என்னுடைய சிறு வயது பிராயத்திலே நான் கண்ட, விளையாண்ட பல விளையாட்டுகள், இப்போது பார்க்க முடிவதில்லை இன்றைய குழந்தைகளை அதிகம் தெருக்களில் விளையாடுவதை பார்ப்பது அரிதான விஷயமாக இருக்கிறது. குறிப்பாக நகர்ப்புறங்களில்! மேலும் விளையாட்டுகளும் அழிந்து கொண்டு வருகின்றனவோ என்ற எண்ணமும் என்னுள் எழுகிறது. ஆதலால் முடிந்தவரை விளையாடிய, கேள்விப்பட்ட, படித்த விளையாட்டுகளை இங்கே ஆவணப்படுத்தலாம் என்று எண்ணுகிறேன். உங்களுடைய ஒத்துழைப்பும் இருக்கும் என்கிற நம்பிக்கையில். நான் எழுதுகின்ற கட்டுரைகள் சம்பந்தமான கூடுதல் தகவல்கள் அல்லது புகைப்படங்கள் இருந்தால் நீங்களும் பகிர்ந்து கொள்ளலாம்.
நான் பழைய விளையாட்டுகளை ஆவணப்படுத்த முக்கிய காரணம்:

-K.I.AROON JOSHVA RUSEWELT
நான் பழைய விளையாட்டுகளை ஆவணப்படுத்த முக்கிய காரணம்:
- விளையாட்டுகள் வாழும் இடம், வாழும் அமைப்பு முறை, கலாச்சாரம், கிடைக்கும் பொருட்கள், மறுசுழற்சி, சுற்றுசூழல் மேம்பாடு போன்றவற்றோடு பின்னிப்பிணைந்து இருந்தது.
- விளையாட்டுகள் குழந்தைகளின் கற்பனை திறனை மேம்படுதுகிறது (பட்டம் அல்லது காத்தாடி அவர்களே சுயமாக செய்வர்)
- விளையாட்டுகள் சுயமாக கற்றுக்கொள்ள உதவுகிறது.
இன்னும் இருக்கின்றன நிறைய விடயங்கள் .... இப்போதைக்கு குழந்தைகள் தினத்தினை முன்னிட்டு சில புகைப்படங்கள் மட்டும்... பழையதை நினைவு படுத்த... நன்றி
-K.I.AROON JOSHVA RUSEWELT












No comments:
Post a Comment