுடைய செல்வமும் ஒருவனுக்கும் பயன்படாமல் வீணாக்போகும் என்கிறார். 
தொடர்ந்து பார்ப்போம்...

குறிப்பு: இணைக்கப்பட்டுள்ள படங்கள் மற்றும் காணொலி ஆகியவற்றை செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பத்தில் உருவாக்கியுள்ளேன். பிழையிருப்பின்  மற்றும் தாமதத்திற்குப் பொறுத்துக் கொள்க.

நன்றி

https://www.youtube.com/@AAAInfotainment

தோப்பு

Wednesday, 29 October 2025

திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்-93:

திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்-93:

பண்புடைமை: 
திருவள்ளுவர் அவர்கள் உடைமை என்னும் தலைப்பில் எழுதிய அதிகாரங்களைப் பற்றிப் பார்க்கின்றோம். கடந்த வாரங்களில் அன்புடைமை;, அறிவுடைமை, அடக்கமுடைமை, ஒழுக்கமுடைமை, பொறையுடைமை, அருளுடைமை, ஊக்கமுடைமை மற்றும் ஆள்வினையுடைமை பற்றிப் பார்த்தோம். இந்த வாரம் பண்புடைமை என்னும் அதிகாரத்தைப் பற்றிப் பார்ப்போம்.
பண்புடைமை என்னும் இந்த அதிகாரம் 100 ஆவது அதிகாரமாக திருக்குறளில் அமைந்துள்ளது. இதை ஆங்கிலத்தில் ‘ஊழரவநளல” என்று மொழி பெயர்த்தாலும், அது மூலத் தமிழின் ஆழத்தையும் தத்துவத்தையும் முழுமையாக வெளிபடுத்துவதில்லை. ‘பண்பட்ட மனிதநேயத்தைக் கொண்டிருத்தல்” அல்லது ‘குணத்தின் தகைமை” என்பதே மிகவும் துல்லியமான மொழி பெயர்ப்பாக இருக்கும். இந்த விளக்கம் , ‘பண்பு” என்பது ஒரு தனிநபரின் உள்ளார்ந்த இயல்பு, குணம் மற்றும் தரத்தைக் குறிக்கிறது. மேலும் ‘உடைமை” என்பது அதைக் கொண்டிருக்கும் நிலையையும் குறிக்கிறது. ஆகவே பண்புடைமை என்பது ஒருவரின் உள்ளார்ந்த குணத்தை சமூக நடத்தைக்கு இசைவாக மாற்றும் ஒரு உள்ளார்ந்த, பண்பட்ட நிலையாகும். இந்த பண்பட்ட மனித நேயமே சமூக நல்லிணக்கத்திற்கு அடித்தளமாக அமைகிறது. நூகரிகத்தின் கட்டமைப்பையே தாங்கி நிற்கிறது. மேலும், அறிவு, அதிகாரம் மற்றும் செல்லவத்திற்கு உண்மையான அர்த்தத்தையும் சட்டபூர்வத் தன்மையையும் வழங்கும் இறுதித் தகுதியாக விளங்குகிறது என்று திருவள்ளுவர் வாதிடுகிறார். இது ஒரு மனிதனை வெறுமனே ஒரு உயிரியில் நிலையில் இருந்து உண்மையான சமூக மற்றும் அறநெறி உயிரினமாக உயர்த்தும் வரையறுக்கும் பண்பாகும். 
இனி குறளுக்குச் செல்வோம். 
பொதுவாகவே, ஒருவர் அணுகக் கூடிய நிலையில் இல்லையென்றால், ஒன்று அவரை மக்கள் பார்ப்பதை தவிர்த்து விடுவர், ஆனால், அதே வேளையில் ஒருவர் அனைவரிடம் எளிதாக பேசுகிறார். எவராலும் அவரை அணுக முடியும் பேச முடியும் என்ற நிலையில் இருந்தால், மக்கள் அவரை மிகவும் பண்புடையவர், எளியவர், நல்லவர் என்ற எண்ணத்திற்கு மிக எளிதாக வந்து விடுகின்றனர். இதுவே, பண்புடையவர் என்பதற்கான எளிதான வழியாக இருக்கிறது என்று வள்ளுவர் குறிப்பிடுகிறார் பின்வரும் குறளில்...
எண்பதத்தால் எய்தல் எளிதென்ப யார்மாட்டும்
பண்புடைமை என்னும் வழக்கு -991 என்கிறார். அதாவது, யாராயிருந்தாலும் அவர்களிடத்தில் எளிதாகக் கண்டுப் பேசும் நிலையில் வாழ்ந்தால், அதுவே பண்புடைமை என்கிற சிறந்த ஒழுக்கத்தைப் பெறுவதற்கு எளிய வழியாக அமையும் என்கிறார். 
‘அந்தப் பையன் ஏன் இப்படி இருக்கமாட்டான்..? அவனுடைய அப்பா எப்பேர்பட்ட பண்புடையவர் தெரியுமா? புலிக்குப் பிறந்தது பூனையாகுமா?” என்று கூறுவதுண்டு. கீழ்க்காணும் குறளில், எல்லோர் மீதும் அன்புள்ளவராக வாழ்வது, உலகத்தோடு ஒத்து வாழும் குடும்பத்தில் பிறந்திருத்தல் இவை இரண்டும் பண்புடைமை என்னும் நல்ல வழிகள் என்று கூறுகிறார்.  
அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் இவ்விரண்டும்
பண்புடைமை என்னும் வழக்கு -992
நிறையக் காட்சிகளைக் கொண்டு தவறுதலான புரிதல் ஏற்படுவது உண்டு. சமீப காலங்களில் ஊடகங்களில் பொய்யை உண்மைப் போல புனையும் சம்பங்கள் நிறைய அரங்கேறி வருகின்றன. சிலர் திரைப்படங்களிலும் சின்னத்திரைத் தொடர்களிலும் பார்த்து அதில் நடிப்பவர்கள் உண்மையிலே அப்படிப்பட்ட ஆட்கள் தான் என்று நம்பி விடுகின்றனர். வில்லன்களாக நடித்த நிறைய நடிகர்களை பொதுமக்கள் விரட்டுவதும் அவர்களை வசைபாடுவதும் அரங்கேறியதனை நாம் அறிவோம். ஆனால், நிறைய வில்லன்கள் உண்மையில் தனிப்பட்ட வாழ்க்கையில் பண்புடையவர்களா அவர்களை அறிந்த வட்டாரங்களில் உள்ளவர்களுத் தெரியும். அதேபோன்று, கதாநாயகர்களை மிகச் சிறந்த உத்தமர்களாக மக்கள் நினைப்பதுண்டு, மாறாக அவர்கள் பல வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டு தண்டனை பெறும் நிகழ்வுகளையும் பார்க்கின்றோம். ஆகவே, யார் நல்ல மக்கள் என்று பின்வரும் குறளில் திருவள்ளுவர் சொல்கிறார் என்றால்,
உறுப்பொத்தல் மக்களொப்பு அன்றால் வெறுத்தக்க
பண்பொத்தல் ஒப்பதாம் ஒப்பு -993 என்கிறார். 
நற்பண்பு இல்லாதவர்களை அவர்களின் உடல் உறுப்புகளின் தோற்றத்தால் மட்டுமே ஒப்பிட்டுப் பார்ப்பது சரியாகாது, நற்பண்புகளால் உள்ளத்துடன் இணையும் பண்பால் பிறருடன் ஒத்திருப்பதே மக்கள் எனப்படுவர் என்கிறார். 
அடுத்தக் குறளில், இந்தக் காலத்தில் கொள்ளை என்பது கால ஓட்டத்தில் மிக சாதாரணமாக நடக்கிறது, சிலர் ஊழல் செய்வதையே கௌரவமாக தாங்கள் கையும் களவுமாக பிடிபடும் வரை நினைப்பதுண்டு. சிலருக்கு அந்த சொரணையும் பிடிபட்டாமல், நான் செய்த தவறு என்ன என்று தான் மக்களுக்கு பல்வேறு துரோகங்களை செய்துள்ளோம் என்று கொஞ்சம் கூட வருந்தாமல் இருப்பவர்களும் உண்டு. ஆனால், இவர்கள் மத்தியில் எவ்வளவு இடையூறு வந்தாலும் நேர்மையுடனும், மற்றவர்கள் வாழ்வில் நன்மை கிடைப்பதனை இலட்சியமாகவும் வாழ்பவர்கள், அதில் அவர்கள் பணம் பெருக்கவில்லையெனினும் விவரம் இல்லாதவன் என்று இகழப்பட்டாம் மன மகிழ்ச்சி குறையாது திருப்தியான நிலையில் வாழ்வார்கள். அவரால் பயன் பெற்றவர்கள் மனதிலும் நேர்மையாளர்கள் பண்பாளர்கள் மத்தியில் அவர் எப்போதும் உயர்வானவராகவே போற்றப்படுவார். இதனையே, 
நயனொடு நன்றி புரிந்த பயனுடையார்
பண்புபா ராட்டும் உலக -994 திருவள்ளுவர் குறிப்பிடுகிறார். அதாவது, நீதியையும் நன்மையையும் விரும்பிப் பிறருக்குப் பயன்பட வாழும் பண்பினை உலகத்தார் போற்றிக் கொண்டாடுவர் என்கிறார். 
அடுத்தக் குறளில், 
நகையுள்ளும் இன்னா திகழ்ச்சி பகையுள்ளும்
பண்புள பாடறிவார் மாட்டு -995 என்கிறார். 
பலமுறை நாம் சொல்வதுண்டு, விளையாட்டை விளையாட்டாகப் பார்க்க வேண்டும். அதாவது, விளையாட்டுதான் பலர் கூடி விளையாடுவதால் ஒற்றுமையை வளர்க்கும,; பல விதிகள் இருப்பதால் ஒழுக்கத்தையும் வளர்க்கும் நற்பண்பை வளர்க்கும் ஒரு வாய்ப்பு.  அதனால் தான் ‘நாம் அடிக்கடி விளையாட்டுக்குத் தானே சொல்கிறாய், உண்மையாக இல்லை தானே?”  என்று ஒரு உணர்வுபூர்வமான வார்த்தைகள் வெளிவரும் போது அவசரப்பட்டு வார்த்தை விட்டுவிடக் கூடாது என்று சுதாரிப்பாக வார்த்தைகளைப் பயன்படுத்துகிறோம். அதன் அர்த்தம், விளையாட்டு என்பது வினையல்ல என்பதுதான். ஆனால், அதனை அரசியலாகவும், பிறரை இகழ்ச்சியாகப் பார்க்கும் ஒரு இடமாகவும் சிலர் மாற்றுவதுண்டு. மேற்காணும் குறளில் திருவள்ளுவர், ‘ஒருவரை இகழ்ந்து பேசுதல் விளையாட்டிலும் துன்பம் தருவதாக இருக்கும், பிறருடைய இயல்பை அறிந்து நடப்பவரிடத்தில் பகைமையில் கூட நல்லப் பண்புகள் இருக்கின்றன என்கிறார். 

தொடர்ந்து பார்ப்போம்...

குறிப்பு: இணைக்கப்பட்டுள்ள படங்கள் மற்றும் காணொலி ஆகியவற்றை செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பத்தில் உருவாக்கியுள்ளேன். பிழையிருப்பின்  மற்றும் தாமதத்திற்குப் பொறுத்துக் கொள்க.

நன்றி

https://www.youtube.com/@AAAInfotainment

தோப்பு

Wednesday, 22 October 2025

திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்-92: ஆள்வினையுடைமை :

திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்-92:
ஆள்வினையுடைமை :
கடந்த வாரம் ஆள்வினை உடைமை அதிகாரத்தின் முற்பகுதியைப் பார்த்தோம். இந்த வாரம் அதன் பிற்பகுதியைப் பார்ப்போம். எந்த ஒரு ஊக்குவிப்புப் பயிற்றுனரும் (ஆழவiஎயவழைn வுசயiநெச) முக்கியமாக குறிப்பிடுவது வெற்றியை அல்ல, அதற்கான முயற்சியையே ஆகும். நம்முடைய முயற்சியை எவ்விதம் மேம்படுத்துவது என்பதே பல வித பயிற்றுனர்களும் நமக்கு பயிற்றுவிப்பது. இந்த விடயத்தை, முயற்சி நிச்சயம் நல்ல பலனைத் தரும் என 2000 வருடங்களுக்கு முன்னரே ஆணித்தரமாக குறிப்பிடுகிறார் திருவள்ளுவர் அவர்கள்.
முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை
இன்மை புகுத்தி விடும் -616
இடைவிடாத தொடர் முயற்சியானது ஒருவனுக்குச் செல்வத்தைப் பெருகச் செய்யும், முயற்சி இல்லாமல் இருப்பதோ அவனிடத்தில் வறுமையைச் கொண்டு போய்ச் சேர்த்து விடும் என்கிறார்.
மடியுளாள் மாமுகடி என்ப மடியிலான்
தாளுளான் தாமரையி னாள் -617
மேற்கூறிய குறளுக்கு கலைஞர் அவர்கள் சொல்லும் விளக்கமானது, திருமகள், மூதேவி எனப்படும் சொற்கள் முறையே முயற்சியில் ஊக்கமுடையவரையும், முயற்சியில் ஊக்கமற்ற சோம்பேறியையும் சுட்டிக் காட்டிப் பயன்படுவனவாகும் என்கிறார். எனக்கு இக்குறளில் மாற்றுக் கருத்து உள்ளது. ஏனெனில் தமிழ்ச் சமூகம் மூதேவி என்னும் மூத்த தேவியை, தவ்வையைதான் முன்னர் வழிபட்டது, பிறகு அது சூழ்ச்சியால் வீழ்த்தப்பட்டுள்ளது என்பது எனது கருத்து. இன்றும் ‘ஜேஸ்டா தேவி ” என்ற பெயரில் இந்தியாவின் பல இடங்களில் அழைக்கப்படுகிறார். திருவானைக்கோவில் ஐம்புகேசுவரர் ஆலயத்திலும் இவருக்கென்று இடமுண்டு. போகரும் இவருக்கென்று தனிப்பாடலை இயற்றியுள்ளார்.
பலரும் சொல்லக் கேட்டிருப்போம் என்னுடைய இந்த நிலைக்கு என்னுடைய முன்னோர் செய்த பாவம் தான், ஆதலால், தான் நான் வறுமை நிலையில் இருக்கின்றேன், ஆதலால் தான் எனது குழந்தை ஊனமுற்ற நிலையில் பிறந்துள்ளது என்று தவறாக எண்ணுவதுண்டு. உண்மையில் பல விடயங்களை அவர்கள் ஆய்ந்து அறிந்தாலே பலவற்றையும் சரி செய்து விட முடியும். குழந்தை கருவுற்ற 2 மாதத்திற்குள்ளேயே அது டௌன் சின்ட்ரோம் என்ற நிலையில் இருக்கிறதா என்று ஆய்ந்தறிந்து அதனைத் தடுப்பதற்கான மருந்துகள் இருக்கின்றன. இப்போது மரபு சார்ந்த பிரச்சனைகள் கருவிலேயே தடுக்கும் அளவிற்கு மருத்துத் துறையில் முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளது. ஆனால், விதியையே குறை சொல்வது ஒருவருடைய ஊக்கமின்மையும் முயற்சியின்மையையும் குறிக்கிறது. இதுதான் ஒருவர் தொடர்ந்து வறுமை நிலையில் இருப்பதற்கும் காரணமாகும், ஒருவர் ஏழையாக பிறப்பது அவர் குற்றமில்லை ஆனால், ஏழையாகவே இறப்பதற்கு அவர்தான் காரணமாக இருக்கிறார் என்பதனை அவர் உணர வேண்டும். அது அவருடைய முயற்சியின்மைதான் என்பதனை வள்ளுவர் இவ்விதம் குறிப்பிடுகிறார்.
பொறியின்மை யார்க்கும் பழியன்று அறிவறிந்து
ஆள்வினை இன்மை பழி -618
நல்லது விளைவிக்கும் விதி இல்லாமல் இருப்பது என்பது யாருக்கும் குற்றம் ஆகாது, அறிய வேண்டியவைகiளா அறிந்து அதற்குரிய முயற்சி செய்யாமல் இருப்பதே ஒருவனுக்கானப் பழி ஆகும் என்கிறார்.
ஒருவனுக்கு உச்சபட்ச ஊக்கம் தருவதென்றால் எப்படித் தரலாம்? இதோ ஐயன் தருகிறார் பாருங்கள்!
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்
மெய்வருத்த்க் கூலி தரும் -619 என்கிறார்.
ஒவ்வொருவரும் தன்னால் முடியவில்லை என்று எளிதாக தெய்வத்தின் மீது பழியை அல்லது சுமையை இறக்கி விட்டுச் செல்வார்கள். ஆனால், அந்தத் தெய்வத்தின் அருளாலே கைகூடாது போனாலும் கவலைப் படாதே ஒருவனுடைய முயற்சியானது, தம் உடல் உழைப்பிற்கு ஏற்றப் பலனைத் தப்பாமல் தந்துவிடும் என்கிறார்.
அடுத்தக் குறளில்
ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்
தாழாது உஞற்று பவர் -620 என்கிறார்.
618 ஆவது குறளினை இக் குறளில் ஆணித்தரமாக விளக்குகிறார்.
ஒருவர் சோர்வும் இல்லாமல் முயற்சியிலும் குறைவும் இல்லாமல் இடைவிடாமல் செய்பவர்கள், கெடுதலான விதியையும் வென்று, புறமுதுகு காட்டி ஓடச் செய்பவர்கள் ஆவார்கள் என்கிறார். இதைவிட ஒருவனுக்கு எப்படி நம்பிக்கையளிப்பது. விதியே என்று உட்கார்ந்திருப்பவர்களுக்கு நீதான்டா விதியை உடைக்கும் சதி என்று அவன் சோம்பலை துவம்சம் செய்து ஆற்றல் அளிக்கும் வீரியமிகுந்த நம்பிக்கையை திருவள்ளுவர் அவர்கள் அளிக்கிறார்கள். சோர்வுடன் இருப்பவர்கள் இக்குறள்களை உரமிக்க வாக்காக எடுக்கக்கடவது.
தொடர்ந்து பார்ப்போம்...

குறிப்பு: இணைக்கப்பட்டுள்ள படங்கள் மற்றும் காணொலி ஆகியவற்றை செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பத்தில் உருவாக்கியுள்ளேன். பிழையிருப்பின் மற்றும் தாமதத்திற்குப் பொறுத்துக் கொள்க.

நன்றி

https://www.youtube.com/@AAAInfotainment

Wednesday, 15 October 2025

திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்-91:

திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்-91:
ஆள்வினையுடைமை :
திருவள்ளுவர் அவர்கள் உடைமை என்னும் தலைப்பில் எழுதிய அதிகாரங்களைப் பற்றிப் பார்க்கின்றோம். கடந்த வாரங்களில் அன்புடைமை, அறிவுடைமை, அடக்கமுடைமை, ஒழுக்கமுடைமை, பொறையுடைமை, அருளுடைமை மற்றும் ஊக்கமுடைமை பற்றிப் பார்த்தோம். இந்த வாரம் ஆள்வினையுடைமை என்னும் அதிகாரத்தைப் பற்றிப் பார்ப்போம்.
ஆள்வினையுடைமை என்னும் தலைப்பின் மொழியியல் மற்றும் கருத்தியல் பகுப்பாய்வு வள்ளுவரின் தத்துவத்தின் ஆழத்தை வெளிப்படுத்துகிறது. இந்தச் சொல் "ஆள்வினை" மற்றும் "உடைமை" ஆகிய இரண்டு சொற்களின் கூட்டு ஆகும். "உடைமை" என்பது "பெற்றிருத்தல்" அல்லது "கொண்டிருக்கும் நிலை" என்று எளிமையாக மொழிபெயர்க்கப்படுகிறது. சிக்கலானது "ஆள்வினை" என்பதில் உள்ளது. இது பொதுவாக "ஆண்மையான முயற்சிஇ" "விடாமுயற்சிஇ" அல்லது "உழைப்பு" என்று மொழிபெயர்க்கப்பட்டாலும்இ அதன் வேர்கள் ஒரு ஆளுமைமிக்க கருத்தை பரிந்துரைக்கின்றன. "ஆள்" என்பது ஆளுதல் அல்லது நிர்வகித்தலுடன் தொடர்புடையதுஇ மற்றும் "வினை" என்பது செயல் அல்லது வேலையைக் குறிக்கிறது. எனவேஇ ஒரு துல்லியமான பொருள் "ஒருவரின் செயல்களை ஆளும் திறனைக் கொண்டிருத்தல்" என்பதாகும். இது கடினமாக உழைப்பது மட்டுமல்ல; இது ஒருவரின் முயற்சிகள் மீது முழுமையான கட்டுப்பாட்டைச் செலுத்திஇ அவற்றை அதிகாரத்துடனும் அறிவுடனும் வழிநடத்துவதாகும். இது மன உறுதியான "ஊக்கம்" மற்றும் நீடித்த உடல் உழைப்பான "மெய்முயற்சி" ஆகியவற்றின் சக்திவாய்ந்த இணைப்பைக் குறிக்கிறது. 'ஆள்வினையுடைமை' அதிகாரத்தின் பத்து குறள்களும் மனித முயற்சியின் ஆற்றலுக்கான ஒரு தொடர்ச்சியான மற்றும் படிப்படியான வாதத்தை உருவாக்குகின்றன. ஒவ்வொரு குறளும் முந்தைய குறளின் மீது கட்டமைக்கப்பட்டுஇ மனவுறுதியின் உள் உளவியலில் இருந்து வெளிப்புற சமூக-பொருளாதார தாக்கங்கள் வரை நகர்ந்துஇ இறுதியாக விதி என்ற கருத்துடன் நேரடியாக மோதுகிறது.
ஏற்கனவே ‘எண்ணித் துணிக கருமம்..” என்று துவங்கும் திருக்குறள் ஞாபகத்தில் இருக்கும். அக்குறளில் எந்த ஒரு செயலையும் நன்கு ஆராய்ந்து துவங்க வேண்டும், துவங்கிய பிறகு, இந்தச் செயல் நாம் துவங்கியிருக்க வேண்டுமா? அது எதிர்பார்த்த முடிவைத் தருமா? ஏன்பது போன்று ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கக் கூடாது என்கிறார். அதாவது தீர்;க்கமாக முடிவு செய்து ஒரு செயலில் இறங்க வேண்டும் என்கிறார். 
ஒரு தொழில் முனைவோர் இருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அவர் தீர்க்கமாக முடிவு செய்து தான் தொழிலை துவங்கியுள்ளார். ஆனாலும், அவர் எதிர்பார்த்த வேகத்தில் விற்பனை இல்லை என்றால் என்ன செய்யவேண்டும்? எந்த நிலையில் தொய்வு உள்ளது என்பதைக் கண்டறிந்து அதனை மேம்படுத்த முயற்சிக்க வேண்டும். இதனையே ஆள்வினையுடைமையின் முதல் குறட்பாவில் ஆலோசனை வழங்குகிறார் திருவள்ளுவர். 
அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும்
பெருமை முயற்சி தரும் -611 என்கிறார். 
அதாவது, இந்தச் செயலை நம்மாலே செய்ய முடியாது என்று சோர்வு கொள்ளாமல் இருக்க வேண்டும். இடைவிடாத முயற்சியானது அதனைச் செய்து முடிக்கும் வலிமையைத் தரும் என்கிறார். 
அப்படி யார் இடைவிடாமல் முயற்சி செய்து, அதில் வெற்றி பெற்றவரை உலகம் பாராட்டும் அவருடைய முயற்சிகளைப் போற்றத் துவங்கும். அவ்வாறு தொழிலை துவங்கியவர் முயற்சிக்குப் பயந்து இடையிலேயே விட்டுவிட்டால் என்ன ஆகும். திருவள்ளுவரே சொல்கிறார் கேளுங்கள்… வினைக்கண் வினைகெடல் ஓம்பல் வினைக்குறை
தீர்;ந்தாரின் தீர்ந்தன்று உலகு -612 என்கிறார். 
ஒரு செயலைச் செய்து முடிக்காமல் இடையிலேயே கைவிட்டவரை உலகமும் கைவிடும். ஆதலால், செய்யும் செயலினை செய்ய முடியாதுஎன்று முயற்சி இ;ல்லாமல் இருப்பதைக் கைவிட வேண்டும் என்கிறார். ஆகவே, முயற்சி திருவினையாக்கும் என்பதை உணர்ந்து தொடர வேண்டும். 
அவ்வாறு முயற்சி உடையவர்கள் தான் உண்மையில் திருவள்ளுவர் கூறுவது போல் பெருமைக் கொள்ள முடியும். 
தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே
வேளாண்மை என்னுஞ் செருக்கு -613
ஏல்லோருக்கும் உதவி செய்தல் என்னும் பெருமித உணர்வானது, விடா முயற்சி என்று சொல்லப்படுகின்ற உயர்ந்த பண்பில் தான் நிலைத்திருக்கிறது என்கிறார். மேலும், எந்த நிலையிலும் பயம் இல்லாமல் தொடர்ந்து முயற்சிக்க வேண்டும் என்பதனை பின்வரும் குறளில் வலியுறுத்துகிறார். 
தாளாண்மை இல்லாதான் வேளாண்மை பேடிகை
வாளாண்மை போலக் கெடும் -614
போருக்கு பயப்படுகின்ற ஒரு பேடியின் கையிலுள்ள வாள் எடுத்தும் ஆளும் தண்மை போல் இல்லாதது போல விடாமுயற்சி இல்லாதவன் உதவுகின்ற தன்மையும் நிறைவேறாமல் போகும்.  
ஏல்லா மனிதர்களுமே பொதுவாகவே சுய நலம் இருந்தாலும், தன் நலத்தைக் கருதாமல் மற்றவர்களுக்காக முன் நிற்பவர்களை உலகம் கொண்டாடும். அத்தகையவர்களை திருவள்ளுவர் எவ்வாறு குறிப்பிடுகிறார்.
இன்பம் விழையான் வினைவிழைவான் தன்கேளிர்
துன்பம் துடைத்தூன்றும் தூண் -615
தன்னுடைய இன்பத்தை விரும்பாமல், எடுத்த செயலை முடிப்பதையே விரும்புகிறவன் தன்னுடைய துன்பத்தை மட்டுமல்லாது தன் சுற்றத்தாரின் துன்பத்தையும் போக்கி அவர்களைத் தாங்கும் தூண் போலாவான் என்கிறார். சுருக்கமாக தெளிவுபடுத்த வேண்டும் என்றால், ஒருவன் தன்னார்வமாக , தான் வாழும் பகுதியில் சாக்கடை நிரம்பி வழிகின்றது. அந்தப் பகுதியில் இருப்பவர்கள் மூக்கை மூடிக் கொண்டு கடந்து செல்லும் போது, சம்மந்தப்பட்ட அதிகாரிகள் ஒருவேளை அலட்சியம் காட்டுவார்கள் அலைய விடுவார்கள் என்ற நிலையை உணர்ந்திருந்தாலும், அதற்கு உரிய மனுக்களையும் நடக்கவில்லையென்றால் புகாரையும் அளித்து அந்த செயலினை அவர் செய்யும் போது, அவருடைய பிரச்சனையும் தீருகிறது. அவரைச் சுற்றியுள்ளவர்களின் பிரச்சனையும் தீர்க்கப்படுகிறது.

தொடர்ந்து பார்ப்போம்...

குறிப்பு: இணைக்கப்பட்டுள்ள படங்கள் மற்றும் காணொலி ஆகியவற்றை செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பத்தில் உருவாக்கியுள்ளேன். பிழையிருப்பின்  மற்றும் தாமதத்திற்குப் பொறுத்துக் கொள்க.

நன்றி

https://www.youtube.com/@AAAInfotainment

தோப்பு

Tuesday, 7 October 2025

திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்-90: ஊக்கமுடைமை:

திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்-90: 

ஊக்கமுடைமை:

கடந்த வாரம் ஊக்கமுடைமை அதிகாரத்தின் முதல் பகுதியைப் பார்த்தோம். இந்த வாரம் அதன் பிற்பகுதியைக் காண்போம். எண்ணம் போல் வாழ்க்கை என்று கேள்விப்பட்டிருப்போம். பலரும் அதனை உணர்ந்திருப்பர். அதே போல் எதிர்மறை எண்ணங்களைத் தவிர்க்க வேண்டும் என்றும் குறிப்பிடுவர். எதிர்மறையாகப் பேசுவதையும் தவிர்க்க வேண்டும் என்றும் குறிப்பிடுவதுண்டு, ஏனெனில் ‘ஒரு சொல் வெல்லும், ஒரு சொல் கொல்லும்” என்ற நம்பிக்கையின் வெளிப்பாடே அது. ஆதலால், எந்த நிலையிலும் நேர்மறையாக எண்ணும் போதும் செயல்படும் போதும் நமக்கான முன்னேற்றத்தினை கண்கூடாகக் காண முடியும். முன்னேற்றம் என்றால் சிலர் பொருளாதார அளவுகோலையேக் கொள்கின்றனர். எப்போதும் முன்னேற்றம் என்பது தன்னுடைய முயற்சியில் பொருளாதாரத்திலோ, தொழில் ரீதியாகவோ உயர்வினைக் கண்டாலும் மனதளவில் ஏற்படும் முன்னேற்றத்தை அல்லது விளைவுகளை அவர் எவ்வாறு கொள்கிறார் என்பதிலேயே அமைகிறது. ஏனெனில் பணம் நிறைய சேர்ந்தும் மன உளைச்சலுடன் இருப்பவர்களைப் பார்க்க முடிகிறது. இச்சூழலில் இருப்பவர்கள் செந்நாப்போதரின் வார்த்தைகளை புரிந்து கொள்வது சாலச் சிறந்தது. பின்வரும் குறளில் திருவள்ளுவர் குறிப்பிடுவதாவது

 உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது 

தள்ளினுந் தள்ளாமை நீர்த்து -596 

நமக்கெல்லாம் மிகப் பரிச்சயமான இந்தக் குறளில் நினைக்கக்கூடியவற்றை அல்லது எண்ணக்கூடியவை எல்லாம் உயர்ந்த நினைப்பாகவே இருக்க வேண்டும், ஒரு வேளை அந்த நிலை கைகூடாத நிலையிலும், அப்படி நினைப்பதை மட்டும் கைவிடவேக் கூடாது என்கிறார். சாலமன் பாப்பையா அவர்கள் உரையில் குறிப்பிடும் போது ‘எண்ணியபடி வேறு காரணங்களால் நிறைவேறாமல் போனாலும், பெரியோர் நம்மைப் பாராட்டுவார், ஆகவே அது நிறைவேறியதாக கருதப்படும்” என்கிறார். திருவள்ளுவரை இந்த வகையினர் என்று பிரிக்க இயலாதவாறு பலதுறையிலும் சிறந்து விளங்கியவர். அவருடைய குறளில் தான் எத்தனை அணிகள், உவமைகள், கருத்துக்கள், தத்துவங்கள் மற்றும் ஒப்புமைகள் என்று பலவாறு பெருமைப்படும் அளவிற்கு அடுக்கிக் கொண்டே செல்லலாம், ஒருவருடைய ஊக்கம் என்பது எப்படி இருக்க வேண்டும்? சிலர் வாழ்க்கையில் எவ்வளவு வலியைப் பெறுகின்றனர்? எவ்வளவு சோகங்களை அனுபவிக்கின்றனர்? எவ்வளவு துரோகங்களை எதிர்கொள்கின்றனர்? அவற்றை எப்படிக் கடந்து செல்வது. இதோ, கீழே வள்ளுவர் உரைக்கிறார்... 

சிதைவிடத்து ஒல்கார் உரவோர் புதையம்பிற் 

பட்டுப்பா டூன்றுங் களிறு -597 

அதாவது போரில், தன்னுடைய உடம்பில் தன் உடம்பே மறையும் அளவிற்கு அம்புகளால் புண்பட்ட போதும், யானையானது தன் தொடர்ந்து முன்னேறிச் சென்று தன் பெருமையை நிலை நிறுத்தும்; அதுபோல ஊக்கம் உடையவர் அழிவிலும் தளர மாட்டார்கள் என்கிறார். எவ்வளவு இடர் வந்த போதிலும் மனதில் திடமான ஊக்கம் உடையவர் முன்னேறிச் செல்வர் என்பதற்கு எவ்வளவு அருமையான ஒரு உதாரணம்! வள்ளல் என்று ஒருவர் எவ்வாறு போற்றப்படுகிறார். இல்லை என்று ஒருவர் வரும் போது தன்னிடம் இருப்பதில் இருந்து கிள்ளிக் கொடுப்பதல்ல கொடை, அள்ளிக் கொடுப்பதே ஆகும். இந்தக் கதையை நான் கேட்டதுண்டு, ஒரு முறை அர்ஜீனன் கிருஷ்ணரிடம், நான் நிறைய கொடைக் கொடுக்கிறேன். ஆனால், கர்ணனைத்தான் எல்லோரும் புகழ்கின்றனர் என்று வருத்தப்பட்ட வேளையிலே, கிருஷ்ணன் அர்ஜீனனை அஸ்தினாபுரம் பகுதி நோக்கி இரதத்தை விட்டார். அப்போது அவருடைய வலிமையால் அங்கு இருந்த மலையை தங்க மலையாக மாற்றினார், பிறகு, அர்ஜீனரிடம் இப்போது இந்த மலை உனக்குச் சொந்தம், நீ விரும்பும் வகையில் கொடையளிக்கலாம் என்றார், உடனே, அர்ஜீனன், ஊருக்குச் சென்று அனைத்து மக்களையும் வரச் செய்து, இந்த மலையில் இருந்து தங்கங்களை வெட்டி எடுத்துக் கொள்ளச் சொன்னார். உடனே மக்கள் மலை மலையாக அங்குக் குவிந்தனர். அனைவரும் அந்த இடத்தில் தங்கம் வெட்டுவதையே குறியாக இருந்தனர். அங்கு அர்ஜீனன் இருந்ததையோ, கிருஷ்ணன் இருந்ததையோக் குறித்துக் கவலைப் படவில்லை. அவர்களுக்கு தள்ளுமுள்ளு ஏற்படும் பிரச்சனையாகிவிடும் என்று சமமாகப் பகிர்ந்தளிக்க வேண்டும் என்று அர்ஜீனரும் சேர்ந்து அவர்களோடு சேர்ந்து வெட்டி சரிசமமாக பிரிக்க முயன்று களைப்புற்றார். ஆனாலும், அனைவருக்கும் கொடுத்து முடியவில்லை. களைப்போடு கிருஸ்ணரை நோக்கினார். பிறகு, கிருஷ்ணன், கர்ணனை வரவழைத்து, கர்ணனுக்கும் அதே போன்று மலையைப் பரிசளித்தார். கர்ணன் அந்த மலையைப் பார்த்தபிறகு கிருஷ்ணருக்கு நன்றி தெரிவித்து விட்டு வந்து அந்த ஊரில் உணவகம் வைத்திருந்த குடும்பத்தினை வரவழைத்தார். வரவழைத்து இந்த ஊரில் யாரும் பசியோடு இருக்கக்கூடாது. இந்த ஊரைக் கடந்து செல்பவர்களும் வயிறார சாப்பிட வேண்டும் அந்தப் பணியை நீங்கள் தான் செய்ய வேண்டும். இந்தத் தங்க மலை முழுவதும் உங்களுக்குத் தான் உங்கள் சேவைக்கான செலவினத்தை இந்த மலையை வெட்டி மேற்கொள்ளுங்கள் என்று ஆணையிட்டடர். கிருஷ்ணர் அர்ஜீனரைப் பார்த்தார். புhர்த்தாயா, நீ இதை எப்படி பகிர்ந்தளிப்பது என்று உன் அறிவின் மூலம் எண்ணினாய். ஆனால், எந்த வித சிரமம் இல்லாமல் மக்கள் நிலையில் இருந்து நிரந்தத் தீர்வினை உடனே வழங்கி விட்டான்” என்றார். இந்தக் கதை உண்மையில் நடந்ததா என்பது தெரியாது, நான் கேள்விப்பட்டது. அதிலும் நினைவில் இருப்பதை வைத்து எழுதியுள்ளேன். இதில் முக்கியமான விடயம் என்னவென்றால் வள்ளல் தன்மை தான் உடையவன் என்று எண்ணத்தில் கொடுப்பதில்லை. யோசிக்காமல் வருபவருக்குக் கொடுப்பதேயாகும். பல பேரும், தாங்கள் கொடை வழங்குகிறோம் என்ற பெயரில் கடமைக்கு செய்வதுண்டு. ஆனால், பெருமன்னர்கள் இருந்த போதும், ஏன் கடையேழு வள்ளல்கள் பெயர் பெற்றனர், அவர்கள் தானம் வழங்குகையில் எந்தச் சலனமும் மனதில் ஏற்றிக் கொள்ளவில்லை, பார்த்தனர், உணர்ந்தனர், அளித்தனர் அவ்வளவே. சில சமயம் முட்டாள் தனமாகக் கூடத் தோன்றும். ஏன் முல்லைக் கொடிக்கு ஒரு கம்பை நட்டால் அது அதனைப் பற்றி ஏறியிருக்குமே தேரை ஏன் கொடுத்தார் பாரி?, பாடலுக்காக பாணனுக்கு குறும்பொறை நாட்டையா எழுதி கொடுப்பான் ஓரி ? என்றெல்லாம் நமக்குத் தோன்றும், எந்தச் சலனமும் இல்லாமல் கொடுத்ததால் தான் அவர்கள் வள்ளல்கள் எனப் பெயர் பெற்றனர். இதனையே வள்ளுவர் குறிப்பிடுகிறார். 

உள்ளம் இலாதவர் எய்தார் உலகத்து 

வள்ளியம் என்னுஞ் செருக்கு -598 

கலைஞர் அவர்கள் தம்முடைய உரையில் மேற்கண்ட குறளுக்குக் குறிப்பிடுவதுபோல அள்ளி வழங்கும் ஆர்வம் இல்லாத ஒருவர் தம்மை வள்ளல் எனப் பெருமைப்பட்டுக் கொள்ள வழியே இல்லை என்கிறார். ஊக்கம் என்பது ஒருவருடைய உருவத்தை வைத்து அமையுமா? இல்லை, ஊக்கம் என்பது உள்ளார்ந்த உணர்வு, அது உருவத்தை வைத்து வருவதில்லை. ஆதலால், ஒருவரின் வெளித்தோற்றத்தை வைத்து இவர் ஊக்கமுடையவர் என்று அறுதியிட்டுக் கூற முடியாது. பின்வரும் குறளில் தெளிவாக ஐயன் குறிப்பிடுகிறார். 

பரியது கூர்ங்கோட்டது ஆயினும் யானை 

வெரூஉம் புலிதாக் குறின் -599 

என்னதான் யானையானது பெரிய உடலையையும் வலிமையான கூர்மையான தந்தங்களைக் கொண்டிருந்தாலும், மனதில் ஊக்கம் உடைய புலி தன்னைத் தாக்க வரும் போது அஞ்சி நிற்கும் என்கிறார். 

அடுத்தக் குறளில் 

உரமொருவற்கு உள்ள வெறுக்கை அஃதில்லார் 

மரம்மக்க ளாதலே வேறு-600 என்கிறார். 

ஊக்கமே இல்லாமல் வாழும் ஒருவரை எப்படி பொருத்துவது என்ற நிலையில் இந்த உதாரணத்தைக் கொடுத்துள்ளார். எல்லோரும் செல்வம் நோக்கி ஓடிக் கொண்டிருக்கின்றனர். ஆனால், உண்மையான செல்வம் என்பது அவர் கொண்டுள்ள ஊக்கமே ஆகும். அப்படி ஊக்கம் இல்லாமல் இருக்கும் ஒரு நபர் உருவத்தால் மனிதராக இருந்தாலும் அவர்கள் மரங்களைப் போன்றோரே ஆவார்.

தொடர்ந்து பார்ப்போம்...

குறிப்பு: இணைக்கப்பட்டுள்ள படங்கள் மற்றும் காணொலி ஆகியவற்றை செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பத்தில் உருவாக்கியுள்ளேன். பிழையிருப்பின்  மற்றும் தாமதத்திற்குப் பொறுத்துக் கொள்க.

நன்றி

https://www.youtube.com/@AAAInfotainment

தோப்பு

Wednesday, 1 October 2025

திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்-89:

திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்-89:
ஊக்கமுடைமை:
திருவள்ளுவர் அவர்கள் உடைமை என்னும் தலைப்பில் எழுதிய அதிகாரங்களைப் பற்றிப் பார்க்கின்றோம். கடந்த வாரங்களில் அன்புடைமை;, அறிவுடைமை, அடக்கமுடைமை, ஒழுக்கமுடைமை, பொறையுடைமை மற்றும் அருளுடைமை பற்றிப் பார்த்தோம். இந்த வாரம் ஊக்கமுடைமை என்னும் அதிகாரத்தைப் பற்றிப் பார்ப்போம்.
‘ஊக்கம்” என்பதை வெறும் ‘ஆற்றல்”அல்லது ‘முயற்சி” என்று விளக்கம் கொடுப்பது அதனுடைய முழுப் பரிமாணத்தையும் உணர்த்தாது. இவ்வதிகாரத்தில் ஐயன் வள்ளுவர் உணர்த்துவது போல ‘ஊக்கம்” என்பது மன எழுச்சி, உள்ளார்ந்த உந்துதல், அசைக்க முடியாத மனத்திடம் மற்றும் ஒரு செயலைச் செய்து முடிக்க வேண்டும் என்ற துடிப்பு ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு பன்முகக் கருத்தாகும். 
இவ்வதிகாரத்தின் மையக்கருத்து இந்த உள்ளார்ந்த உந்துதலே ஒரு மனிதன் கொண்டிருக்கக்கூடிய ஒரே உண்மையான, நிலையான மற்றும் வரையறுக்கும் ‘உடைமை” என்பதாகும். மற்ற எல்லாப் பொருள்சார் உடைமைகளும் இரண்டாம் பட்சமானவை மற்றும் இந்த ஊக்கத்தைச் சார்ந்தே அவற்றின் மதிப்பும் இருப்பும் அமைகின்றன. 
ஊக்கமுடைமை அதிகாரத்தை ‘அரசியல்” என்ற இயலில் வைத்ததன் மூலம் திருவள்ளுவர் ஒரு ஆழமான அரசியல் தத்துவத்தை முன்வைக்கிறார். ஒரு தலைவனின் அதன் விளைவாக ஒரு அரசின் உண்மையான பலம், கருவூலத்திலோ, படையிலோ அல்லது நிலப்பரப்பிலோ இல்லை. மாறாக, அதன் ஆட்சியாளரின் அசைக்க முடியாத மனவுறுதியிலும் ஊக்கத்திலுமே தங்கியுள்ளது. ஒரு அரசினுடைய மற்ற அனைத்து அதிகார வடிவங்களும் இந்த முதன்மையான பண்பின் விளைவுகளே. ஊக்கமில்லாத ஒரு தலைவன், தன்னிடம் உள்ள செல்வத்தையே காக்கும் ஆற்றல் இல்லாதவனாக இருப்பான், எனவே அவனால் நாட்டின் செல்வத்தையும் பாதுகாக்க இயலாது. ஆக, ஊக்கமுடைமை என்பது தனிமனித முன்னேற்றத்திற்கான ஒரு பண்பு மட்டுமல்ல, அது அரசாளுகையின் அடிப்படைக் கருவியுமாகும். 
உடையர் எனப்படுவது ஊக்கம் அஃதி;ல்லார்
உடையது உடையரோ மற்று -591 என்கிறார். மேலே சொல்லிய உதாரணம் இந்தக் குறளுக்குப் பொருந்தும். ஒருவர் பெற்றிருக்கின்றார் என்று சொல்லத்தக்க சிறப்புடையது ஊக்கமாகும், ஊக்கம் இ;ல்லாதவர் வேறு எதைப் பெற்றிருந்தாலும் அதை உடையவர் ஆவரோ என்கிறார் திருவள்ளுவர். அடுத்தக் குறளில் ஊக்கமுடையே பிரதானம் என்பதை வலியுறுத்துகிறார்.
உள்ளம் உடைமை உடைமை பொருளுடைமை
நில்லாது நீங்கி விடும் -592
ஒருவருக்கு அவர் கொண்டிருக்கும் ஊக்கமே நிலையான செல்வம் ஆகும், மற்றைய செல்வங்கள் எல்லாம் நிலைத்திருக்காமல் ஒரு காலத்தில் நீங்கி விடக் கூடியது என்கிறார். 
எவர் ஒருவர் மிகுந்த ஊக்கத்துடன் இருக்கிறாரோ, அவர் தன்னுடைய எந்த இழப்பையும் கடந்து செல்ல இயலும். மிகுந்த ஊக்கம் உடையவன், துணிந்து முடிவு எடுக்கக் கூடியவராக இருப்பார். தான் பணிபுரியும் இடத்தில், தனக்கு உகந்தது அல்ல என்பதை உணர்ந்தார் என்றால், துணிந்து தனக்குப் பிடித்த இடத்திற்கு தற்போது வாங்கும் ஊதியத்தை விட அதிக ஊதியத்திற்கு செல்லக் கூடும். அல்லது தொழில் துவங்கக் கூடும். துவண்டு உட்கார்ந்து விட மாட்டார். தான் அனைத்தையும் இழந்து விட்டோம் என்று தலையில் கை வைத்துக் கொண்டும் உட்கார மாட்டார். வெகுவிரைவில் எப்படி முன்னேற வேண்டும் என்று அதற்காக உழைப்பவராக இருப்பார். இக்கருத்தை வலியுறுத்தி ஐயன் அடுத்தக் குறளி;ல் வலியுறுத்துகிறார். 
ஆக்கம் இழந்தேமென்று அல்லாவார் ஊக்கம்
ஒருவந்தம் கைத்துடை யார் -593 என்கிறார். 
உறுதியான ஊக்கத்தையே தம்முடைய கைப்பொருளாகப் பெற்றவர்கள், தன்னுடைய செல்வத்தை இழந்த போதும், எல்லாவற்றையும் இழந்து விட்டோமே என்று நினைத்து வருந்த மாட்டார்கள். 
அடுத்தக் குறளில் சொல்வது போல, ஒருவர் மிகுதியான ஊக்கம் இருக்கிறது என்றால், அவர் துணிந்து முடிவெடுப்பார், துணிந்து முடிவெடுப்பவருக்கு, வெற்றி எளிதில் வயப்படும், ஏனெனில், அவர் சொல்லிய வண்ணம் செயல்வீரராக இருப்பர் என்பதை வலியுறுத்துகிறார். 
ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா
ஊக்க முடையா னுழை -594 என்கிறார். அதாவது தளராத ஊக்கம் உடையவர்களிடத்தினிலே ஆக்கம் தானே வந்து அவர் இருக்கும் இடத்திற்கு வழி கேட்டுக் கொண்டு போய் அவரிடம் சென்று நிலையாகச் சேர்ந்திருக்கும் என்கிறார். 
அடுத்து வருவது, நமக்கு நன்கு பரிச்சயமான குறள்
வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத் தனையது உயர்வு -595 என்கிறார். தாமரைக் குளத்தில் நீரின் அளவு எந்த அளவிற்கு அதிகமாகிக் கொண்டிரக்கிறதோ அதே அளவு, நீர்ப்பூக்களின் தண்டின் நீளமும் உயரமும், அது போலவே, மக்களுடைய உயர்வின் அளவும் அவருடைய ஊக்கத்தின் அளவினதே ஆகும் என்கிறார்.

தொடர்ந்து பார்ப்போம்...
குறிப்பு: இணைக்கப்பட்டுள்ள படங்கள் மற்றும் காணொலி ஆகியவற்றை செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பத்தில் உருவாக்கியுள்ளேன். பிழையிருப்பின்  மற்றும் தாமதத்திற்குப் பொறுத்துக் கொள்க.
நன்றி

https://www.youtube.com/@AAAInfotainment
தோப்பு