தொழிலாளர் சங்கத்தின் முன்னோடி திருவள்ளுவர்:
‘தொழிலளார்களுக்கும், முதலாளிகளுக்கும் இடையே உள்ள உறவுகளை ஒழுங்கு முறைப்படுத்துவதற்கு உருவாக்கப்படும் அமைப்பு தொழிற்சங்கம்” எனச் சட்டத்தில் பிரிவு 2(லீ) வரையறை செய்கிறது. இதனை,
சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபால்
கோடாமை சான்றோர்க் கனி – 118 என்னும் திருக்குறளில் நடுவுநிலைமை போற்றுவதே தொழிற்சங்கம் என்பதன் அழகாகும் என்று உரைக்கும் திருவள்ளுவர் தொழிற்சங்கத்தின் முன்னோடி என்றால் மிகையாகாது!. வள்ளுவரின் இக்குறளின் வழிநின்று 1926ஆம் ஆண்டு இந்தியாவில் தொழிற்சங்கங்கள் சட்டம் இயற்றப்பட்டன.
தொழிலாளர் நலனிற்கு வள்ளுவரின் சட்டங்கள்:
தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களின் வேலை நிலைமைகள், வேலை நேரம், விடுமுறை நாட்கள், உடல் ஆரோக்கியம், ஊதியக் குறைவு, உழைப்பு சுரண்டல் போன்ற செயல்களில் தொழிலாளர்களுக்கு நடந்த கொடுமைகளுக்கு எதிராக பாரதிதாசன் கொதிப்படைந்து,
‘கந்தை யணிந்தோம் இரு
கையை விரித்தெங்கள் மெய்யிiணுப் போர்த்தோம்”
‘வதிக்கிப் பிழிந்தே சொத்தை
வடி கட்டி எம்மைத் துடிக்க விட்டீரே!”
‘கப்பல்களாக இனித்
தொழும்பர்களாக மிதித்திட வேண்டாம்”
என்று பாடியுள்ளார்.
ஆனால், அன்றே திருவள்ளுவர் தொழிலாளர் கொடுமைகளை களைந்து வாழ்க்கை நலனைப் பாதுகாக்கும் சட்டத்தின் முன்னோடியாக செயல்பட்டுள்ளார்.
‘பொதுநோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின்”-528 தொழிலாளரின் அவரவர் சிறப்பை நோக்க வேண்டும் எனவும், ‘நாடொறும் நாடி முறைசெய்யா மன்னவன்-553” முதலாளி தொழிலாளரின் நன்மை தீமைகளை நாள்தோறும் ஆராய வேண்டும் எனவும், ‘குடிதழீஇக் கோலோச்சும் மாநில மன்னன்-544” தொழிலாளர்களை அன்போடு நடத்த வேண்டும் எனவும், ‘இறைகாக்கும் வைபக மெல்லாம் அவனை-547” தொழிலாளர்களை நீதி நேர்மையுடன் கையாள வேண்டும் எனவும், திருக்குறளில் யாத்துள்ளார். மேலும், குறள்கள், 542, 548,549 என்பதன் வாயிலாக முதலாளி தொழிலாளரின் நல வாழ்வில் செங்கோல் செலுத்தும் ஆட்சி முறைமையை விளக்குகின்றார். நம் அரசும், வள்ளுவப் பெருந்தகையின் வழியைப் பின்பற்றியே, தொழிலாளர்களின் நலவாழ்வை உறுதி செய்யும் அரணாக நின்று, தொழிற் சாலைகள் சட்டத்தை 1948 ஆம் ஆண்டு இயற்றியுள்ளது.
சுருக்கமாக ‘பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ்சால மிகுத்துப் பெயின்-475” என்று முதலாளிகளை எச்சரிக்கை செய்யும் நான்முகனார், தனது திருக்குறள் மூலம் ‘உலக வளர்ச்சியைத் தீர்மானிக்கும் தொழிலாளர்களின் நலம் காப்போம்” என்று தெளிவுபடுத்துகிறார்.
நன்றி:
திருமிகு. சி.லதா, முதுகலை ஆசிரியர், வரலாறு, அரசினர் மேல்நிலைப்பள்ளி பூவாளுர்,திருக்குறள் உலக நூல் திருவள்ளுவரின் தொழிலியற் சிந்தனைகள், தொகுத்தவர் முனைவர் தாமரை, பூங்கோதைப் பதிப்பகம், 2025
தொடர்ந்து பார்ப்போம்...
குறிப்பு: இணைக்கப்பட்டுள்ள படங்கள் மற்றும் காணொலி ஆகியவற்றை செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பத்தில் உருவாக்கியுள்ளேன். பிழையிருப்பின் பொறுத்துக் கொள்க.
நன்றி




