Sunday, 20 April 2025

திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்-65:

திருக்குறள் வழி நின்று திருவள்ளுவரை அறிதல்-65:

தொழிலாளர் ஒற்றுமைக்கு வள்ளுவர் குறள்கள்:
நாளொன்றுக்கு 18 மணி நேரம் வேலை வாங்கும் முதலாளித்துவ கொடுமை இருந்தது, ‘உலகத் தொழிலாளர்களே, ஒன்று சேருங்கள், நீங்கள் இழப்பதற்கு எதுவுமில்லை, கை விலங்குகளைத் தவிர” என்று முழக்கமிட்டார் காரல் மார்க்ஸ், இதனை
‘இகலெதிர் சாய்ந்தொழுக வல்லாரை யாரே
மிகலூக்கும் தன்மை யவர் -855 என்று ஒற்றுமையை யாராலும் வெல்ல முடியாது என்கிறார். 
காக்கை கரவா கரைந்துண்ணும் ஆக்கமும்
அன்னநீ ரார்க்N கஉள -527 என்று முழக்கமிடுகிறார். காக்கைப் போலத் தொழிலாளர்கள் ஒன்றுபட்டதால் தான் 8 மணி நேர வேலை,  8 மணி நேர பொழுபோக்கு, 8 மணி நேர ஓய்வு கோரிக்கை போராட்டங்கள் வெற்றி பெற்றது. 
அழச்சொல்லி அல்லது இடித்து வழக்கறிய
வல்லார்நட்பு ஆய்ந்து கொளல் -795
என்னும் குறளில் தொழிலாளர்களின் சமூக அவலங்களை இடித்துரைக்கும் உலகப் பெரியோர்களின் தொடர்பைப் பற்றுக என்றும் குறள்கள் 441, 442, 447 என்பதன் வாயிலாகவும் வழிகாட்டும் வள்ளுவர் ‘உலகின் முதல் சமூக சீர்த்திருத்தவாதி” என்று போற்றப்படுகிறார். 
உழைப்போடு ஏற்படக்கூடிய ஆபத்துகள் வழக்கமானது எனத் தொழிலாளி கருத வேண்டும் என்பதனால் இழப்பீடு தரப்படவி;ல்லை. இதனை,
அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய்
தந்நோய்போல் போற்றாக் கடை -315
எனக் கூறும் திருவள்ளுவர் அவர்கள் 316, 317, 318, 319 மற்றும் 320 குறள்களின் வாயிலாகவும் பிற உயிர்களை துன்பம் செய்யக் கூடாது என்று  அறிவுறுத்துகின்றார். 
இத் தெய்வப்புலவரின் வழிநின்றே ‘வேலை செய்கின்ற போது நிகழக் கூடிய விபத்தினால் விளைகின்ற சேதங்களுக்காக, தொழிலாளருக்கு வேலையளிப்போன் இழப்பீடு தர வேண்டும்” என்று இந்தியத் தொழிலாளர் இழப்பீட்டுச் சட்டம் 1923 ஆம் ஆண்டு இயற்றப்பட்டு சமூக நீதி பாதுகாக்கப்பட்டது. 
திருவள்ளுவர் கூறும் தொழிலாளி முதலாளி உறவுகள்:
முதலாளி தொழிலாளி உறவுகள் நல்லுறவாக அமையப் பெறின் தொழில்வளம் பெருகும், அமையப் பெறாவிடின் தொழில் நலிவுறும் என்பதனை
அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் -72
அன்போடு இயைந்த வழக்கென்ப ஆருயிரிக்கு – 73
அன்புஈனும் ஆர்வம் உடைமை அதுஈனும் - 74 என்னும் குறள்களில் முதலாளி, தொழிலாளி உறவுகள் பற்றுள்ளத்தோடு இணைந்திருப்பதன் பயனை எடுத்தியம்புகிறார் திருவள்ளுவர். 
மேலும்,
என்பிலதனை வெயில் போலக் காயுமே -77
அன்பகத்தில்லா உயிர் வாழ்க்கை வன்பாற்கண்-78 என்னும் குறள்களிலும் 78, 79 குறள்களிலும் முதலாளி தொழிலாளி உறவுகள் நல்லுறவாக அமையப் பெறாத நிலையில் விளையும் சீர்கேடுகளையும் விளக்குகின்றார். 
வள்ளுவர் நேசிக்கும் முதலாளி தொழிலாளியின் கடமைகள்:
உம்மைப் போலவே அயரையும் நேசி என்கிறார் இயேசு கிறிஸ்து. முதலாளி தொழிலாளி ஒருவொருக் கொருவர் அண்டையிலிருப்பவர்கள். ஒருவர் இன்னொருவர் விரும்பியளிக்கும் ஒத்துழைப்பை நாடிப் பெற வேண்டும் என்றார் மகாத்மா காந்தி. இதனை முன்னரே
கடனறிந்து காலம் கருதி இடனறிந்து
எண்ணி உரைப்பான் தலை – 687
இறுதி பயப்பினும் எஞ்சாது இறைவற்கு 
உறுதி பயப்பதால் தூது – 690
என்கிறார் வள்ளுவர். மேலும், 685, 686, 688,689 என்ற குறள்கள் வாயிலாகவும் தொழிலாளர்கள், முதலாளிக்கு ஈன வேண்டிய ஒத்துழைப்பை நல்குகிறார். மேலும்,
முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு
இறை யென்று வைக்கப்படும் -388 என்று முதலாளி தொழிலாளருக்கு ஆற்ற வேண்டிய கடமைகளைக் குறள்கள் 386, 387, 389, 390 வாயிலாகவும் எடுத்துக் காட்டுகின்றார். 

தொடர்ந்து பார்ப்போம்...
குறிப்பு: இணைக்கப்பட்டுள்ள படங்கள் மற்றும் காணொலி ஆகியவற்றை செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பத்தில் உருவாக்கியுள்ளேன். பிழையிருப்பின் பொறுத்துக் கொள்க.
நன்றி

No comments:

Post a Comment