Saturday, 10 January 2026

திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்-103: திருக்குறளில் அரசியல்:

திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்-103:
திருக்குறளில் அரசியல்: 
திருக்குறளில் அரசியல் என்ற தலைப்பில் பார்த்து வருகிறோம், அரசியலில் குற்றங்கூறாமை என்ற அதிகாரத்தின் முற்பகுதியை கடந்த வாரம் பார்த்தோம். இந்த வாரம் அதன் பிற்பகுதியைப் பார்ப்போம். 
நாம் சரித்திர நாவல்கள் அல்லது மிகப் பெரிய ஆளுமைகளைப் பற்றி படித்திருப்போமானால் அவர்களின் குறிப்பிடத்தக்க குணாதிசயத்தையும் பார்த்திருப்போம். அது என்னவென்றால், சுய விழிப்புணர்வு (Self Awareness) சுயத்தைத் தெரிந்திருத்தல், அப்படி இருக்கும் போதுதான் தன்னைப் பற்றிய மற்றவர்களின் விமர்சனம் மற்றும் பார்வைகளை சீர்தூக்கி நல்லது எது? அல்லது எது? என்று ஆராய முடியும். அப்படித் தன்னை முழுமையாக அறிந்தவரால் மற்றவரின் உணர்வுகளையும் நடவடிக்கைகளையும் எளிதில் புரிந்து கொள்ள இயலும். இந்த உண்மையினை 2000 ஆண்டுகளுக்கு முன்னரே ஐயன் எடுத்துரைத்துள்ளார். 
தன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றங் காண்கிற்பின் 
என்குற்ற மாகும் இறைக்கு -436 என்கிறார். 
முதலில் தன்னுடைய குற்றத்தை நீக்கிப் பிறகு, பிறருடைய குற்றத்தை ஆராயவல்ல ஆற்றல் மிக்க அரசனுக்கு எந்த குற்றமும் வராது என்கிறார் திருவள்ளுவர். 
சவேரியார் என்ற திருத்தூதர் ஒருமுறை இப்படிச் சொல்கின்றதாக ஒரு தேவாலயத்தில் பார்த்தேன் ‘ஒருவன் உலகெல்லாம் சுற்றித் திரிந்தாலும் தன் ஆன்மாவை இழந்தால் என்ன பயன்?” என்கிறார். அவர் கடவுள் மீது நம்பிக்கைக் கொள்ள வேண்டும் என்று அப்படித் தன் கருத்தினை வெளிப்படுத்துகிறார். நான் என் நடைமுறையைப் பார்த்திருக்கிறேன். சுpலர் பெரும் பணக்காரர்களாக இருப்பர், மக்களை வஞ்சித்தும், அதிகாரத்தையும் , ஆக்கிரமிப்பையும் பயன்படுத்தி வறியவர்களை துன்புறுத்தியும் சொத்து சேர்த்து வருகின்றனர். அதுமட்டுமில்லாது தான் சேர்த்த செல்வத்தினை அனுபவிக்க மனமும் இல்லாமல் வழியும் இல்லாமல் வாழ்ந்து வருகின்றனர். சில வருடங்களுக்கு முன்னர், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த ஆய்வில் உயர் அதிகாரி ஒருவர், தன்னுடைய கழிப்பறையில் பணத்தை மறைத்து வைத்துக் கட்டியுள்ளது பெரிய அதிர்ச்சி அளித்தது, அப்படி அந்தப் பணத்தை கழிப்பறையில் மறைத்து வைப்பதால் யாருக்கு என்ன பலன்? இப்படித்தான் சில நாட்களுக்கு முன்னர் மிக உயர்பாக மதிக்கத் தக்கப் பொறுப்பில் உள்ள நீதிபதி அவர்கள் பணத்தினை கட்டு; கட்டுகளாக எரிhத்துள்ளர். 
இதனையே முன்பே உணர்த்தியிருக்கிறார் நமது செந்நாப்போதர்...
செயற்பால செய்யா திவறியான் செல்வம்
உயற்பால தன்றிக் கெடும் -437 என்கிறார். அதாவது, செல்வத்தால் செய்யத்தகுந்த நன்மைகளைச் செய்யாமல், பொருள் மீது கொண்ட பற்றினால், சேர்த்து வைப்பவனுடைய செல்வமானது யாருக்கும் பலனிற்றி வீணே கெட்டு அழியும். 
மேற்கூறியவாறு யாருக்கும் பயன்படாமல் செல்வத்தை வீணாக்குதல் தனிப் பெருங்குற்றம் என்று பின்வரும் குறளில் குறிப்பிடடுகிறார்
பற்றுள்ளம் என்னும் இவறன்மை எற்றுள்ளும் 
எண்ணப் படுவதொன் றன்று -438
எல்லாக் குற்றங்களையும் விட மிகப் பெரிய குற்றமாகக் கருதப்படுவது பொருள் சேர்ப்பதில் ஆர்வங்கொண்டு மற்றவர்களுக்கு ஈயாமல் வாழ்வதுதான் என்கிறார். 
முந்தைய செயலை விடக் கொடியது எது என்பதனை அடுத்தக் குறளில் வழங்குகிறார் திருவள்ளுவர். 
வியவற்க எஞ்ஞான்றும் தன்னை நயவற்க
நன்றி பயவா வினை -439
எப்போதும் தன்னையே மிக உயர்வாக எண்ணி வியந்து அகங்காரம் கொண்டு பேசக் கூடாது. நாட்டுக்கும் ஆட்சிக்கும் நன்மை தராத செயல்களைச் செய்யக் கூடாது என்கிறார். 
ஏற்கனவே பலமுறை குறிப்பிட்டுள்ளபடி எமோஷனல் இன்டலிஜென்ஸ் ஒரு நபருக்கு குறிப்பாகத் தலைவராக இருப்பவருக்கு அவசியம் என்கிறார் திருவள்ளுவர் அடுத்தக் குறளில். 
காதல காதல் அறியாமை உய்க்கிற்பின்
ஏதில ஏதிலார் நூல் -440
ஏவர் ஒருவர் தன்னுடைய விருப்பத்தைப் பிறர் அறியாத வகையில் காத்து வருகிறாரோ நடைமுறைப்படுத்துகிறாரோ அவரை அழிக்க எண்ணுபவரின் எண்ணம் பலிக்காமல் போய்விடும் என்கிறார். 
தாமதத்திற்குப் பொறுத்துக் கொள்க
தொடர்ந்து பார்ப்போம்...


குறிப்பு: இணைக்கப்பட்டுள்ள படங்கள் மற்றும் காணொலி ஆகியவற்றை செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பத்தில் உருவாக்கியுள்ளேன். பிழையிருப்பின் பொறுத்துக் கொள்க.

நன்றி

https://www.youtube.com/@AAAInfotainment

தோப்பு

No comments:

Post a Comment